பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:51 PM | Best Blogger Tips


பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!!

1.
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2.
பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3.
பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10.
பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11.
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்!!

1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வர வீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

விளாம் பழம் பற்றிய உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:50 PM | Best Blogger Tips
விளாம் பழம் பற்றிய உடல்நல நன்மைகள்:-

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.


விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.


@[282030625230450:274:உணவே மருந்து]  &  @[431943046865465:274:Food is the Best Medicine]
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.

பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.


விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.


உணவே மருந்து & Food is the Best Medicine

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips
பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.



3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.



4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.



5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.



6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.



7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.



8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.



9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.



10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.



11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.



12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.



13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.



14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
பாகற்காயின் மருத்துவ குணங்கள்:
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.



3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.



4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.



5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.



6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.



7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.



8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.



9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.



10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.



11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.



12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.



13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.



14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

குளிர்காலத்தில் உதட்டை பராமரிக்கனுமா??

மணக்கால் அய்யம்பேட்டை | 1:18 PM | Best Blogger Tips
குளிர்காலத்தில் உதட்டை பராமரிக்கனுமா??

குளிர்காலம் என்றாலே உதடுகள் விரைவில் வறட்சியடைந்துவிடும். அதிலும் இந்த உதடுகள் மிகுந்த சென்சிட்டிவ் ஆன ஒரு பகுதி. அதனால் பேசுவதற்கு, சாப்பிடுவதற்கு மற்றும் சிரிப்பதற்கு பயன்படுத்தும் உதடுகளில் எளிதில் வெடிப்புகள், இரத்தம் வடிதல் மற்றும் சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.

மேலும் எப்படி சருமம் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸால் ஆனதோ, அதேப்போல் தான் உதடுகளும் அவற்றால் உருவானது. அத்தகைய உதட்டில் மற்ற பகுதியில் இருக்கும் முடி அல்லது வியர்வை சுரப்பி போன்றவை ஏதும் கிடையாது. ஆகவே அத்தகை பாதுகாப்பு படலங்கள் இல்லாததால், உதடுகள் விரைவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படைந்து விடுகின்றன. எனவே குளிர்காலத்தில் உதடுகளில் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சில குறிப்புகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா!!!

குளிர்காலத்தில் உதடுகளுக்கு எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம் அல்லது லிப் பாம் போன்றவற்றை வெளியே செல்லும் போது உதடுகளில் தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் உதடுகளுக்கு ஏற்படாமல் இருக்கும்.

என்னதான் எச்சிலை அடிக்கடி உதடுகளில் படச் செய்தாலும், அவை விரைவில் காய்ந்துவிடும். மேலும் சிலருக்கு அடிக்கடி உதடுகளில் எச்சில் படும்படி செய்வது பழக்கமாக இருக்கும். அத்தகையவர்கள் ஏதேனும் பிடித்த ப்ளேவரால் செய்யப்படும் லிப் பாமை பயன்படுத்துவது நல்லதாக இருக்கும்.

எப்போதும் சுவாசிக்கும் போது வாயால் சுவாசிக்காமல், மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டும்.

ஏதாவது அழகுப் பொருட்கள் அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவது போல் இருந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் தவறாமல் குடிக்க வேண்டும்.

அடிக்கடி உதட்டைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டால், உடலில் வைட்டமின் பி2 குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே தினமும் வைட்டமின் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒருசில நல்ல தரமான லிப் பாம்களில் ஜொஜோபா எண்ணெய், வெண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி சூரியகதிரினால் உதட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் சன்ஸ்கிரீன் SPF6 இருக்கும்.

புகைப்பிடித்தால் உதடுகளில் விரைவில் சுருக்கங்களும், அதே சமயம் ஆல்கஹால் பருகினால் உதடுகளில் அதிக வறட்சியும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

உதடுகளில் ஏதேனும் வெடிப்புகள் ஏற்பட்டால், அவற்றை மறைக்க லிப்ஸ்டிக் போட வேண்டாம். ஏனெனில் அவை உதட்டில் உள்ள வெடிப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
எனவே மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு நடந்து வந்தால், குளிர்காலத்தில் உங்கள் உதட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.
குளிர்காலத்தில் உதட்டை பராமரிக்கனுமா??

குளிர்காலம் என்றாலே உதடுகள் விரைவில் வறட்சியடைந்துவிடும். அதிலும் இந்த உதடுகள் மிகுந்த சென்சிட்டிவ் ஆன ஒரு பகுதி. அதனால் பேசுவதற்கு, சாப்பிடுவதற்கு மற்றும் சிரிப்பதற்கு பயன்படுத்தும் உதடுகளில் எளிதில் வெடிப்புகள், இரத்தம் வடிதல் மற்றும் சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும்.

மேலும் எப்படி சருமம் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸால் ஆனதோ, அதேப்போல் தான் உதடுகளும் அவற்றால் உருவானது. அத்தகைய உதட்டில் மற்ற பகுதியில் இருக்கும் முடி அல்லது வியர்வை சுரப்பி போன்றவை ஏதும் கிடையாது. ஆகவே அத்தகை பாதுகாப்பு படலங்கள் இல்லாததால், உதடுகள் விரைவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிப்படைந்து விடுகின்றன. எனவே குளிர்காலத்தில் உதடுகளில் எந்த ஒரு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு சில குறிப்புகள்  இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா!!!

குளிர்காலத்தில் உதடுகளுக்கு எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் க்ரீம் அல்லது லிப் பாம் போன்றவற்றை வெளியே செல்லும் போது உதடுகளில் தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் உதடுகளுக்கு ஏற்படாமல் இருக்கும்.

என்னதான் எச்சிலை அடிக்கடி உதடுகளில் படச் செய்தாலும், அவை விரைவில் காய்ந்துவிடும். மேலும் சிலருக்கு அடிக்கடி உதடுகளில் எச்சில் படும்படி செய்வது பழக்கமாக இருக்கும். அத்தகையவர்கள் ஏதேனும் பிடித்த ப்ளேவரால் செய்யப்படும் லிப் பாமை பயன்படுத்துவது நல்லதாக இருக்கும்.

எப்போதும் சுவாசிக்கும் போது வாயால் சுவாசிக்காமல், மூக்கின் வழியாக சுவாசிக்க வேண்டும்.

ஏதாவது அழகுப் பொருட்கள் அலர்ஜி, எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்துவது போல் இருந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தினமும் அதிக அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையாமல் இருக்கும். முக்கியமாக குளிர்காலத்தில் தவறாமல் குடிக்க வேண்டும்.

அடிக்கடி உதட்டைச் சுற்றி வெடிப்புகள் ஏற்பட்டால், உடலில் வைட்டமின் பி2 குறைவாக உள்ளது என்று அர்த்தம். ஆகவே தினமும் வைட்டமின் அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஒருசில நல்ல தரமான லிப் பாம்களில் ஜொஜோபா எண்ணெய், வெண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி சூரியகதிரினால் உதட்டிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் சன்ஸ்கிரீன் SPF6 இருக்கும்.

புகைப்பிடித்தால் உதடுகளில் விரைவில் சுருக்கங்களும், அதே சமயம் ஆல்கஹால் பருகினால் உதடுகளில் அதிக வறட்சியும் ஏற்படும். எனவே இவற்றை தவிர்ப்பது நல்லது.

உதடுகளில் ஏதேனும் வெடிப்புகள் ஏற்பட்டால், அவற்றை மறைக்க லிப்ஸ்டிக் போட வேண்டாம். ஏனெனில் அவை உதட்டில் உள்ள வெடிப்புகளில் எரிச்சலை ஏற்படுத்தும்.
எனவே மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு நடந்து வந்தால், குளிர்காலத்தில் உங்கள் உதட்டிற்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

உடல் எடையை குறைக்கனுமா?? இத ட்ரை பண்ணுங்க!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 PM | Best Blogger Tips
உடல் எடையை குறைக்கனுமா?? இத ட்ரை பண்ணுங்க!!!

உடல் பருமம் இன்று அனைவரையும் பாடாய்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இந்த வழிமுறைகளை கடைப்பிடித்தால் விரைவில் உடல் எடையை குறைத்து விடலாம்.

• அதிகாலையில் மூச்சு பயிற்சி

• திட்டமிட்ட சரிவிகித உணவு

• நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

• சர்க்கரையை தவிர்க்க வேண்டும்

• ஒரு நாளைக்கு குறைந்த அளவிலான சாப்பாடு 6 அல்லது 7 முறை சாப்பிட வேண்டும்

• கூட்டு கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு சாப்பிட வேண்டும்

• புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி சாப்பிட வேண்டும்

• சரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்

• நார்சத்து அதிகம் உள்ள பழங்களை சாப்பிட வேண்டும்

• வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும்

• உடல்பயிற்சி செய்ய வேண்டும்

• வருத்த மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட கூடாது

• நாளைக்கு ஒரு முறையாவது கோதுமையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும.

• உப்பை குறைந்த அளவே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்

• தேங்காய், கடலை,பாமாயில் போன்ற எண்ணையில் செய்த உணவை சாப்பிட கூடாது

திருநீறு அணிவது ஏன்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:28 PM | Best Blogger Tips
திருநீறு அணிவது ஏன்

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
திருநீறு அணிவது ஏன்

நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது. அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு. இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம்.
மேலும், விபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ: வஜ்ராசனம்:

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
<<<<நலமுடன் வாழ>>>>

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:

வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:

வஜ்ராசனம்:

கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும்.

வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும்.

இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும்.

தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.


via Geetha Anbalagan .

To know about all flowers of the world step in and like this page

https://www.facebook.com/Flowersonearth
<<<<நலமுடன் வாழ>>>>

உங்களுக்காக மருந்தில்லா மருத்துவம் இதோ:

வீட்டிலும், அலுவலகத்திலும் அதிக வேலையால் மூட்டுவலியால் கஷ்டப்டுபவரா?, கால் பாதங்களில் வலியா? கழுத்து பகுதியில் வலியா? ஜீரண சக்தியில் பிரச்சனையா? இதோ உங்களுக்காக எளிமையான யோகா மருத்துவம்:

வஜ்ராசனம்:

கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டவும். பின் வலது காலை மடக்கவும். பின் இடது காலையும் மடக்கி கொள்ள வேண்டும். மடக்கிய காலின் குதிகாலானது உடலின் பின்பகுதியை தொடுவது போல அமர வேண்டும். குதிகால்களை ஒரு இருக்கை போல அமைத்து உட்கார வேண்டும். 

வலது கையை வலது முட்டியிலும், இடது கையை இடது முட்டியிலும் வைக்க வேண்டும். முதுகு பகுதியை வளைக்காமல் நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். சில வினாடிகள் உட்கார்ந்த பின் 5 முறை நன்றாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். பின் ஒவ்வொரு காலாக நீட்டி பழைய நிலைக்கு வரவேண்டும். 

இந்த யோகாவை தினமும் செய்தால், கால் பாதங்களில் வரும் வலி நீங்கி விடும். மூட்டு வலி ஓடிவிடும். ஜீரணசக்தி அதிகமாகும், கழுத்து வலி நீங்கி விடும். 

தினமும் செய்து பாருங்கள், பலனை பகிர்ந்து கொள்ளுங்கள்.


via @[100003335397719:2048:Geetha Anbalagan] .

To know about all flowers of the world step in and like this page 

https://www.facebook.com/Flowersonearth

கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்க்கான சில விளக்கமும் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:43 PM | Best Blogger Tips
கண்களை பாதிக்கும் காரணிகளும் அதற்க்கான சில விளக்கமும் !!!

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:

க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்

2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?

இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்,தெளிவில்லாத பார்வை திறன்,காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்,கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம், பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்

3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?

சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.

4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?

வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.

5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?

இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.

6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?

இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?

மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.

8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?

காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.

9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?

பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.

10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?

தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.


நன்றி
பரமக்குடி சுமதி
கண்களை பாதிக்கும் காரணிகளும்  அதற்க்கான சில விளக்கமும் !!!

1) கண்களை பாதிக்கும் சில காரணிகள்:
 
க்ளைகோமா, தூரப்பார்வை,கிட்டப்பார்வை ,ஸ்டை (ஸ்டை என்பது கண்ணீர் சுரப்பியை தடுக்கும் கண்ணின் மேற்புறத்தில் தோன்றும் ஒரு தொற்று ஆகும்) கட்டிகள், தொற்றுகள் கண்புரை உலர்ந்த கண்
 
2) கண் பாதிப்புகளை தெரிவிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள் யாவை?
 
இருளில் பார்வையை சரிபடுத்துதலில் சிரமம்,இரட்டை தோற்றம்,சிவந்த விழிகள்,கண் எரிச்சல் மற்றும் வீக்கம்,கண் மற்றும் கண்களை சுற்றி வலி,அதிகப்படியான கண்ணீர் சுரத்தல்,கண் உலர்ந்து போதல், அரிப்பு மற்றும் எரிச்சல்,தெளிவில்லாத பார்வை திறன்,காணும் காட்சியின் மத்தியில் கருப்பு புள்ளி தோன்றுதல்,கண்களின் நிறங்களில் தோன்றும் நிற மாற்றம், பார்வை திடீரென்று தெளிவில்லாமல் மேலும் குழப்பத்துடன் தோன்றுதல்
 
3) சிமிட்டுதல் கண்களுக்கு உதவுமா?
 
சிமிட்டுதல் விழி உருளைகளை கண்ணீரால் கழுவ மட்டும் உதவுகிறது. அவை கண்களை சுத்தமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. யாரேனும் நம் கண்களை குத்தினால் நாம் அனிச்சையாக நம் கண்கனை சிமிட்டுவோம்.
 
4) ஒரு வருடத்தில் நாம் எத்தனை முறை கண்களை சிமிட்டுகிறோம்?
 
வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது. வருடத்திற்கு 10,00,000 முறை. உண்மையில் நம் உடலின் அனைத்து தசைகளை விட கண்களின் தசை விரைந்து செயல்படுகிறது. ஒரு நிமிடத்தின் 1/00 னை விட குறைவான கால அளவில் சுருங்குகிறது.
 
5) காதில் தங்க வளையம் அணிவது கண்பார்வை திறனை மேம்படுத்துமா?
 
இது ஒரு கட்டுக்கதை. காதில் தங்க வளையம் அணிவதால் கண்பார்வை மேம்படும் என்பதுமூட நம்பிக்கையாளர்களின் எண்ணம்.
 
6) மிகவும் இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது கண்களை பாதிக்குமா?
 
இறுக்கமாக கழுத்துப்பட்டை அணிவது க்ளைகோமா தோன்றும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
 
7) மங்கிய விளக்கொளியில் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்குமா?
 
மங்கிய விளக்கொளி தங்கள் பார்வைத்திறனை பாதிக்காது என்றபோதும், அது உங்கள் கண்களை அதிக தளர்வடையச் செய்யும். படிப்பதற்கான சிறந்த வழியானது விளக்கின் ஒளி புத்தகத்தின் பக்கங்களில் விழும்படி படிக்க வேண்டும், உங்கள் தோள்களின் மீது விழும்படி படிக்க கூடாது.
 
8) எனது கண்களுக்கான சிறந்த உணவு எது?
 
 காரட் சிறந்த உணவு என்பது உண்மையாகும். கண்புரை மற்றும் மாசு சீர்கேட்டினை தடுப்பதற்கு நம் கண்களில் இயற்கையாக அமைந்துள்ள காரடெனோய்ட்ஸ் லூய்டின் மற்றும் ஜியாக்சேன்தின் போன்ற பொருட்கள் காரட்டில் உள்ளது.
 
9) எனது கண்களுக்கான சிறந்த பழங்கள் யாவை?
 
பப்பாளி, ஸ்ட்ராபெரி, ஆரஞ்சு மற்றும் திராட்சை போன்ற பழங்கள் சிறந்தது.
 
10) பிறந்த குழந்தையின் அழுகையில் கண்ணீர் வருவதில்லையே ஏன்?
 
தோராயமாக ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகளின் கண்கள் கண்ணீரை சுரப்பதில்லை.


நன்றி 
பரமக்குடி சுமதி

நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:10 PM | Best Blogger Tips
நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!

முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக தெரியும் !!

நண்பர்கள் கவனத்திற்கு...!

உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள்.
வெறும் இரண்டே நிமிடங்கள்... படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள்.

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... நேரத்தை வெகுவாக குறைக்கும் பயிற்சி... இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

நன்றி
கமல் கண்ணன்
நாம் மறந்த உடல் பயிற்ச்சி !!

முயற்சி செய்து பாருங்கள் பலன் கண்டிப்பாக தெரியும் !!

நண்பர்கள் கவனத்திற்கு...! 

உங்கள் உடல் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லையென்றால் இருக்க வையுங்கள். 
வெறும் இரண்டே நிமிடங்கள்... படத்திலிருக்கும் முறை போல் உங்களின் கை மூட்டு மற்றும் கால் விரல்கள் மட்டும் தரையில் இருக்கும் படி செய்து கொள்ளுங்கள்.

இது யோகாசன முறை போலதான். இப்படி ஒரு இரண்டு நிமிடங்கள் நின்றால் போதும் (ஒரு நிமிடம் தாண்டுவதற்குள் நாக்கு தள்ளி விடும்). அப்படி நிற்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு நிமிடங்களாக முயற்சி செய்யுங்கள். 

பின் இரண்டு நிமிடங்கள் என்று மூன்று முறை செய்தால் போதும்... நாளாக நாளாக நிமிடங்களை அதிகரியுங்கள்... நேரத்தை வெகுவாக குறைக்கும் பயிற்சி... இதன் பலனை இரண்டே வாரங்களில் நீங்கள் காணலாம்... குண்டானவர்களுக்கு மட்டுமல்ல மெலிந்தவர்களும், பெண்களும் செய்யலாம்...

நன்றி 
கமல் கண்ணன்

கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை சரி செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips
கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை சரி செய்வது எப்படி?

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். அது உண்மை தான். ஆனால் அவ்வாறு வரும் சண்டைகள் நீண்ட நாட்கள் நிலைக்கக் கூடாது. அவ்வாறு நிலைத்தால், அவை அந்த உறவுக்கே முறிவை ஏற்படுத்தும். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.

அது அந்த உறவை வாழ்நாள் முழுவதும் ஒன்றுசேர விடாமல் செய்து விடும். எனவே எந்த ஒரு சண்டைகள் வந்தாலும், அவற்றை விரைவில் முடிப்பதற்கு முயல வேண்டும். தாமதம் ஆகிவிட்டால், பின்னர் சேர்வது என்பது கடினமாகவிடும். இப்போது அவ்வாறு சண்டைகள் வந்தால், என்னவெல்லாம் செய்தால், சண்டையானது சரியாகும் என்பதை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே!!!

* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும். அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.

* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.

* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.
கணவன்-மனைவிக்கிடையே ஏற்படும் சண்டையை சரி செய்வது எப்படி?

உறவுகளுக்குள் சண்டைகள் வருவது சாதாரண விஷயம். அவ்வாறு வரும் சண்டைகள் தான் அந்த உறவை நீண்ட நாட்கள் நிலைக்க வைக்கும். சண்டை வராத உறவுகளை விட, சண்டை வந்தால் தான் நல்லது என்று நிறைய பேர் சொல்வார்கள். அது உண்மை தான். ஆனால் அவ்வாறு வரும் சண்டைகள் நீண்ட நாட்கள் நிலைக்கக் கூடாது. அவ்வாறு நிலைத்தால், அவை அந்த உறவுக்கே முறிவை ஏற்படுத்தும். எந்த ஒரு சண்டையும் ஒரு நாளுக்குள் முடிந்துவிட வேண்டும். இவ்வாறு வரும் சண்டையில் ஈகோ இருக்கவே கூடாது.

அது அந்த உறவை வாழ்நாள் முழுவதும் ஒன்றுசேர விடாமல் செய்து விடும். எனவே எந்த ஒரு சண்டைகள் வந்தாலும், அவற்றை விரைவில் முடிப்பதற்கு முயல வேண்டும். தாமதம் ஆகிவிட்டால், பின்னர் சேர்வது என்பது கடினமாகவிடும். இப்போது அவ்வாறு சண்டைகள் வந்தால், என்னவெல்லாம் செய்தால், சண்டையானது சரியாகும் என்பதை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத்துணையுடன் போட்ட சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே!!!

* வாழ்க்கை துணையுடன் சண்டை போட்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருக்கலாம். ஆனால் இரவு வந்தால், அந்த சண்டையை சரிசெய்துவிட வேண்டும். ஏனெனில் இந்த நேரம் தான் இருவரும் அமைதியாக மனம் விட்டு பேச முடியும். அதிலும் படுக்கும் போது, துணை கோபமாக இருந்தால், யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து, மற்றவரின் அருகில் சென்று அவர்களை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து, அவர்களது கோபத்தை அடக்க வேண்டும். இவ்வாறு செய்தால், யாராக இருந்தாலும் உருகிவிடுவார்கள். அதுமட்டுமின்றி, படுக்கும் போது அவர் தள்ளிப் படுத்தால், அவரைத் தெரியாமல் தொட்டது போன்று தொட்டுவிட்டு, உடனே சாரி என்று சொல்லிப் பாருங்கள்.

* சில நேரங்களில் துணையின் கோபத்தை போக்க ஆச்சரியமான செயல்கள் கூட உதவும். சொல்லப்போனால், ஆரோக்கியமான வாழ்க்கையில் எதிர்பாராதவாறு ஆச்சரியம் கொடுப்பது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, ஒருவர் மற்றவரிடம் நிச்சயம் ஏதாவது ஒன்றை எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்புகளை அவர்கள் கோபமாக இருக்கும் போது செய்தால், அதுவும் சண்டையை மறக்கச் செய்து, காதலை அதிகரிக்கும்.

* சண்டை ஏற்படும் போது இருவருள் ஒருவர் சண்டை போடுவதை தவிர்க்க, அவர்களது மனதை திசைத்திருப்ப ஏதாவது ஒரு வித்தியாசமான மற்றும் அவர்களது ஆர்வத்தை தூண்டும் ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி பேச ஆரம்பித்தால், சில சமயங்களில் கோபத்தை மறந்துவிட்டு பேசிவிடுவார்கள். பிறகு என்ன ஒரே சந்தோஷம் தான்.

* சண்டை வந்துவிட்டால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கு, துணையிடம் மன்னிப்பு கேட்கலாம். அதிலும் வித்தியாசமான முறையில் அவர்களிடம் அந்த மன்னிப்பை வெளிப்படுத்தலாம். உதாரணமாக, பெண்கள் சாரி என்று ஒரு பேப்பரில் எழுதி குளியலறை கண்ணாடியில் மாற்றலாம், ஆண்கள் என்றால் அதேப் போன்று எழுதி சமையலறை, ஃப்ரிட்ஜ் போன்ற இடங்களில் வைக்கலாம். இல்லையெனில் தோப்புக்கர்ணம் போடலாம்.

உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:02 PM | Best Blogger Tips
அனைவருக்கும் பொதுவாக இருக்கும் உடல் பிரச்சனைகளில் தலைவலியும் ஒன்று. அதிலும் ஒற்றைத் தலைவலி தான் மிகவும் கொடியது.

நிறைய மக்கள் இந்த ஒற்றை தலைவலியால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உள்ளாவார்கள். இவ்வாறு தலை வலி வந்தால், உடனே அதனை போக்க பெரும்பாலானோர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள். சில நேரங்களில் இந்த தலைவலியால் மயக்கம், வாந்தி மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும்.
பின் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறு உடலானது பலவீனமடைந்துவிடும்.

பொதுவாக இந்த தலைவலி ஏற்படுவதற்கு நரம்பு மண்டலத்திற்கும், வாஸ்குலார் மண்டலத்திற்கும் இடையே உள்ள செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித மாற்றம் காரணம். அதுமட்டுமின்றி மூளை செல்களில் ஏற்படும் ஒருவித வித்தியாசமும் தலைவலியை உண்டாக்கும்.

இந்த மாதிரியான தலைவலியை குறைக்க பல வழிகள். ஒன்று மாத்திரை எடுப்பது, மற்றொன்று உணவுகளின் மூலம் சரிசெய்வது. சொல்லப்போனால், மாத்திரைகளை விட உணவுகள் தான் எப்போதும் சிறந்தது.

எனவே இந்த தலைவலியை குறைக்கும் உணவுகளை சாப்பிட்டு, பின் சிறிது நேரம் ஓய்வான நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், தலைவலியை சரிசெய்துவிடலாம். இப்போது அந்த ஒற்றைத் தலைவலியை போக்க எந்த உணவுகள் உதவுகிறது என்று பார்ப்போமா

கீரைகள் :
கீரைகளில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்து கடுமையான ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி இந்த சத்துக்கள் நவதானியங்கள், கடல் உணவுகள் போன்றவற்றிலும் அதிகம் நிறைந்துள்ளது.

மீன்:
கடல் உணவுகளில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒற்றைத் தலைவலியால் உடலினுள் ஏற்படும் உள்காயங்களை குணப்படுத்தும்.

பால் :
பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

ஆளி விதை:
இந்த சிறிய விதையில் ஒற்றைத் தலைவலியை கட்டுப்படுத்தும் சத்துக்களான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.

காபி:
உண்மையில் தலை வலிக்கும் போது ஒரு கப் காபி குடித்தால், தலைவலியானது குணமாகிவிடும். அதிலும் குறைவான அளவில் மட்டும் காபியை குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் என்னும் பொருள் தலைவலியைக் கட்டுப்படுத்தும்.

ரெட் ஒயின் :
தைரமின் என்னும் ஆன்டி-ஆசிட் ஒயின் மற்றும் பீரில் அதிகம் உள்ளது. எனவே ஒரு டம்ளர் ரெட் ஒயின் அல்லது பீர் குடித்தால், கடுமையான ஒற்றை தலைவலியை சரிசெய்ய முடியும்.

தினை (millet):
முழு தானியங்களில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முழு தானியங்கள் மற்றும் தினையை சாப்பிடுவது நல்லது.

ப்ராக்கோலி :
பச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான ப்ராக்கோலியில் மக்னீசியம் சத்து அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே ப்ராக்கோலியை வேக வைத்து, அத்துடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்து சாப்பிட வேண்டும்.

இஞ்சி :
ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.