பிட்டுக்கு மண் சுமந்த கடவுள் - உண்மையா? பொய்யா?

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:38 | Best Blogger Tips


''வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடிய நேரம். அதனால் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என அரசர் ஆணையிட இறை பற்றுக் கொண்ட பிட்டு விற்கும் கிழவி தனக்கு ஆள் இல்லையே என வருத்தமடைந்தாள்.

இதையடுத்து இறைவனே கூலி ஆளாக வந்து, பிட்டு தந்தால் மண் சுமப்பதாகக் கூறி அக்கிழவி சார்பில் கூலியாளாகச் சென்றார். ஆனால், சரிவர வேலைசெய்யாமல் அங்கு கூலியாள் தூங்குவதைக் கண்ட அரசன், பிரம்பால் கூலியாளை முதுகில் அடித்தார்.

அப்போது அரசருக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. இதன் பிறகே, கூலியாளாக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அரசர் இறைவனை வணங்கினார். அப்போது, அக்கிழவியை வாழ்த்திய இறைவன், மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளியதாகப் புராணம்.''

இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதை விட, இதில் இருக்கும் கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள தவறக் கூடாது. இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமே தலைச்சிறந்த ஒன்றாகும்.

கூலியாட்களை அடிமையாக நடத்தும் அரசர்களுக்குப் பாடம் புகட்ட, அதுமட்டுமல்ல ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால்.. இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையே இந்த கதை எடுத்துக் காட்டுகிறது. இப்போது இருக்கும் சூழலில் இக்கதை ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
பிட்டுக்கு மண் சுமந்த கடவுள் - உண்மையா? பொய்யா?

''வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடிய நேரம். அதனால் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என அரசர் ஆணையிட இறை பற்றுக் கொண்ட பிட்டு விற்கும் கிழவி தனக்கு ஆள் இல்லையே என வருத்தமடைந்தாள்.

இதையடுத்து இறைவனே கூலி ஆளாக வந்து, பிட்டு தந்தால் மண் சுமப்பதாகக் கூறி அக்கிழவி சார்பில் கூலியாளாகச் சென்றார். ஆனால், சரிவர வேலைசெய்யாமல் அங்கு கூலியாள் தூங்குவதைக் கண்ட அரசன், பிரம்பால் கூலியாளை முதுகில் அடித்தார்.

அப்போது அரசருக்கே முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. இதன் பிறகே, கூலியாளாக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அரசர் இறைவனை வணங்கினார். அப்போது, அக்கிழவியை வாழ்த்திய இறைவன், மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளியதாகப் புராணம்.''

இது உண்மையா? பொய்யா? என்று ஆராய்வதை விட, இதில் இருக்கும் கருத்துகளை நாம் ஏற்றுக் கொள்ள தவறக் கூடாது. இது போன்ற கருத்துகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவமே தலைச்சிறந்த ஒன்றாகும்.

கூலியாட்களை அடிமையாக நடத்தும் அரசர்களுக்குப் பாடம் புகட்ட, அதுமட்டுமல்ல ஒரு நாட்டை ஆளும் பெரிய பதவியில் உள்ளவர்கள் தன் மக்களின் வயிற்றில் அடித்தால்.. இறுதியில் அது அவர்களுக்கே வினையாக வந்து முடியும் என்பதையே இந்த கதை எடுத்துக் காட்டுகிறது. இப்போது இருக்கும் சூழலில் இக்கதை ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.