அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் சாதம், 1/2 கப் பால் மற்றும் 2 கப் தயிர், தேவையான அளவு உப்பு இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தயிர் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு- 1 ஸ்பூன்
கடுகு- 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 2
பச்சை மிளகாய்- 1
இஞ்சி- சிறிய துண்டு
மாங்காய்- சிறிய துண்டு
கேரட்- 1/2
பால்- 1/2 கப்
தயிர்- 2 கப்
மாதுளை பழம்- 2 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
சாதம்- 3 கப்
ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி.?
முதலில் எடுத்து வைத்துள்ள 1/2 கப் பாலினை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளுங்கள். அதுபோல 3 கப் அளவிற்கு சாதம் நன்றாக குழைவாக வேக வைத்து கொள்ளுங்கள்.

அதன் பின்பு எடுத்து வைத்துள்ள இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, மாங்காய், பச்சை மிளகாய், மாதுளை பழம் மற்றும் கேரட் இவை அனைத்தினையும் தண்ணீரில் சுத்தமாக அலசி கொண்டு சிறு சிறு துண்டாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் 3 கப் சாதம், 1/2 கப் பால் மற்றும் 2 கப் தயிர், தேவையான அளவு உப்பு இவை அனைத்தினையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஒரு 2 நிமிடம் கழித்து பவுலில் இருக்கும் சாதத்துடன் நறுக்கி வைத்துள்ள மாங்காய், இஞ்சி மற்றும் கேரட்டை சேர்த்து மீண்டும் கலந்து கொள்ளுங்கள்.
கடைசியாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் இவை அனைத்தினையும் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை கிண்டி விடுங்கள்.
அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு கடாயில் இருக்கும் பொருட்களை பவுலில் இருக்கும் சாதத்தில் சேர்த்து நன்றாக கிண்டி கொள்ளுங்கள்.
இப்போது அந்த சாதத்தின் மீது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி விடுங்கள்.
அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு தயிர் சாதம் ரெடி.....
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷 🌷 🌷🌷 🌷