பெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்வது அனுமதிக்க படுவது இல்லை...

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:42 | Best Blogger Tips
எந்த ஒரு காரியத்திட்கும் காரணம் ஒன்று நிச்சயமாக இருக்கும்.. பிரபஞ்சத்தில் எந்த ஒரு காரியம் நடைபெறினும் அதற்கான காரணம் நிச்சயம் உண்டு..சில காரணங்கள் பாமர மக்களால் விளங்கிக்கொள்ளகூடியதாக இருக்கும்....சிலவற்றை பண்டிதர்களாலும்,படித்து தெளிவடைந்த சிலரால்மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக காரணங்கள் இல்லை என்று எண்ணுவதோ அல்லது காரணம் புரியாமல் செய்வதோ தவறானதொரு செயலாகும்...
அந்த தவறை நம்மில் 99 சதவீதமானோர் புரிந்த வண்ணம் உள்ளனர்.எம்மால் எல்லா காரியங்களுகும் காரணங்களை புரிந்து கொள்ள இயலாது எனினும் எம்மால் புரிந்து கொள்ள கூடிய வகையில் உள்ள எளிய விடயங்களை தெரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா???

எல்லா மதங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விஞ்ஞானத்தை அடியாக கொண்டே பயணிக்கிறது...எனினும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை...இந்துமதத்தின் எல்லா சம்பிரதாயங்களும் ..எதோ ஒரு வகையில் அறிவியலுடன் சேர்ந்தே பயணிக்கும்....
ஆலயங்கலின் கோபுரங்களின் அறிவியல் தத்துவம் இதற்கு முந்தய பதிவில் இடம்பெற்றது....பதிவுகளை மீள பாருங்கள்....

அவ்வாறான இந்து மதத்தின் சில அறிவியல் சார் விடயங்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

1.பெண்களை ஆலயங்களின் கருவறையிலோ அல்லது சாதாரனமாகவோ மந்திரங்கள் அதாவது சமஸ்கிருத மந்திர உச்சாடணம் செய்யவோ, குருக்கள் அல்லது பிராமண அந்தஸ்து கொடுக்கவோ இந்து மதம் அனுமதிப்பதில்லை...

உண்மையில் மந்திரங்கள் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சார்ந்த்து மட்டும் அல்ல..அது இயல்பியலுடனும் உரசிச்செல்கிறது..
மந்திர ஒலி என்பது அலைகளின் அதிர்வெண்(Frequency) சார்பாக உருவாக்க பட் டது. ஒவ்வொரு மந்திரங்களும் ஒவ்வொரு அதிர்வெண்ணில் அமையப்பெற்றது.மந்திர ஒலி என்பது ஒவ்வொரு சுருதியில் அதாவது மீடிறனில் அமைந்து இருக்கும்...அம்மந்திரங்கள் காதால் கேட்கும் போது கடத்தப்படும் அதிர்வுகளை விட வாயினால் ஜெபிக்கும் போது உடலை ஊடுவிச்செல்லும் அதிர்வு தாக்கம் அதிகம் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண விடயம்....இந்த அடிப்படை காரணத்தை முதலாக கொண்டே பெண்கள் மந்திரங்கள் ஜெபிக்கவோ அல்லது பிராமணர்களாகவோ அனுமதிக்க படுவதில்லை...ஏனெனில் ஆண்களை விட பெண்களின் நிலை உடல் மற்றும் மன ரீதியாக வலிமை குறைந்தது...ஆகவே பெண்கள் இம்மந்திரங்களை ஜெபிக்கும் போது அதிக அளவில் தாக்க படுவர்..அதாவது பெண்களின் மார்பகங்கள்,மற்றும் கருப்பைகள்,போன்ற பகுதிகள் இந்த அதிர்வுகளை தாங்க இயலாது போகலாம்..அதனால் மலட்டு தன்மை மற்றும் பெண்மை சார்ந்த பல தாக்கங்கள் உருவாகலாம்..அதை விட பெண்கலின் மாதவிடாய் காரணங்களினால் மாதத்தின் எல்லா நாட்களிலும் அவர்களால் பணியை தொடர இயலாமல் போகலாம்....இத்தகைய காரணங்களினாலேயே பெண்கள் அனுமதிக்க படுபவது இல்லை...


அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.

2.பெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்வது அனுமதிக்க படுவது இல்லை...



இதற்கும் முன்பு குறிப்பிட்ட அதிர்வு சார் காரணம் பொருந்தும்...சாதாரண காலங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல்நிலை பலவீனமாக காணப்படும்..அவ்வாறான பலவீனமான சந்தர்ப்பங்களில் ஆலய மந்திர ஒலி அதிர்வுகள் காதினால் கேட்கும் போதே பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதே பிரதான காரணம்...அதை விட ஆலய மணி ஒலி,மற்றும் இரைச்சல்கள் பெண்களை எரிச்சல் அடையச்செய்யலாம்....அத்துடன் அவ்வாறான நேரங்களில் அலைச்சல்களை தவிர்பதற்காகவே பெண்கள் ஆலயங்களுக்கு செல்வது தடுக்கபட்டது..ஆனால் காலப்போக்கில் துடக்கு என்னும் சொல்லை மட்டும் வடித்து எடுத்து கொண்ட மக்கள் உண்மையான காரணங்களை தவற விட்டனர்....