*ஐம்பதில் ஆட்டத்தைத் தொடங்குங்கள்!!!!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:10 | Best Blogger Tips

 






*இப்போதெல்லாம் 50 வயதைத் கடந்தவுடன், "உடலளவிலும் மனதளவிலும்" இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது... என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்...*

*50 வயதுக்குப் பிறகுதான் ஒரு "பலமான, வளமான மூளையோடு" நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்..!*

* பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது "இன்னிங்ஸ்"தான்!*

*வாழ்க்கையில் 50-க்கு பின் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். "இனி என்ன" என்ற "சோம்பேறி சாய்தளம்" நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்...*

 *50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:*

*புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான... உங்களுக்கும் தேவையான... சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்!..*

*உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் "உறுதியோடு" செல்லுங்கள்...*

*எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள். புதிய மனிதர்களிடம் பேசுங்கள்.*

 *60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...*

 *இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...*

 *அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள்.  50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...*

* உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்..!!!*

*பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...*

*வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்..!*

*புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...*

*நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...*

* சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், "உங்களை சுற்றி ஒரு ஒளி வட்டம்" நிலையாகும்...*

* விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...*

*மன ஆரோக்கியம்,* *உடல் ஆரோக்கியம் பேணுங்கள்,*

* நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,*

*சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...*

* வாரம் ஒரு முறையாவது உங்கள் "இணை மனதினருடன்" சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்..!*

*மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...*

* பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...*

* மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்.,*

*முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...*

* எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...*

*மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை நண்பர்களே...*

*"மூளையும், மனதும்", உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...???*

 


நன்றி இணையம்