*ஈசன் உபதேசம்...*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:38 | Best Blogger Tips


*1, ஓமாம்புலியூர் –*
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
*2, உத்திரகோசமங்கை*
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
*3, இன்னம்பர் –*
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
*4, திருவுசாத்தானம்*
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
*5, ஆலங்குடி*
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
*6, திருவான்மியூர்*
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
*7, திருவாவடுதுறை*
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
*8, சிதம்பரம்*
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
*9, திருப்பூவாளியூர்*
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
*10, திருமங்களம்*
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
*11, திருக்கழு குன்றம்*
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
*12, திருமயிலை*
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
*13, செய்யாறு*
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
*14, திருவெண்காடு*
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
*15, திருப்பனந்தாள்*
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
*16, திருக்கடவூர்*
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
*17, திருவானைக்கா*
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
*18, மயிலாடுதுறை*
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
*19, திருவாவடுதுறை*
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
*20, தென்மருதூர்*
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
*21, விருத்தாசலம்*
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
*22, திருப்பெருந்துறை*
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
*23, உத்தரமாயூரம்*
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
*24, காஞ்சி*
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
*25, திருப்புறம்பயம்*
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
*26, விளநகர்*
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
*27, திருத்துருத்தி*
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
*28, கரூர்*
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
*29, திருவோத்தூர்*
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்
குரு வாழ்க
குருவே வாழ்க
குருவே நன்றாய் வாழ்க