வாழ்ந்த பாா்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 3:29 | Best Blogger Tips
Image result for நிகழ் காலத்தை மட்டும் ஆனந்தமாக அனுபவி
ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்டீயை விடவும் சூடாக இருந்தது.

*இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.*

மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில்தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட 
வாசகம் இது

சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற 
எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன 
உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது 
ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை 
கவனியுங்கள்.
*ஒரு ஆட்டோவில் எழுதப்பட்ட வாசகம்,

உங்களின் வழிச் செலவுஎங்களின் வாழ்க்கை செலவு.’*

டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப் பட்டிருந்தது இந்த வாசகம்இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாதுமீட்டருக்கு 
மேல ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற 
வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு.

*அதனால் தான் சொல்கிறேன்சொல்லும் விதத்தில் வெல்லலாம்.*

ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம்,

*‘
மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்மீனவன் சாப்பிட வேண்டாமா?’*

வார்த்தைகளில் இல்லை வெற்றிஅது வெளிவரும் 
விதத்தில்தான் வெற்றி இருக்கிறது.

```டீக்கடை வரியும் ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தினைத்தான் சொல்கிறதுஆனால் சொல்லப்பட்ட விதம்தான் அதில் வித்தியாசம்.

சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை```. *நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல் அதை 
செம்மைபடுத்தி பேசிப்பாருங்கள் வெற்றி நிச்சயம்.*

ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம், *‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’*


 நன்றி இணையம்