வாரன் பபேட் நமக்கு கூறும் அறிவுரை.!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:51 | Best Blogger Tips

 






உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான

வாரன் பபேட் நமக்கு கூறும் அறிவுரை.!

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.

2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே

தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.

ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது

சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்.

3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.


சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.

4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது.எதிலும்

முன்னெச்சரிக்கை அவசியம்.

5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.

6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். மேலும் மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது........

இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்...

நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!

ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப்படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

ஒரு மணி நேரத்தின் மதிப்பை

உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக்

கேட்டால் தெரியும்...!

ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை.

வாரன் பபேட்

Hats Off Sir.

 நன்றி இணையம்