'ஆனந்தமான குடும்பம்'

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:02 | Best Blogger Tips



.............................................
Image result for ஆனந்தமான குடும்பம்
ஒரு தொழில் அதிபர் எதற்கெடுத்தாலும் மனைவி உடன் சண்டைப் போடுவார்..

ஒருநாள் நம் அலுவலகம் போய் வேலை செய்து பார்.. எவ்வளவு சிரமம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. ஒருநாள் பொறுமை இழந்த மனைவி..,

ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக் கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு,வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க..

அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செய்து பாருங்களேன்..என எதிர் சவால்விட்டாள்..
கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.

அவன் வீட்டில் இருக்க.. இவள் தங்களுடைய அலுவலகம் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது அலுவலகம்..

முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்..வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்..கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்..

மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது,ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்..

கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்..

பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம்
வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்..

முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும்
கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்..

அவள் சாப்பிட்டதை விட,பிள்ளைகளுக்கும்
கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்..

ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள்,கணவன் கையில் பிரம்புடன் கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்..

இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..?
அத்தனையும் குரங்குகள்..சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது..

அத்தனை பேரையும் அடிச்சு அந்த அறையில் படுக்க வச்சிருக்கேன்..பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று ஆவேசமாக கத்ததினார்....

அவளோ,அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்..

உள்ளே ஒரே அழுகையுன் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன்,ஏங்க... இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..?

இவன் எதிர்வீட்டு பையனாச்சேஎன்று அலற..ஓஹோ,அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க.. அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது..

இல்லாள் என்றும், மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்ககாலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை...

இல்லத்தைப் பராமரிப்பதிலும், பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்
ஒரு பெண்ணின் பங்கு தலையாயது..

அதுபோல,பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில்.,

இது ஆணுக்கு,இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது..

இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க கணவன் மீது மனைவியோ,மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல்.,

அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டு இருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்...

ஆம்.,நண்பர்களே..,

கணவன் மனைவி உறவு என்பதை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும்.

தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க ஒரு உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது.

அந்தப் பராமரிப்பு பற்றி கணவனும்,மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரஸ்யமிக்க துணையாக இருக்கலாம்


நன்றி இணையம்