✓ *இன்பத் தமிழ்...!*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:29 | Best Blogger Tips

 


✓ *இன்பத் தமிழ்...!*
*தொடர்ந்து படியுங்கள்...*
1. அந்தி, சந்தி:
*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
*சந்தி* : இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.
2. அக்குவேர், ஆணிவேர் :
*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்.
*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.
3. அரை குறை:
*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.
*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.
4. அக்கம், பக்கம்:
*அக்கம்* : தன் வீடும், தான் இருக்கும் இடமும்.
*பக்கம்* : பக்தத்தில் உளவீடும், பக்கத்தில் உள்ள இடமும்.
5. அலுப்பு சலிப்பு :
*அலுப்பு* : உடலில் உண்டாகும் வலி.
*சலிப்பு* : உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.
6. ஆட்டம் பாட்டம் :
*ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.
*பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.
7. இசகு பிசகு:
*இசகு* : தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.
*பிசகு* : தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.
8. இடக்கு முடக்கு:
*இடக்கு* : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.
*முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.
9. ஏட்டிக்குப் போட்டி :
*ஏட்டி* : விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்)
*போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.


10. ஒட்டு உறவு :
*ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.
*உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.
11. கடை கண்ணி :
*கடை* : தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.
*கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.
12. கார சாரம் :
*காரம்* : உறைப்பு சுவையுள்ளது.
*சாரம்* : காரம் சார்ந்த சுவையுள்ளது.
13. காடு கரை :
*காடு* : மேட்டு நிலம் (முல்லை).
*கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).
14.காவும் கழனியும்:
*காவு* : சோலை.
*கழனி* : வயல். (மருதம் ).
15. கிண்டலும் கேலியும்:
*கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.
*கேலி* : எள்ளி நகைப்பது.
16. குண்டக்க மண்டக்க :
*குண்டக்க* : இடுப்புப்பகுதி,
*மண்டக்க* : தலைப் பகுதி,
சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,
வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது.
17. கூச்சல் குழப்பம்:
*கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)
*குழப்பம்* : துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.
18. சத்திரம் சாவடி :
*சத்திரம்* : இலவசமாக சோறு போடும் இடம் ( விடுதி ).
*சாவடி* : இலவசமாகத் தங்கும் இடம்.
19. தோட்டம் துரவு , தோப்பு துரவு :
*தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.
*தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்.
துரவு: கிணறு.
20. நகை நட்டு :
*நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)
*நட்டு* : சிறிய அணிகலன்கள்.
21. நத்தம் புறம்போக்கு :
*நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...
*புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.
22. நேரம் காலம் :
*நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.
*காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.
23. நொண்டி நொடம் :
*நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.
*நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர்.
24. பற்று பாசம் :
*பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.
*பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...
25. பழக்கம் வழக்கம் :
*பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.
*வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.
26. பட்டி தொட்டி :
*பட்டி* : கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).
*தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.
27. பேரும் புகழும் :
*பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு பெருமை.
*புகழ்* : வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.
28. பழி பாவம் :
*பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.
*பாவம்* : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.
29. பங்கு பாகம்:
*பங்கு* : கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).
*பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து.
30. பிள்ளை குட்டி:
*பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.
*குட்டி* : பெண் குழந்தையைக் குறிக்கும்.
31. வாட்டம் சாட்டம் :
*வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.
*சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.✒️



















நன்றி இணையம்