நரேந்திர மோடியின் ஒரே நோக்கம்,

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:56 | Best Blogger Tips

 


இப்பதிவு நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் "ஜோசஃப் ஹோப்", என்பவரின் கருத்து. சங்கிகள் பட்டியலில் சேராத எங்கேயோ உள்ள, ஒரு வெளிநாட்டுக்காரன் மோடி-ஜி பற்றி தெரிந்துக்கொண்டது போன்று இங்குள்ள தமிழ்கூறும் நல்லுலகின்

//டாஸ்மாக், 200ருப்பீஸ், பிரியாணி// தமிழன் தெரிந்துக்கொண்டிருந்தால்தான் தமிழகம் எங்கேயோ சென்றிருக்குமே.....

இனி..... நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கட்டுரையின் தமிழாக்கம்.......

நரேந்திர மோடியின் ஒரே நோக்கம், இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்குவதே. இவரைத் தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்தியா உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் விட மிகச் சக்தி வாய்ந்த தேசமாக மாறும். அது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவை ஆச்சரியப்படுத்தும்.

நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கடந்து செல்கிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.


சிரிக்கும் முகத்தின் பின்னால், ஒரு ஆபத்தான தேசபக்தர். அவர் உலகின் அனைத்து நாடுகளையும், தன் தேசமான இந்தியாவின் நலனுக்காகப் பயன்படுத்துகிறார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானுடனான அமெரிக்க உறவை அழித்துவிட்டார்.

வியட்நாமுடன் கூட்டணியை உருவாக்கி, சீனாவின் வல்லரசுக் கனவை உடைத்து, மூன்று நாடுகளின் பயன்பாட்டை நரேந்திர மோடி உருவாக்கிவிட்டார்.

வியட்நாமுக்கும் சீனாவிற்கும், கடற்பரப்பில் எண்ணெய் எடுப்பதில் நீண்ட காலமாக உள்ள தகராறை இந்தியாவிற்குச் சாதகமாக்கி,

இந்தியாவின் துணையுடன், வியட்நாம் சீனாவின் தெற்குக் கடற்பரப்பில் எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

அதன் எண்ணெய் அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குகிறது. இதற்கு அமெரிக்கா வேறு ஆதரவு. பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக மாற்றிவிட்டார்.

ஈரானின் துறைமுகத்தைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்.

ஆஃப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தானைப் பிரிக்கும் பகுதிக்கு மிக அருகில், ஒரு இந்திய இராணுவ நிலையத்தை உருவாக்கி உள்ளார்.

இந்திய வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், ஈரான் மூலம் (பாகிஸ்தானை விட்டுவிட்டு) ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்லும் பாதையையும் கட்டியுள்ளார்.


நரேந்திர மோடியின் ஆசைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. 370 மற்றும் 35 பிரிவுகளை ரத்துச் செய்து விட்டார்.

ஒரு நாள், பாக்., ஆக்கிரமிப்புக் காஷ்மீரை முற்றிலும் கைப்பற்றி விடுவார். வரும் காலங்களில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக விழும். இது நரேந்திர மோடியின் எச்சரிக்கையின் பேரில் நடக்கும்.

பாகிஸ்தானைப் பிரிப்பதில், பாகிஸ்தானின் பாரம்பரிய நட்பு நாடான சௌதி அரேபியாவும் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஆசியாவில், சீனாவையும் அமெரிக்காவையும் முடித்த இந்த மனிதர், சார்க் மாநாட்டை ரத்துச் செய்து, தனது சக்தியை உலகுக்குக் காட்டினார். ஆசியாவை விட, இந்தியாவின் மேன்மையை நிலை நிறுத்துவதில் நரேந்திர மோடி வெற்றி பெற்று உள்ளார்.

இந்தச் செயலை ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளான ரஷ்யா மற்றும் ஜப்பானும் இதற்கு எதுவும் சொல்லாத அளவில் செய்திருக்கிறார்.

இரண்டு நாடுகளையும் மிகத் துல்லியமாகத் தன் கையில் வைத்துக் கொண்டார். சீனாவின் வியட்நாம் எண்ணெய்ப் பிரச்சினையில், எண்ணெய் தங்களுக்கு வேண்டும் எனச் சீனா கேட்கும். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைக் கேட்பார்.

கேட்பார் என்ன, "நான் எடுத்துக் கொள்கிறேன். நீ வாய் முடி இரு" என்று சொல்லி, சீனாவின் வியட்நாம் பிரச்சினையைச் சீண்டுவார்.

சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நபர், இந்திய அரசியலை வேறு நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் பல எதிரிகள் இருப்பதாக, பல நாடுகள் நினைத்துச் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவுக்கு, பாகிஸ்தானைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்தியா நண்பர் என்பது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த மனிதர், உண்மையான போரை விட பாகிஸ்தானுக்கு அதிகத் தீங்கு செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நரேந்திர மோடி தன்னை உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக நிரூபித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் செய்தால் கூட, இவ்வளவு இழப்பு வராது. ஆனால் இப்போது அதை விட அதிகமாக இழப்பைப் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

அனைத்து நாடுகளுடனானபேச்சுவார்த்தைகள் அனைத்திலும், இந்த நபரின்

நேர்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றம், உலகின் பிற பகுதிகளுக்குக் கடினமாக இருக்கும்.

இந்தியாவின் தற்போதைய அசுர வளர்ச்சியால், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் விளைவுகளை அனுபவிப்பார்கள்.


நன்றி..... Kamatchi Thevar Maharajan ...