தேவையான பொருட்கள்
▢1/2 கிலோ சேனைக்கிழங்கு ▢1/4 கப் தேங்காய் ▢2 வர மிளகாய் ▢1 டீஸ்பூன் சீரகம் ▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் ▢3 டேபிள் ஸ்பூன் தேங்காய் ▢1/2 டீஸ்பூன் கடுகு, உளுந்த ஸ்பூன் தேவையானஅளவு ▢கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை.....
முதலில் சேனை கிழங்கை அதின் தோலை நீக்கி பிறகு நன்கு கழுகி சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், மிளகாய், சீரகம் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,
உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து அத்துடன் சேனை கிழங்கு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேக விடவும்.
நன்கு வெந்ததும் அத்துடன் அரைத்தa தேங்காய் மசாலா சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர் அடுப்பில்l இருந்து இறக்கி மேலாக ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி விடவும்.
அருமையானn சுவையுடன் கூடிய சேனை கிழங்கு தோரன் தயார். சாம்பார் சாதத்துடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷