இறந்த பின்பும் வாழ்வது யார்? – பிணவறையில் கிடைத்த ஞானம்! ✨
இன்று எதிர்பாராத ஒரு விபத்து... விதியின் சதியால் பிணவறைக்குள் (Mortuary) நுழைய வேண்டிய கட்டாயம். அங்கே நான் கண்ட காட்சிகள், வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை; மனித வாழ்க்கையின் அத்தனை அகங்காரங்களையும் சுக்குநூறாக்கியவை!
"அங்கே மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர். பத்துக்கும் மேற்பட்ட உடல்கள்... சில வெற்றுத் தரையில், சில மேசைகள் மீது, ஒன்று பிரேதப் பரிசோதனை செய்யும் திட்டின் மேல். ஆணாதிக்கமும் பெண்ணாதிக்கமும் அற்ற, பாலின பேதங்கள் கடந்த ஒரு மௌன உலகம் அது.
அப்போது பிணவறை உதவியாளர் உள்ளே வந்து, ஒரு உடலின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தினார். அந்த உடலால் தன் மானத்தை மறைக்க கைகளைக் கூட அசைக்க முடியவில்லை. என் நெஞ்சு துடித்தது... என்னை நானே கேட்டுக்கொண்டேன், இதுதானா வாழ்க்கை?
👉 எல்லாவற்றையும் சொந்தமாக்கிக் கொள்ள நாம் ஏன் இத்தனை போராட்டம் நடத்துகிறோம்?
👉 உலகமே நமக்குச் சொந்தம் என்ற திமிரும், அகங்காரமும் எதற்கு?
👉 நாம் ஏன் ஒருவரையொருவர் மன்னித்து, அரவணைத்து அன்பான ஒரு வாழ்க்கை வாழக் கூடாது?
ஐந்து வீடுகளுக்கு அதிபதியான வீட்டு உரிமையாளர்கள், பெரிய பட்டங்கள் வாங்கிய மேதாவிகள், சொகுசு கார்களில் வலம் வந்தவர்கள்... அனைவரும் இன்று எந்த பேதமும் இன்றி ஒருவருக்கு அருகில் ஒருவர் படுத்திருக்கிறார்கள். இந்த ஊரின் பெரும் பணக்காரனும், கிணறு வெட்டும்போது மண் சரிந்து இறந்த ஏழைத் தொழிலாளியும் ஒரே இடத்தில், ஒரே தகுதியில்...
விதவிதமான அலங்காரங்களோடும், ஆடைகளோடும் தன் அழகின் மீது கர்வம் கொண்ட பெண்கள், இன்று தலைவிரிகோலமாய்...
நாமெல்லாம் எதை நோக்கி ஓடுகிறோம்? சக மனிதனுக்கு ஒரு சிறு உதவியாவது செய்கிறோமா?
பதவி என்பது சிறிது காலம், செல்வமும் வயதும் தற்காலிகமானது. நான் எப்போது இறப்பேன் என்று எனக்குத் தெரியாது, ஆனால் இறந்த பின்பு எனக்கு என்ன நடக்கும் என்பதை இன்று என் கண்கள் நேரடியாகக் கண்டன.
ஒருவேளை எனக்கு மீண்டும் உயிர்த்து எழும் வரம் கிடைத்தால்...
நான் இன்னும் சிறப்பாக வாழ விரும்புவேன். பணிவாக இருக்கவும், பிறரை எளிதாக மன்னிக்கவும், முன்பை விட அதிக மனிதாபிமானத்துடன் இருக்கவும் பழகுவேன். ஏனென்றால், இங்கு வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை, மரணம் மட்டுமே நிச்சயம்!
பிணவறையை விட்டு வெளியேறும் போது, அந்த உதவியாளர் சக ஊழியரிடம் சொன்ன ஒரு வாசகம் என் காதுகளில் இடி போல் விழுந்தது:
👉 "அந்த நீல கலர் சட்டை போட்டவரை மட்டும் பார்த்து மெதுவாக கையாளுப்பா... நல்ல மனுஷன்!"
அப்போதுதான் புரிந்தது... இங்கு இறந்த பின்பும் வாழ்வது சிலர் மட்டுமே! அவர்கள் சேர்த்த சொத்துக்களால் அல்ல, அவர்கள் காட்டிய அன்பால் மட்டுமே!"
சிந்தியுங்கள் என் சகோதர சகோதரிகளே...
பணிவாக இருங்கள், அன்பைப் பரப்புங்கள், மனிதர்களை மன்னிக்கப் பழகுங்கள். மீண்டும் ஒரு பிறவி நமக்கு உறுதி என்றால், அது இந்த பூமியில் நல்லதைச் செய்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது! 👍❤️
🙏🌹நன்றி இணையம் 🌹🙏
