❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👩‍❤️‍👨அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை👩‍❤️‍👨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 2:29 PM | Best Blogger Tips

Buy South Indian Food Art, Tamil Painting, Canvas Acrylic Painting, Kerala  Food Painting, Onam Sadhya, Idli Vada Art, Filter Coffee, Kannada Art ... இட்லி பற்றி உங்கள் கருத்து என்ன? - Quora

1. இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்

தோசை - தமிழ் விக்சனரி 

2.புரட்டி போட்டாலும் தோசை

மாதிரிபொறுமையாஇருக்கனும்

poori recipe, பூரி செய்முறை

3. உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள்? - Quora

 

4. ஓட்டை விழுந்திருந்தாலும் வடை

மாதிரி கவர்ச்சியா இருக்கனும்

 ரவா உப்புமா மிருதுவாக இருக்க இப்படி செஞ்சு அசத்துங்க! Secret of Soft Upma  in tamil| Breakfast recipe

5. உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்

 Sweet Spicy Tasty: Kovil Ven Pongal | Khara Pongal | South Indian Khichdi

6. பொங்கல் மாதிரி குழைவா பேசனும்

 

வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil) இவருடைய ரெசிபி  Muniswari G- குக்பேட்

7.அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்

 சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி....?

8. பிரியாணி மாதிரி பிரபலமா இருக்கனும்

 சப்பாத்தி குருமாவை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. வீட்டுல இருக்குறவங்க  கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. | Chapathi Kurma: How To Make a Chapati Kurma  Recipe - Tamil BoldSky

9.சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்

 5 Unique Jalebi Recipes For Mid-Week Indulgence - NDTV Food

10. ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.

Premium Photo | Pasta with chili peppers

11. நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது.

Classic Cheese Pizza

12. பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது

 How to make spongy appam with yeast, Kerala appam recipe - Edible Garden

13. ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது

 

இட்லி, தோசைக்கு பதிலா இப்படி புட்டு பண்ணுங்க: ரொம்ப ஈசி

14. புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது

 

கேசரி மிருதுவாக இருக்க இதுதான் ரகசியம்! Secrets of Kalyana Rava Kesari | 1M  SPECIAL💥 |Giveaway Day-7 - YouTube

15. கேசரி மாதிரி இனிமையா பேசனும்

 

தமிழ் புத்தாண்டு சிறப்புமிக்க 4 புதிய வகை பாயாசம்! | Tamil New year Special  4 new types of payasam!

16.பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்

 

Appalam,ருசியான அப்பளம் Appalam உங்கள் மீள் டைமை திருப்தியாக்கும். - here  are the tastiest appalam with special grandma's seasoning-fea-ture -  Samayam Tamil

17.அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்

 Aviyal | Kerala Style Avial - The Big Sweet Tooth

18. அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்

 

19.சோறு மாதிரி மனசு நிறைந்து இருக்கனும்.

கல்யாண வீட்டு நெய் சோறு இவருடைய ரெசிபி Asma Parveen- குக்பேட்

20.புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்

Tropical Fruit Salad {Kiwi, Mango & Pineapple} - Feel Good Foodie

21.ஐஸ்_கிரீம் மாதிரி cool இருக்கனும்

Ice Cream: விஷமாகும் மாறும் ஐஸ் கிரீம்... ஒரே ஒரு எலுமிச்சையால் அம்பலமாகும்  உண்மை - மனிதன்

22.டிகிரி_காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்

MR & SONS_MJR KUMBAKONAM Filter Coffee - 500gm : Amazon.in: Grocery &  Gourmet Foods

23.ஊறுகாய் மாதிரி காரமா கோபப்டக்கூடாது.

 Uppu Athigama Saapittal,உப்பை நாம இவ்ளோ நாளா தப்பு தப்பா தான் யூஸ்  பண்ணிருக்கோம்... சரியா எப்படி யூஸ் பண்ணணும்? - common ways people use salt  incorrectly in their food in tamil ...

24.உப்பு" மாதிரி தவிர்க்க முடியாதவரா இருக்கனும்.. .

 

South Indian Food Art, Tamil Painting, Canvas Acrylic Painting, Kerala Food  Painting, Onam Sadhya, Idli Vada Art, Filter Coffee, Kannada Art - Etsy UK

எல்லோரும் வெற்றிலை பாக்கு போடுங்க... 

Disadvantages and Side Effects of betel Nuts alias vetrilai ...

 ஆரோக்கியமாக இருங்க....

 Pin on pal in 2024 | Village scene drawing, Indian art ...

🌷 🌷🌷 Love Astrology which jadhagam success love know details abpp | Valentine's  Day: எந்த ஜாதகரின் காதல் திருமணத்தில் முடியும்? காதலில் வெற்றி பெற பரிகாரம்  உண்டா?No photo description available.

🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

Astrology Temple என்று

மணக்கால் அய்யம்பேட்டை | 10:36 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and temple

தாஜ்மஹாலை போய் பார்க்க நம்மை படிப்பித்த சமூகம்.. 
 
இனி சிறிது நம் நாட்டின் கலாசாரசமூகத்தை திரும்பி பார்ப்போம்.. 
 Vidyashankara Temple | Sharada Peetham
Astrology temple என்று அறியப்படுகின்ற ஸ்ரீ விதய்சங்கரர் ஆலயம்.
 
இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
 
பாரதத்தின் வேத வாஸ்துவிதக்தர் தந்த அற்புதங்களில் ஒன்று இந்த ஆலயத்தின் வடிவமைப்பு 
 Vidyashankar the Zodiac temple in Sringeri - NewsBharati
ராசி சக்கரத்தின் சின்னங்களான 12 ரூபங்களுள்ள (Zodiac signs) 12 சப்தஸ்வங்களால் ஆலய மண்டபம் சுற்றப்பட்டிருக்கிறது 
 
12 மாத கால அளவில் ஒவ்வொரு துணிலும் சூரியகிரகணங்கள் விழுகின்ற அமைப்பில் மிக அற்புதமாக இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
 Vidya Shankara Temple, Sringeri - Timings, History, Best Time to Visit
இந்த மாதிரி இடங்களை நம் சுற்றுலாத்துறை உயர்த்தி காட்டுவதில்லை.
 
 
 

 

சுவாதி என்றால் ந்ருசிம்ஹருக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:31 AM | Best Blogger Tips

 No photo description available.

சுவாதி நட்சத்திரம் இந்த சுவாதி நட்சத்திரத்திற்க்கும் தென் தமிழ்நாட்டின் தலையாய வைணவ ஸ்தலமான நம்மாழ்வாரின் ஆழ்வார் திருநகரிக்கும் ஒரு தொடர்பு உண்டு என்ன தெரியுமா?
 
சுவாதி என்றால் ந்ருசிம்ஹருக்கு மட்டுமல்ல பகவானின் வாகனமான கருடருக்கும் உரியது
 
இந்த ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனி ஏற்றம்.
இங்கு கோவில் மதில் மேல் வடகிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சித்திரத்தன்று திருமஞ்சனம் நடக்கும்
அந்த வடகிழக்கு மூலையில் தனியாக கருடருக்கு என சந்நிதி உள்ளது அங்கே கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன
 
முற்காலங்களில் நித்யமும் அந்த தீபஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம் இக்காலத்தில் எப்போதாவது தான் ஏற்றுகிறார்கள்
நாளை சுவாதி நட்சத்திரம் அன்று கண்டிப்பாக ஏற்றுவார்கள்
இந்த வடகிழக்கு மூலையில் உள்ள கருடனுக்கு தினமும் ஆறு காலப் பூஜையும் நடக்கிறது
 
ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனின் அவதார உற்சவம் இங்கு 10 நாட்கள் விமர்சையாக நடக்கும்
இங்குள்ள கல்மண்டபத்தில் அந்த
10 நாட்களும் ஶ்ரீவைஷ்ணவ திவ்ய பிரபந்த சேவாகால கோஷ்டி நடைபெறும்
அந்த வேளைகளில் பக்கத்துக் கிராமங்களிலிருந்து ஆண்பெண் என பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள் தீவீரமாக விரதமிருந்து இந்த கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்
அதுமட்டுமல்லாமல் தினமும் பலரும் வந்து நேர்த்திகடனாக சிதறு தேங்காய் உடைக்கின்றனர் 
 
அதாவது சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனகளை நிறைவேற்றும் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரப்பிரசாதி இந்த கருடன் என்கின்றனர் (மக்கள் உடைத்து சிதறும் தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்காகவே தனியாக பணியாட்களும் ஒரு தனி கொட்டகையும் ஊரில் உள்ளது)
 
அது சரி மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இந்த கோவில் கருடனுக்கு மட்டும் ஏன் இத்தனை விசேஷம்? 
 
விஜயத்துக்கு வருவோம்
 
பல நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் முகமதியர்களின் படையெடுப்பின் போது திருக்குருகூர் நம்மாழ்வாரைக் காப்பாற்ற அக்கோவிலின் அர்ச்சகர்கள் ஆழ்வார் விக்ரஹத்தை எடுத்துக்கொண்டு பல்வேறு ஊர்களுக்கு பயணம் சென்றனர்
அந்த சமயத்தில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காணமல் போக ஒவ்வொரு முறையும் கருடன் பறவையாக வந்து ஆழ்வார் விக்ரஹத்தை காட்டிக் கொடுத்தாராம் 
 
அதாவது
 
அர்சகர்கள் விக்ரஹத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் போது கேரளாவில் திருக்கணாம்பி
 
இன்றய கோழிக்கோடு பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் நம்மாழ்வாரை வைத்துப் பூஜை செய்து வந்தனர் 
 
அப்படியான ஒரு சமயத்தில் தான் ஶ்ரீரங்கததின் மீது முஸ்லீம் மன்னன் ஊலுக்கான் நம் சோ சொல்லும் முகமது பின் துக்ளக் என்னும் மன்னன் படையெடுத்து வந்ததால் 
 
ஶ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாளையும் உபய நாச்சிமார் களையும் காப்பாற்ற வேண்டி பிள்ளைலோகாசார்யர் என்னும் ஶ்ரீவைஷ்ணவர் எடுத்துக் கொண்டு தெற்கு திசை நோக்கி வந்தார்
அப்படி வந்த சில காலங்களிலேயே ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தினார் 
 
அதனால் அவருடைய சீடர்கள் நம்பெருமாளையும் நாச்சியார்களையும் எடுத்துக்கொண்டு ஊர் ஊராக செல்லும் வழியில் கேரளாவின் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்
 
இந்த இடத்தில் தான் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு தம் வட்ட மனையையும் முத்துச் சட்டையையும் அளித்தார்
 
இரண்டு கோவில் மனிதர்களும் மீண்டும் தங்களது விக்ரங்களை எடுத்துக் கொண்டு செல்லும் வழியில் திருக்குருகூர அர்சகர்கள் இனி பயணம் தொடர்வது ஆபத்தானது என்று கருதி நம்மாழ்வாரை கேரளாவின் முத்திரிப்பூ மலை அடிவாரத்தில் ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் பத்திரப்படுத்தி வைத்துவிட்டுத் திருநகரிக்கு திரும்பி விட்டனர்
 
போர் மேகம் மறைந்த பின் ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச்சென்ற அந்த அர்சகர்களுக்கு ஆழ்வாரை மறைத்து வைத்திருந்த இடம் தெரியாமல் தவித்தனர்
 
அப்போதும் ஆழ்வார் மறைந்திருக்கும் இடத்தின் அருகிலிருந்து ஒரு கருடபட்சி கூவி அர்சகர்களுக்கு காட்டிகொடுத்தது 
 
அர்சகர்கள் மிகுந்த சிரம ப்பட்டு மீண்டும் ஆழ்வாரை எடுத்து கொண்டு ஆழ்வாரின் திருநகரிக்கு வந்தனர் (இக்காலம் போல் அப்போது பேருந்துவசதிகள் கிடையாது)
 
இதனிடையே ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெடுப்பில் சீரழிந்து உரு மாறி ஒரே வனமாகி விட்டது அங்கு பல விதமரங்களும் அதனுடன் பல புளிய மரங்களும் வளர்ந்து விட்டன
 
ஆழ்வார் 16 ஆண்டுகள் தவம் இருந்த புளியமரம் எது என்று திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் அவர்களது சிஷ்யர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை
 
அந்த நேரத்திலும் ஒரு கருடபட்சி வந்துதான் உறங்காபுளியை வனத்தில் வட்டமிட்டு காட்டிக் கொடுத்தது அதன் மூலம் வனத்தில் இருந்த கோவிலையும் கண்டுபிடித்து கோவிலை புணர்நிர்மாணம் செய்து நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து மறுபடியும் முறைப்படி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.
 
கருடாழ்வார் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்ததால் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று இவ்வூரில் கருடனுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது
இந்த ஆழ்வார் திருநகரியும் திருப்பதியும் ஒரு ஒற்றுமையுள்ள திவ்யதேசம்
அதாவது திருக்குருகூரும் திருப்பதியை போல் ஒரு புராதனமான வராக ஷேத்திரம்
 
இந்த ஊரில் ஆதியில் வந்து கடாட்சித்தவர் லட்சுமிவராகரான ஞானப்பிரான் ஆவார்.
 
அவருக்குப் பின்னால் இவ்வூருக்கு வந்தவர் தான் ஆதிநாதப் பெருமாள் (பொலிந்து நின்ற பிரான்)
 
திருமலை போல பின்னால் வந்த ஆதிநாதபெருமாள் இவ்வூரில் பிரபலமடைந்தார் எனவே இக்கோவில் ஆதிநாதப் பெருமாள்/ஆழ்வார் கோவில் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
கோவிலில் ஆதிநாதருக்கு வலப்புறம் ஞானப்பிரான் சந்நிதி உள்ளது
ஞானப்பிரான் சந்நிதிக்கு எதிரில் உள்ள கோவிலின் சந்நிதிக் கருடன் நான்கு கரங்களுடன் இருக்கிறார்
 
இரண்டு கரங்களில் சங்கு சக்கரங்களை ஏந்தியவாறும் இடது பக்க கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும் வலது கீழ்க்கரத்தில் நாகனை ஏந்தியவாரும் காட்சி தருகிறார்
 
பொதுவாக அனைத்து திவ்யதேச மற்றும் உள்ள பெருமாள் கோவில்களிலும் கருடன் இரு கரங்களையும் கூப்பி அஞ்சலி செய்தவாறு இருப்பார்
ஒரு சில கோவில்களில் கரங்களில் சங்கு சக்கரம் தரித்திருந்தாலும் பொதுவாக இரு கரங்களையும் அஞ்சலி செயத்வாறே தான் பெருமாள் கொவில்களில் இருப்பார்
இந்த ஒரு கோவிலில் மட்டுமே இவ்வாறு நான்குகரத்தானாக காட்சி தந்துள்ளார் 
 
காரணம்:-
 
பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்க கடலுக்குள் செல்லும்முன் தம் சங்குசக்கரங்களை கருடனிடம் கொடுத்ததால் கருடன் அவற்றை ஏந்திக்கொண்டு இங்கு வராகப்பெருமாள் முன் நிற்கிறார் என்பர்
நமக்கு சந்தர்பம் கிடைத்தால் ஒரு முறை சுவாதியன்றுஆழ்வார்திருநகரி சென்று கருடனை ஆழ்வாரை உறங்காபுளியை ஆதிநாதரை ஞானப்பிரானை சேவித்து ஆசிகளை பெற்று வர செல்லலாமே!!
 
ஜெய் ஶ்ரீராம்!!

 

உன்னை இழந்து விடாதே .....

மணக்கால் அய்யம்பேட்டை | 10:28 AM | Best Blogger Tips

 May be an image of 2 people and coffee cup

ஒரு ஆசிரியர் 15 ஆண்டுகள் கழித்து தனது மாணவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று அழைத்திருந்தார். அனைவரும் அவர் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையில் மிகவும் பிரபலமானவர்கள் அரசியல் போலீஸ் தொழிலதிபர் பேப்பர் கடை வைத்திருப்பவர் துணிக்கடை வைத்திருப்பவர் அரசாங்க அதிகாரி அமைச்சர் என்று பல துறைகளில் பெரிய ஆட்கள்.
 
அனைவருமே இது ஒரு அழகான வாய்ப்பாக கருதி ஒன்றாக வந்து சேர்ந்தார்கள் துணி வியாபாரி அமைச்சரிடம் சென்று எப்படிடா இருக்கிறாய் என்றும் பேப்பர் காரன் போலீஸ் அதிகாரியிடம் என்னடா இவ்வளவு குண்டு ஆயிட்ட என்றும் பேசினார்கள் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களுக்கு பேச்சு வரவில்லை அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அதுவரை அந்த ஆசிரியர் அங்கு வரவே இல்லை.
வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தார் சுட சுட தேநீரோடு சிலவகை கோப்பை எடுத்துக் கொண்டு வந்தார். அனைவரும் ஆசிரியர் வந்ததும் எழுந்து நின்று தேநீர் வாங்க அங்கே இருந்த கோப்பைகளை எடுக்க செய்தார்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமான கோப்புகளை தேர்வு செய்தார்கள்.
 
ஒருவர் சில்வர் மண் பீங்கான் வெள்ளி கண்ணாடி போன்ற பல வகைகளை தேர்வு செய்தார்கள் ஆசிரியர் அமைதியாக பார்த்தார். எல்லோரும் இப்பொழுது கேட்கப் போகும் கேள்விக்கு உண்மையாக பதில் சொல்லுங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள் உங்கள் அனைவரும் ஒரே மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா என்று கேட்டார் அனைவருக்கும் அப்போதுதான் புரிந்தது இல்லை சார்.
 
பள்ளியில் படிக்கும் போது இருந்த ஆர்வமும் மகிழ்ச்சியும் இப்போது ஏதோ ஒன்று தடுக்கிறது அது என்ன என்று எங்களால் கூற முடியவில்லை இதோ என் அருகில் இருப்பவனிடம் நான் பயங்கரமாக விளையாடி இருக்கிறேன், ஆனால் இன்று ஏதோ ஒன்று அவனை நெருங்க முடியாமல் தடுக்கிறது என்று கூறினார். இந்தப் பாடத்தை புரிய வைக்கவே தான் நான் உங்களை அழைத்தேன். 
 
நீங்கள் அனைவரும் வெவ்வேறு துறையில் ஒவ்வொரு பதவியில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் ஆனால் நீங்கள் அனைவரும் வாழ வேண்டியது உங்களது வாழ்க்கை தான் ஆனால் நீங்கள் எல்லோரும் உங்கள் துறையை தான் நம்பி மதிப்பதால் மற்றவர்களிடம் நெருங்க முடியவில்லை உங்கள் தகுதி துறை என்பது வேறு
காபி கோப்பைகள் போல உங்களது பதவிகள் அலங்காரமாக வேறுவேறு ஆக இருந்தாலும் நமக்கு தேவை அதில் உள்ளே இருக்கும் காபி தான் அதுபோல் நாம் பதவிகளில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அந்த மகிழ்ச்சி நாம் அனைவருக்கும் உள்ளத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
 
உங்கள் பதவிகளை தகுதிகளை இல்லத்தில் நுழையும்போதே கழட்டி வைத்து விடுங்கள் அன்பாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லத்தில் ஒருவனாகவும் வாழ கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் நிறைய பெரிய இடங்களில் மகிழ்ச்சி இருப்பதில்லை ஆனால் சிறிய குடிசையில் சந்தோஷத்தோடு சிரிப்பொலிக்கு இருக்கும்.
அவர்கள் சிரிப்பதற்கு எந்த பதவியும் பணமும் தடுக்கவில்லை வசதியானவர்கள் தங்கள் பதவிகளை நினைத்து தங்கள் திறமைகளை நினைத்து இல்லத்தில் இன்பமாக இருக்க முடியாமல் தவிக்கிறார்கள்.. நீ வெளியில் பெரிய அதிகாரியாக இருக்கலாம் வீட்டுக்குள் உன் குழந்தைக்கு தந்தையாக உன் மனைவிக்கு கணவனாக உன் அப்பா அம்மாவுக்கு குழந்தையாக மாறி நடந்து பார் உன்னுடைய வாழ்வு இனிக்கும்.
 
உன் பதவி அதிகாரத்தை உன் இல்லத்துக்குள் நுழைக்காதே உன் இன்பமான வாழ்க்கை எனும் தேநீர் உனக்கு கிடைக்காமல் போய்விடும்....
 

 

மணக்கால் அய்யம்பேட்டை | 10:26 AM | Best Blogger Tips

 May be an image of tree, twilight and nature

மின்னல் ஏன் எப்போதும் பனை மரம் மீதே விழுகிறது தெரியுமா? அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்காம்...!
 
நாம் சிறுவயது முதலே பனை மரங்களில் இடி விழுவதை பார்த்திருப்போம். பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தணிக்கும் தனித்துவமான திறனைக் கொண்டுள்ளன, இது விஞ்ஞானிகளை பல நூற்றாண்டுகளாக சிந்திக்கத் தூண்டும் செயலாகும். இந்த இயற்கை பாதுகாப்பு பொறிமுறையானது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் போன்ற அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் பாதுகாப்பு அரணாக உள்ளது.
உதாரணமாக, இந்தியாவின் ஒடிசா மாநிலம், மின்னல் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவதில் பனை மரங்களின் நன்மைகளை சார்ந்துள்ளது மற்றும் இறப்புகளைக் குறைக்க பெரிய அளவில் இந்த மரத்தை பயிரிடத் தொடங்கியுள்ளது.
 
மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்கள் திறம்பட செயல்பட முதன்மையான காரணங்களில் ஒன்று அவற்றின் அதிக ஈரப்பதம் ஆகும். பனை மரங்களின் தண்டுகளில் நீர் மற்றும் சாறு நிரம்பியுள்ளது, இது மின்னல் தாக்கத்திலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி வெளியேற்றும். இந்த அதிக ஈரப்பதம் இயற்கையான கடத்தியாக செயல்படுகிறது, இதனால் மின்னல் மரத்தின் வழியாகவும் தரையிலும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தாது. மின்னல் தாக்குதல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை எதிர்த்துப் போராட 1.9 மில்லியன் பனை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் ஒடிசா அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
 
பனைமரத்தின் உயரம் பனை மரங்களின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் அவற்றின் உயரம். பனை மரங்கள் பெரும்பாலும் சுற்றியுள்ள தாவரங்களை விட உயரமானவை, இதனால் அவை மின்னலால் தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது ஒரு பாதகமாகத் தோன்றினாலும், இது உண்மையில் அருகிலுள்ள மற்ற தாவரங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.
 
மின்னல் தாக்குதல்களை ஈர்ப்பதன் மூலம், பனை மரங்கள் இயற்கை மின்னல் கம்பிகளாகச் செயல்படுகின்றன, மேலும் பாதிக்கப்படக்கூடிய இலக்குகளிலிருந்து மின்சார ஆற்றலைத் திசைதிருப்புகின்றன. மற்ற மின்னல் பாதுகாப்பு கிடைக்காத கிராமப்புறங்களில் இந்த பாதுகாப்புப் பங்கு மிகவும் முக்கியமானது.
 
மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் செயல்திறன் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒடிசா அரசாங்கம் மின்னலுக்கு எதிரான இயற்கை பாதுகாப்பாக பனை மரங்களை நடுவதற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக அதிகரித்து வரும் மின்னல் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். மாநிலத்தின் புவியியல் இருப்பிடம் மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவை குறிப்பாக மின்னல் தாக்கங்களுக்கு ஆளாகின்றன, கடந்த 11 ஆண்டுகளில் 3,790 இறப்புகள் பதிவாகியுள்ளன.
 
பனை மரங்கள் மின்னல் தாக்குதல்களைத் தாங்கும் திறன், அவற்றின் செயல்திறனுக்கு பங்களிக்கும் மற்றொரு காரணியாகும். பெரும்பாலான பனை மரங்கள் மின்னல் தாக்கத்தை கடுமையான சேதம் இல்லாமல் தாங்கும். அவற்றின் அடர்த்தியான பட்டை மற்றும் கடினமான இலைகள் தாக்குதலின் வெப்பம் மற்றும் சக்தியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க உதவுகின்றன, அவை தொடர்ந்து வளரவும் பாதுகாப்பை வழங்கவும் அனுமதிக்கிறது. இந்த பின்னடைவு, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மின்னல் தாக்குதலைத் தணிக்க பனை மரங்களை ஒரு நிலையான மற்றும் நீண்ட கால தீர்வாக மாற்றுகிறது.
 
மின்னல் தாக்குதல்களைத் தணிப்பதில் பனை மரங்களின் பங்கு, சுற்றுச்சூழல் சவால்களுக்கு இயற்கை எவ்வாறு தீர்வுகளை வழங்குகிறது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம். இந்த இயற்கையான பாதுகாப்புகளைப் புரிந்துகொள்வதன் மூலம், மின்னலின் ஆபத்துக்களில் இருந்து மனித உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்கான உத்திகளை நாம் உருவாக்கலாம்.