*BSNLம் 4ஜி சேவையும் தாமதமும்..!*

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:50 | Best Blogger Tips

 



*BSNL நிற்குமா..? நிலைக்குமா..? வளம் பெறுமா..?*

தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் பொதுத்துறை நிறுவனமான BSNLன் நிதி நிலைமை மற்றும் செயல்பாடு குறித்து ஆராய மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. Insipient sicknessஆல் BSNL அவதிப்படுவதாக நிபுணர் குழு அறிக்கை அளித்தது.

டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது BSNLன் நிதிநிலைமை குறித்து ஆராய சாம் பித்ரோடா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் Insipient sicknessஆல் BSNL அவதிப்படுவதாக அறிக்கை அளித்தது.

சாம் பித்ரோடா யார் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதுதான் முதன் முதலாக அவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், மேலும் தொடர்ந்து படியுங்கள்.

டெலிகாம் கமிஷன் என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அதன் தலைவராக சாம் பித்ரோடா இருந்தார் என்ற உண்மையாவது உங்களுக்குத் தெரியுமா..?

ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவருக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தவர் சாம் பித்ரோடா பின்னர் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் அவருக்கும் ஆலோசகராக இருந்தவர் சாம் பித்ரோடா


சாம் பித்ரோடா அன்று கூறியது BSNL நிறுவனம் insipient sickness ஆல் அவதிப் படுகிறது என்று. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, மோடி அரசு நியமித்த அகமதாபாத் ஐஐஎம் (IIM) நிபுணர் குழுவும் அதே insipient sickness ஐயே கூறுகிறது.

Insipient sickness என்றால் ஆரம்ப நிலையில் உள்ள நலிவு என்று பொருள். சாம் பித்ரோடா காலத்திலும் சரி இன்று மோடி காலத்திலும் சரி, இந்த 10 ஆண்டு கால இடைவெளியில் BSNLன் நலிவு insipient என்ற நிலையிலேயே மாறாமல் ஒரு constantஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் என்பது நிச்சயமாக ஒரு நீண்ட காலம்தான் என்ற போதிலும், இந்த 10 ஆண்டுகளில் BSNLன் நலிவு தீவிரம் அடையவில்லை, அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வேறு நிறுவனம் என்றால், தொடர்ந்த 10 ஆண்டு கால நலிவில் நிறுவனமே மூழ்கிப் போயிருக்கும்.

அப்படியானால் BSNL பாதிப்படையாமல் இருப்பது எப்படி..?

இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. அதாவது BSNL க்கு சொத்துக்கள் அதிகம், கடன் மிக மிகக் குறைவு.

BSNLன் Assets and Liabilities பற்றிய statement ஐ படித்துப் பார்த்த எவருக்கும் இந்த உண்மை புலப்படும்.

நீங்கள் படித்து இருக்கிறீர்களா? இல்லை. நான் படித்து இருக்கிறேன். எனவே பிரளயமே வந்தாலும் சரி, BSNLன் அடித்தளத்தை கூட யாராலும் பிடுங்க முடியாது.

ஒரு பொதுத்துறை நிறுவனம் நலிவுறத் தொடங்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் அதற்கென்று தெளிவான சட்டங்கள் இருக்கின்றன. இதன்படி நலிவுறத் தொடங்கியுள்ள ஒரு நிறுவனத்திற்கு பின்வரும் மூன்று

வழிகளில் ஒன்றின் மூலம் தீர்வு காணப்படும்.

1) நிறுவனத்தை மூடுவது (CLOSURE).

2) இன்னொரு நல்ல நிறுவனத்துடன் இணைப்பது (MERGER)

3) நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்வது (REVIVAL).

இதன்படி, BSNLக்கு என்ன தீர்வை வழங்குவது என்று மத்திய அரசு தன்னிடம் உள்ள 50 துறைகளையும்

கேட்டது. (மத்திய அரசில் சற்றேறக் குறைய 50 துறைகள் உள்ளன. உதாரணம்: ரயில்வே, அஞ்சல், பாதுகாப்பு etc) மூடலாம் என்றும் இணைக்கலாம் என்றும் ஆளாளுக்கு

ஒரு கருத்தைச் சொன்னார்கள். இவர்களின் கருத்து ம்மBSNLக்கோ நாட்டுக்கோ சாதகமாக இல்லை.

அதே நேரத்தில் ஒரே ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. BSNLஐ மூடக்கூடாது என்றும் அதைப் புத்தாக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்குரல் அதிர்ந்தது.

ஒற்றைக் குரல்! எனினும் காடுகளை அதிர வைத்த சிங்கத்தின் குரல்! அது யாருடைய குரல்?

அது பாதுகாப்புத் துறையின் குரல் (Voice of DEFENCE) "தேசத்தின் ரகசியங்களைப் பாதுகாக்க BSNL வேண்டும். BSNL இல்லாமல் போனால், அரசின் ரகசியங்கள் தெருவுக்கு வந்து விடும். எனவே எவ்வளவு செலவானாலும் சரி, BSNLஐ புத்தாக்கம் செய்ய வேண்டும் (BSNL should be revived)" என்று அடித்துப் பேசியது பாதுகாப்புத்துறை.

அக்கூற்றின் நியாயத்தை உணர்ந்து கொண்ட மோடி அரசும் BSNLஐ புனருத்தாரணம் செய்ய முடிவு செய்தது.

(ஜெயகாந்தனின் சொல்வங்கியில் இருந்து: புனருத்தாரணம் = புத்தாக்கம்= REVIVAL)

அக்டோபர் 23, 2019. BSNLன் வரலாற்றில் இது ஒரு பொன்னாள். (BSNL ன் வரலாற்றில் இன்னொரு பொன்னாள் இருக்கிறது; அது என்ன என்று தெரியுமா? தெரியாது. அதுதான் 01.10.2000. அதாவது BSNL உதயமான நாள்).

அக்டோபர் 23க்கு என்ன சிறப்பு? அன்றுதான் BSNLக்கான புத்தாக்கத் திட்டம் (Revival plan) அறிவிக்கப் படுகிறது.

ரூ 69,000 கோடி செலவில் அமைந்த BSNL புத்தாக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. புத்தாக்கத் திட்டம் குறித்து நான் முன்பு

எழுதிய கட்டுரைகளைப் படிக்கவும். BSNL ல் உள்ள இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அரசு அறிவித்த BSNLன் புத்தாக்கத் திட்டத்தை முழுமனதுடன் வரவேற்றன.

அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின்

சங்கங்களான SNEA, AIBSNLEA, NFTE, BSNLEU ஆகிய இடதுசாரி சங்கங்களும் காங்கிரசின் INTUC சங்கமானற்றப்ப FNTO, பாஜகவின் BMS சங்கமான BTEF ஆகிய சங்கங்களும் புத்தாக்கத் திட்டத்தை வரவேற்றன.

சுருங்கக் கூறின், சுதாகர் ரெட்டி (CPI), சீதாராம் யெச்சூரி (CPM) ஆகிய இரு பெருந்தலைவர்களின் ஆசி பெற்ற திட்டமே இப்புத்தாக்கம்.

A revival was long awaited and it was a demand by the unions indeed!

புத்தாக்கத்தின் ஒரு அம்சமாக BSNLக்கு 4ஜி அலைக்கற்றையை வழங்குவது என்று அரசு முடிவெடுத்தது.

4ஜி அலைக்கற்றையின் விலை = ரூ 20,140 கோடி. இதற்கான GST வரி = ரூ 3,674 கோடி. மொத்தம் = ரூ 23,814 கோடி.

BSNLக்கு 4ஜி அலைக்கற்றை வழங்க ஆகும் செலவான ரூ 23,814 கோடியை அரசே ஏற்றுக் கொள்வது என்றும் இந்தத் தொகையை வரும் பட்ஜெட்டில் ஒதுக்குவது என்றும் மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மேற்குறித்த ரூ 23,814 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து 2020 ஏப்ரல் முதல் நாளன்று வாக்களித்தபடி BSNLக்கு 4ஜி அலைக்கற்றை வழங்கப்பட்டது.

அலைக்கற்றை வழங்கப்பட்ட நாளில் இருந்து 19 மாதங்களுக்குள் BSNL நிறுவனம் 4ஜி சேவையைத் தொடங்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

அதாவது அரசு வழங்கிய கெடு எதிர்வரும் 2021 நவம்பரில் முடிவடைகிறது நவம்பருக்குள் BSNL நிறுவனம் 4ஜி சேயைத் தொடங்க வேண்டும். சேவையைத் தொடங்குவதை SERVICE ROLL Out என்று சொல்லுவார்கள். ஒரு தொழிலில் புழங்குகிற சொற்களையும் அவற்றின் பொருளையும் அறிவார்ந்த வாசகர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் தமிழில் பதிவு செய்ய முடியாது.

இந்த இடத்தில் BSNL குறித்த பொய்களையும் அவதூறுகளையும் முறியடிக்க வேண்டியது எங்கள்

கடமை ஆகிறது. அம்பானியின் தாசர்களும், சுனில் மிட்டலின் சம்பளப் பட்டியலில் இருக்கும் ஒற்றர்களும் BSNLஐ இழிவு செய்வதையே குலத் தொழிலாகக்கொண்டு செய்து வருகிறார்கள். இவர்களில் பலர் போலி இடதுசாரிகள். இவர்களில் பெரும்பாலோர் லும்பன் வர்க்கத்தினர்.

BSNLக்கு அரசு இன்னும் 4ஜி உரிமத்தை வழங்கவில்லை என்பது ஒரு அவதூறு. இது பொய். அலைக்கற்றையை வழங்கும் போதே, UAL உரிமமும் வழங்கப்பட்டு விடுகிறது.

((UAL = Unified Access License). ஏப்ரல் 1ஆம் தேதியே இரண்டும் வழங்கப்பட்டு விட்டன.

Service Roll out தாமதம் ஆகிறது. இது அடுத்த அவதூறு. தாமதமும் இல்லை, ஒரு ரோமமும் இல்லை. அரசு கொடுத்துள்ள கெடு தேதி நவம்பர் 2021 வரை இருக்கிறது. அதற்குள் சேவை வழங்க முடியாவிட்டால் தான் தாமதம் என்ற பேச்சே எழும்.

இடையில் கொரோனா காரணமாக குறைந்தது ஆறு மாதங்களின் வேலை முடங்கி விட்டது. கொரோனா பிடிக்கவில்லை என்றால், இந்நேரம் 4g roll out நடந்து முடிந்திருக்கும்.

தற்போது BSNL நாடு முழுவதும் 57,000 4G SITESஐ அடையாளம் கண்டு அதற்கான டெண்டர் கோரி உள்ளது. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்டவுடன் சேவை தொடங்கி விடும்.

இந்தச் செய்திகள் எல்லாம் இந்தியாவின் தேசிய ஆங்கில ஏடுகளில் வந்துள்ளன. குறிப்பாக எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டிலும் இன்ன பிற ஏடுகளிலும் விலாவரியாக செய்திகள் வந்துள்ளன. தமிழ் (வேசி மீடியா) பத்திரிகைகளில் இச்செய்திகள் வருவது கிடையாது.

ஆங்கிலம் தெரியாதவர்களால் ஆங்கில ஏடுகளை படித்துப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், BSNL குறித்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர் தற்போது வாசகர்களுக்கு BSNL குறித்த அனைத்து உண்மைகளும் விளங்கி இருக்கும் என்று நம்புகிறோம். இதைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்வது நமது அனைவரின் கடமை ஆகும்.

பாரத் மாதா கி ஜெய்..!

*சமூகன் எஸ்கே மதுரை*

TKS to Professor Jagadesan Agriculture

:By Kesavan Sivaramakrishnan.

 

நன்றி இணையம்