என்னோட வாழ்க்கையை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:11 PM | Best Blogger Tips


🌹🍁🌹🍁🌹🍁🌹

நான் கடவுளிடம் கேட்டேன்,

"என்னோட வாழ்க்கையை நான் எப்படி வழி நடத்துவது என்று,🍁🌹



🌹🍁கடவுள் சொன்னார்,

உன் அறையை செக் பண்ணு, என்று🍁🌹



🌹🍁என்னுடைய அறை எல்லா பதிலும் சொன்னது🍁🌹.



🌹🍁🌹🍁🌹🍁🌹



🍄🍃மேற் கூரை சொன்னதாம்,

உன் எண்ணங்களை உயர்வாக வை என்று🍃🍄.



🍄🍃காத்தாடி சொன்னதாம்,

என்ன மாதிரி குளிர்ச்சியா கூலா இருக்கனும் என்று🍃🍄.



🍄🍃கடிகாரம் சொன்னதாம் நேரத்தை மதிக்கனும் என்று🍃🍄.



🍄🍃காலண்டர் சொன்னதாம், என்னை மாதிரி தினமும் உன்னை புதுப்பித்துக்கொள்

என்று🍃🍄.



🍄🍃மணிபர்ஸ் சொன்னதாம் ,

வருங்காலத்துக்காக சேமித்துக்கொள் என்று🍃🍄.



🍄🍃கண்ணாடி சொன்னதாம்,

உன்னை மட்டும் பார் என்று🍃🍄.


🍄🍃விளக்கு சொன்னதாம் என்னை மாதிரி அடுத்தவர் வாழ்வில் ஒளி ஏற்று

என்று🍃🍄.



🍄🍃ஜன்னல் சொன்னதாம், பரந்த மனப்பான்மையாக இரு என்று🍃🍄.



🍄🍃தரை சொன்னதாம்,

எப்பவும் கீழே பணிவாக இரு என்று🍃🍄.


🍄🍃படிக்கட்டு சொன்னதாம்,

வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும் ஏறும் போதும் கவனமாக அடி எடுத்து வை

என்று🍃🍄.


🌹🍁🌹🍁🌹🍁🌹

இது போல வாழ்க்கையில் நாம் கடைப்பிடித்து வந்தால் மிக உயர்ந்த நிலைக்கு வரலாம்.



*அன்புடன் ரமேஷ் ராமலிங்கம்*

🌹🍁🌹🍁🌹🍁🌹


நன்றி இணையம்

_திருமணத்தில் மணமக்களுக்கு ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?

மணக்கால் அய்யம்பேட்டை | 7:39 PM | Best Blogger Tips


*பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!_*

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

*_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது.*.


நன்றி இணையம்

மனதை தொட்ட பதிவு

மணக்கால் அய்யம்பேட்டை | 12:44 PM | Best Blogger Tips
கணவன் மனைவி க்கான பட முடிவு

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!

இன்று ஒரு நாள் மட்டும்....,

"
யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!

அன்றே..,

"
கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!

இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!

"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!

ஆனால் ,
"
ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!

கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!

கதவை தட்டினார்கள்....!!

" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
தொடர்புடைய படம்கணவன் மனைவி க்கான பட முடிவு
ஆனால்,

" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!

" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,

"
கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!

வருஷங்கள் உருண்டோடின....!

"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!

மூன்றாவதாக....,

"பெண் குழந்தை பிறந்தது"......!!

கணவன்...,

"
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,

பெரிய அளவில் செலவு செய்து.....,

" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!

அதற்கு மனைவி ,

"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,

" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!

" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,

" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?

என்று கேட்டாள் .....!!

அதற்கு கணவன்....,

" ரொம்ப நிதானமாக சொன்னான்"......

எதிர்காலத்தில்.....,

" எனக்காக கதவை திறக்க".......,

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என்றான் கர்வத்துடன்....!!!
 
நன்றி இணையம்

குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி க்கான பட முடிவு

🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன


எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம்.

அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள்.

ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன.
குரங்குகள் உண்ணாவிரதம் இருந்தது எப்படி க்கான பட முடிவு
உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார்.

அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது.

அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

🙈🙉🙊

அதனால் தான் அன்றே சொன்னார்கள்
மனம் ஒரு குரங்கு என்று மிகச் சரியாக சொன்னார்கள்...
நன்றி
🚶🏽‍♂HAROON SB