கர்மாவை சுமப்பவர்கள்.....

மணக்கால் அய்யம்பேட்டை | 5:25 PM | Best Blogger Tips

 May be an image of 3 people, temple and text that says "கர்மாவை சுமக்கும் வாகனங்கள்!"

 

🙏🏾🙇#நம்_சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்.....
 
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்.....
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே.....
 
🙏🏾#நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்...
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்...
 
🙏🏾🙇#நம்_தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் "இந்த நோய், உங்கள் அப்பா அம்மா - தாத்தா பாட்டிக்கு இருந்ததா?' என்று.
 
🙏🏾👍🏿#நோய்_மட்டுமல்ல, பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
 
🙇#தாத்தா_வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.
இந்த 5 அறிகுறிகள் உங்க வாழ்க்கையில இருந்தா? நீங்க உங்க முன்னோர்கள் செய்த  பாவத்தை சுமக்கிறீங்களாம்! | Signs You Carry The Debt Of Your Family Karma  In Tamil - Tamil BoldSky
 
🙏🏾👍🏿#நீ_செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க ...
என்பதே மெய்ஞ்ஞானம்.
 
👍🏿#நம_சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.
 
🙏🏾💃#ஆக_என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம்.....
 
🙏🏾#நாம்_செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே.....
🙏🏾
🙏🏾🙇#பட்டினியால் வருந்தும்
 
ஏழைகளுக்கு உணவளித்தல் 3 தலைமுறைக்கு.
புண்ணிய நதிகளில் நீராடுதல் 3 தலைமுறைக்கு.
திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் 5 தலைமுறைக்கு.
அன்னதானம் செய்தல் 5 தலைமுறைக்கு.
 
திருமணம் செய்வித்தல் 5 தலைமுறைக்கு.
 
 
🙏🏾#பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது 6 தலைமுறைக்கு.
 
🛕#திருக்கோயில் புனர்நிர்மாணம் 7 தலைமுறைக்கு.
 
🙇#அனாதயாக இறந்தவர்கக்கு
 
அந்திம கிரியை செய்தல் 9 தலைமுறைக்கு.
 
🐄#பசுவின் உயிரைக் காப்பாற்றுவது 14 தலைமுறைக்கு.
 
🙏🏾🙇 #காசி_கையா ஷேத்திரத்தில்
 
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் 21 தலைமுறைக்கு.
 
🙏🏾#நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்.
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும். 🙏🏾


 
 

Thanks & Copy from Web