பாரத பிரதமர் மோடிஜி பொருளாதார புரிதல் எப்படி பட்டது?

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:56 | Best Blogger Tips
Image may contain: 1 person, standing
பாரத பிரதமர் மோடிஜி எந்த தைரியத்திலே நம்பிக்கையாக இருக்கிறார்?
அவரின் பொருளாதார புரிதல் எப்படி பட்டது?
ஸ்வராஜ்யா இதழ் மோடி ஏன் தைரியமாக இருக்கிறார் என புள்ளிவிவரங்கள் தந்திருக்கின்றன
நண்பர்கள் பலரும் இன்னும் பல புள்ளிவிவரங்களை கொடுத்திருக்கிறார்கள்
ஆனால் என்னுடைய புரிதலோ இந்த புள்ளிவிவரங்கள் பற்றியது ஆனது அல்ல.
மோடி ஏன் இந்த நாடு இப்படி வறுமையில் இருக்கிறது அதற்கான காரணம் என்ன என்பதை ஆழமாக தீர்க்கமாக புரிந்து வைத்திருக்கிறார்.
பல முறை சொல்லியிருக்கிறார்.
அதை ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
1. பதவி ஏற்றவுடன் அமைச்சரவை கூட்டத்திலே கேட்கிறார், "டெல்லியில் அரசு எங்கிருக்கிறது?"
சின்ன கேள்வி தான் ஆனால் பொது மக்கள் படும் துன்பத்தை வெளிச்சம் போட்டு காட்டும் கேள்வி.
இதையே சென்னைக்கு கேட்டால்?
சென்னையிலே ஒரு வேலையை செய்ய எங்கு போகவேண்டும் என எவ்வளவு பேரால் கொஞ்ச நேரத்திலே கண்டுபிடிக்கமுடியும்? அதிகாரிகள் மக்களை எப்படி அலையவிடுகிறார்கள் என்பதை ஒரே கேள்வியிலே விளக்கிவிட்டார்.
2. 2015 இன் பொருளாதார கூட்டம், அதிலே சொல்கிறார்,
"
நாலு புனித இடங்களுக்கு போனால் மக்களுக்கு விடுதலை கிடைத்துவிடும்.
ஆனால் அரசு அலுவலகங்களிலே கோப்புகள் 36 இடங்களுக்கு போனால் கூட விடுதலை அடைவதில்லை" .
என்ன ஒரு எளிமையான விளக்கம்?
3. அதே கூட்டத்திலே அரசு ஏன் தேவை?
எதற்கான அரசு செயல்படவேண்டும்?
அரசு என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என சொன்னார்.
அதை அடியேன் தமிழாக்கம் செய்தேன். சுட்டி http://www.tamilhindu.com/…/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0…/
4. கார்ப்பரேட் தொழிலதிபர்கள், அதிகாரிகள் கூட்டத்திலே அவர்களை பார்த்து, " தொழிற்சாலைகளுக்கு கொடுக்கும் பணம் என்பது ஊக்குவிப்பு, ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்கும் பணம் என்பது மானியமா? இது சரியா?
இதை அடிப்படையிலே மாற்றவேண்டாமா?
விவசாயிகளும் பொருளாதாரத்தை தானே முன்னேற்றுகிறார்கள்?
அவர்களை ஏன் பிச்சைக்காரரக்ள் என கேவலப்படுத்தவேண்டும்" என கேட்டார்.
அங்கே இருந்த முண்ணனி எக்கானாதமிஸ்டுகளுக்கு அங்கேயே பேதியாயிருக்கும்.
5. பத்திரிக்கையாளருடன் பேட்டியிலே,
"
ஏன் பெரும் மால்கள், நிறுவனங்கள்,
ஓட்டல்கள் எல்லாம் 24 மணி நேரமும் திறந்து இருக்கலாம்
ஆனால் ஒரு சிறு பெட்டிக்கடை 24 மணிநேரமும் திறந்து இருக்ககூடாதா?
ஏன் அவர்கள் போலீஸுக்கு மாமூல் கொடுக்கவேண்டும்?
எனவே அதை மாற்றினோம்" என சொன்னார்.
யாரேனும் இப்படி யோசித்து இருப்பார்களா?
இன்றைக்கு கார்ப்பரேட் கார்ப்பரேட் என சொலும் யாரேனும் இதை கேள்வி கேட்டு இருப்பார்களா?
6. அரசின் துணை, இணை செயலாளர்கள் கூட்டத்திலே
"
ரயில் பாதை மேல் மேம்பாலம் கட்ட 50 வருடமாக அனுமதி வேண்டி அந்த மக்கள் நடக்கிறார்களே இது உங்களுக்கு நியாயமா?
இந்த அனுமதி எல்லாம் உடனே கொடுங்கள்" என்கிறார்.
இன்றைக்கு அப்படி ஒரு பிரச்சினையே இல்லை.
7. பட்டைய கணக்காளர் கூட்டத்திலே "நீங்கள் தான் கருப்பு பணத்திற்கு துணை போகிறீர்கள்,
பட்டைய கணக்காளர்கள் ஒழுங்காக இருந்தால் கருப்பு பணம் உருவாகுமா?"
என கேட்டார்.
முன் வரிசையிலே உக்கார்ந்திருந்த முண்ணணி ஆடிட்டர்கள் பேயறைந்தது போல இருந்தார்கள்.
8. தங்க மகள் திட்டம், பெண் குழந்தை பெற்றுகொள்ளுங்கள் படிக்கவையுங்கள் என்ற திட்டம் எல்லாம் பெரிதாக இந்த எக்கானாதமிஸ்டுகளால் பேசப்படவில்லை.
பெண்கள் படும் துன்பத்தை ஒழிக்க இலவச காஸ், ஏழைகளின் மின்சார கட்டணத்தை குறைக்க எல் டி பல்புகள் என எங்கெங்கெல்லாம் ஏழைகளுக்கு துன்பமோ அதை ஒழித்தார் என்பதும் புரிந்து கொள்ளப்படவில்லை.
9. தூய்மை இந்தியா நோயற்ற இந்தியா என மோடி சொன்னால் சிரிக்கும் நபர்கள் தான் சிங்கப்பூர் எப்படி தூய்மையாக இருக்கிறது அங்கே இப்படி தொற்று நோய் பிரச்சினையே இல்லை என்கிறார்கள் இல்லையா?
ஹார்வேர்டிலே படித்த ஆட்களை விட மோடிக்கு அதிக அறிவு இருக்கிறது.
இந்தியா ஏன் பின்தங்கியிருக்கிறது என தெரிந்திருக்கிறது. அவர் ஒன்னும் சும்மா சீர்திருத்தம் என வெறும் வாயிலே டீ ஆத்தவில்லை.
ஏழைகளுக்கு என்ன பாதிப்பு அதுவும் அரசால் பாதிப்போ அதை மாற்றுகிறார் நீக்குகிறார்.
ராஜீவ்காந்தி ஒரே ஒரு முறை "அரசு ஒரு ரூபாய் செலவு செய்தால் ஏழைகளுக்கு 1 பைசா போய் சேருகிறது" என்பதை வைத்துக்கொண்டு இன்றைக்கு வரை கொண்டாடும் ஆட்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்கள் ஏனென்றால் ஒரு டீக்கடை பையனுக்கு இம்புட்டு அறிவான்னு எகத்தாளம்.
மோடியை நான் ஆதரிக்கறது இதனாலே தான்.
மற்ற எல்லா எக்கானாதமிஸ்டுகளை விட மோடிக்கு அதிக அறிவு இருக்கு அதை செய்யும் ஆற்றலும் இருக்கு.
நன்றிhttps://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb3/1/16/1f1ee_1f1f3.png🇮🇳https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb3/1/16/1f1ee_1f1f3.png🇮🇳https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f80/1/16/1f64f.png🙏https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb3/1/16/1f1ee_1f1f3.png🇮🇳https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/fb3/1/16/1f1ee_1f1f3.png🇮🇳
காங்கிரஸ் இல்லாத பாரதம்
கழகங்கள் இல்லாத தமிழகம்
திராவிடம் ஒழியட்டும்...
தமிழகம் ஒளிரட்டும்....



நன்றி Mr. Krishnavel Chelladurai