மனதை தொட்ட பதிவு

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:44 | Best Blogger Tips
கணவன் மனைவி க்கான பட முடிவு

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்".....!!

இன்று ஒரு நாள் மட்டும்....,

"
யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்"......!!

அன்றே..,

"
கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் ".....!!

இருவரும் அவர்கள் வருவதை...,
"ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்"......!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்.....!!

"கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை"......!!

ஆனால் ,
"
ஒப்பந்தம் போட்டு விட்டதால்"....,
"அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்".......!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து.....,
" திரும்பி போய் விட்டனர்"......!!

கொஞ்ச நேரம் கழித்து..... ,
"மனைவியின் அம்மா அப்பா வந்தனர்".....!!

கதவை தட்டினார்கள்....!!

" இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்".....!!
தொடர்புடைய படம்கணவன் மனைவி க்கான பட முடிவு
ஆனால்,

" மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது".......!!

" என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது " .....,
என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,

"
கணவன் ஒன்றும் சொல்ல வில்லை"......!!

வருஷங்கள் உருண்டோடின....!

"இரண்டு ஆண் குழந்தை பிறந்தது"....!!

மூன்றாவதாக....,

"பெண் குழந்தை பிறந்தது"......!!

கணவன்...,

"
பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்"...... ,

பெரிய அளவில் செலவு செய்து.....,

" அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்".......!!

அதற்கு மனைவி ,

"இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது"......,

" இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை".......!!

" பெண் குழந்தை பிறந்தவுடன்"....,

" இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்"......?

என்று கேட்டாள் .....!!

அதற்கு கணவன்....,

" ரொம்ப நிதானமாக சொன்னான்"......

எதிர்காலத்தில்.....,

" எனக்காக கதவை திறக்க".......,

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
" ஓரு பெண் பிறந்துவிட்டாள் "....!!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
என்றான் கர்வத்துடன்....!!!
 
நன்றி இணையம்