பாரதம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:28 | Best Blogger Tips

 


🇮🇳✨ #பாரதம் என்பதை இந்தியா என்று பெயர் மாற்றம் செய்ததில் நாம் தவறு செய்துவிட்டோமா..!? -- கிரண் பேடி IPS
ஆம், தவறு செய்துவிட்டோம்.

அதில் சந்தேகமே இல்லை.!

ஒரு தேசத்தை ஒருவர் #ஆக்கிரமிக்கும் பொழுது...





செய்யும் முதல் வேலை பெயரை மாற்றி அதன் #அடையாளத்தை அழிப்பதுதுதான்.
ஆக்கிரமிப்பை நிலைநிறுத்த இது ஒரு யுக்தி, #அடிமைப்படுத்த இது ஒரு தொழில்நுட்பம்.
ஆப்பிரிக்க – அமெரிக்க வரலாற்றை நீங்கள் பார்த்தால், ஆப்பிரிக்கர்களை அமெரிக்கா அழைத்து வந்த பொழுது அவர்களின் ஆப்பிரிக்க பெயர்களை மாற்றி வேறு ஏதோ ஒரு பெயர் கொடுத்தனர்.

இதேதான் நமக்கும் நடந்தது.

சென்னை “மெட்ராஸ்” ஆனது இப்படிதான்.
இது போலத்தான் ‘இந்தியா’வும் – இதற்கு என்ன அர்த்தம்?

ஒரு அர்த்தமும் இல்லை. உங்களுக்கு நான் #அர்த்தமற்ற பெயரை வைத்தால், என் முன்னால் நீங்கள் ஒரு அர்த்தமற்ற, #முட்டாள் மனிதராகி விடுவீர்கள்.

ஏனென்றால் நமக்கு அர்த்தமுள்ள பெயர் இருக்கிறது.

நமக்கு ஒரு மிக உயர்ந்த #பாரம்பரியம், பண்பட்ட ஆதி #கலாசாரம் உள்ளது. அவர்களுக்கு அப்படி எதுவும் இல்லை. இந்த ரீதியில்தான் நாம் ‘#இந்தியா’ என்றானோம்.

தேசம் என்பது அனைவர் மனதிலும் நன்கு பதிய வேண்டும். உங்கள் மனதை எரித்து, இதயத்தில் நுழைந்து, உங்கள் உணர்ச்சியை தீவிரப்படுத்தினால்தான்,

ஒரு உண்மையான தேசமாக உருவாகும். இல்லையென்றால் தேசம் என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கும்.

துரதிருஷ்டவசமாக இதுதான் இன்றைய யதார்த்தம்.

ஆங்கிலேயர், 1947 இல் நம்மை விட்டு சென்ற பொழுது நாம் முதலில் செய்திருக்க வேண்டியது,

நம் அடையாளத்தை எதிரொலிக்கும் படியாக பூர்வீக பெயரையே வைத்திருக்க வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக இங்கு அவர்களின் அடிமைகளை உருவாக்கிச் சென்றதால் இந்திய தேசத்திற்கு ஒரு அடையாளமற்ற ஆங்கில பெயரை கூறிக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலம் பேசியவர்கள் அவர்களின் அடையாளத்தை திணித்து நாட்டை விட்டு போய்விட்டார்கள். தற்போதைய பிரதமருக்கு நாம் வைக்கும் வேண்டுகோள், நம் பாரம்பரியம் அனைவர் மனதிலும் எதிரொலிக்கும் படியாக பூர்வீக பெயரையே நம் தேசத்துக்கு சூட்ட வேண்டும்.

நம்மிடையே இருக்கும் புத்திசாலிகள் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று கேட்கலாம்.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.பெயரை உச்சரிக்கும் பொழுது அதில் சப்தம் இருக்கிறது. பெயருக்கான அர்த்தம் உளவியல் மற்றும் சமூகரீதியானது....

சப்தம் என்பது இந்தப் பிரபஞ்சம் சார்ந்தது. அதற்கென்று ஒரு #சக்தி உண்டு. ‘#பாரத்’ என்னும் சப்தத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. இந்த சக்தியானது இந்த தேசத்தில் அனைவர் #இதயத்திலும் எதிரொலிக்க வேண்டும்.
இந்தியனாக இருப்பதன் #பெருமையை அனைவரும் உணர செய்ய வேண்டும்.

தேசம் - அனைவரின் குறிக்கோளும், தேசத்தின் குறிக்கோளும் #ஒன்றிணைந்து இருப்பதுதான் --- ஸ்ரீ ஸ்ரீ சத்குரு அவர்கள்.

தேசம் நம் சுவாசம்.