பொறுமையோடு உழைத்தால் நிச்சயமாக

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:04 | Best Blogger Tips
Image result for ratna tata

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சாதனை சிகரத்தை அடைய நாம் செய்ய வேண்டிய மூலதனம் உழைப்பு,உழைப்பு, தளராத உழைப்பு. நாம் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கின்றோமோ அந்த அளவிற்கு நமது முன்னேற்றம் உயரும். அத்தகைய உழைப்பை நாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் வெற்றி என்பது நமது மிக அருகில்தான்.
 Image result for modi deen age
சிலர் வாழ்வில் முன்னேற வேண்டும் என பேச்சு அளவில் மட்டும் கூறிக்கொண்டு இருப்பார்களே தவிர செயல்பாடு ஒன்றும் இருக்காது. அதற்குக் காரணம் உழைக்கும் நோக்கம் இல்லாதது. நாம் ஒரு காரியத்தை எண்ணுவது பெரிதல்ல. அதை செயல்படுத்தி அதற்கேற்ப உழைக்க வேண்டும். உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைப்பினால்தான் நிறைவு பெறுகிறது.

திருவள்ளுவர்கூட திருக்குறளில் உழைப்பின் பயனைப் பற்றி குறிப்பிடுகையில் ஓயாமல் உழைப்பவர்கள் விதியைக்கூட தூர விரட்டிவிடுவார்கள் என குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி உழைத்தால் உயரலாம்; கடுமையான உழைப்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை என்று உழைப்பின் பயனையும், பெருமையையும் அறிந்தே கூறியிருக்கிறார்கள். நமது கடுமையான உழைப்பிற்கு எதையுமே ஈடாக்க முடியாது.

பொறுமையோடு உழைத்தால் நிச்சயமாக ஒருநாள் உயரலாம். உழைத்தால் வெற்றி நம் வீட்டு வாசல் கதவைத் தட்டியே தீரும்.




நன்றி *பெ.சுகுமார்*