இந்தியாவை குபேரதேசமாக வைத்திருந்த பசுவளம்=பாகம் 1

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:49 | Best Blogger Tips
Image result for இந்தியாவை குபேரதேசமாக வைத்திருந்த பசுவளம்
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையிலும், நமது நாட்டில் ஒருவருக்கு எவ்வளவு சொத்துக்கள்,நகைகள்,வீடுகள்,தோட்டங்கள்,குதிரைகள் மற்றும் பரப்பளவை வைத்து செல்வச் செழிப்பை நிர்ணையிப்பதில்லை;அவர்கள் எத்தனை பசுக்களை வளர்க்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே மரியாதையும்,கவுரவமும் உருவானது;
இந்த மனோபாவமும்,பண்பாடும் நம்மைச் சுரண்ட வந்த கிறிஸ்தவ ஆங்கிலேயன் மனதில் பொறாமையை உருவாக்கியது;அதனால் தான் அவன்,நாடு நெடுக மெக்காலே கல்வித் திட்டத்தை கொண்டு வந்தான்;இதனால், நமது கல்விக் கூடங்கள் திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு இணையாக மாறியது;வெறும் நினைவுத் திறனை சோதிக்கும் விதமான கேவலமான கல்வித் திட்டத்தை நாடு முழுக்கப் பரப்பினான்;நாம் நமது பெருமை மிக்க பாரம்பரியத்தை அறியாத விதமாக அறிவிலிகள் ஆனோம்;
சாணக்கியர்,ராஜராஜசோழன்,ஆர்யபட்டர்,வீர சிவாஜி போன்ற மகத்தான மனிதர்களை தோற்றுவித்த குருகுலக்கல்வியை அழித்துவிட்டது மெக்காலே கல்வித் திட்டம்! தத்திகளை உருவாக்கி,தேசத் துரோகிகள் கொண்ட சமுதாயத்தை மெக்காலே கல்வித் திட்டம் இன்னும் உருவாக்கிக்கொண்டிருக்கின்றது;எப்படி நாம் நமது வேர்களை இழந்தோம் என்பதை அறிய ஒஷோ எழுதியமறைந்திருக்கும் உண்மைகள்என்ற நூலை ஒருமுறை வாசித்துப் பார்த்தால் நமது மனதிற்கு புரியும்;
பசு என்ற கோமாதாவின் பெருமைகளைப் பற்றி கடந்த 30 ஆண்டுகளாக புத்தகங்கள்,வார இதழ்கள்,மாத இதழ்கள்,தினசரி செய்தித்தாள்கள்,தனி நபர்கள் தமது ஆர்வத்தினால் உருவாக்கியிருக்கும் நூலகங்கள் என்று எங்கு தேடினாலும் எமக்குக் கிடைக்கவில்லை;2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தான் ஒரே ஒரு பதிப்பகம் இரு சிறு நூல்களாக வெளியிட்டிருக்கின்றன;கையிலாய சேவை பகுதி 1,பகுதி 2 என்ற பெயரில் நூல் வெளியிட்டுள்ளார்கள்;இதை வாசித்து முடித்ததும்,நமது நாடும்,நாட்டு மக்களும் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நினைத்து மனம் கண்ணீர்ச் சிந்தியது; இந்துக்களையே முட்டாளாக்கியதால் தான் பசுவின் பெருமைகளை நாடு நெடுக வாழும் 120 கோடி பேர்களுக்குத் தெரியாமல் போனது;
வாவ்!! இப்பேர்ப்பட்ட பெருமை மிகு பசுவின் தெய்வீகத் தன்மை பற்றி பள்ளிக் கூடங்களிலும்,கல்லூரிகளிலும் கட்டாயப் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்;அப்படி வைத்தால் மட்டுமே மீண்டும் நமது பாரத நாடு பழைய செல்வச் செழிப்பை ஆத்ம பலத்துடன் அடையும்;
சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியை பூமிக்குக் கொண்டு வந்து பரப்பியவருமான அகத்திய மகரிஷியின் அருளால் தான் இந்த தெய்வீக ரகசியத்தை உங்களுக்குத் தெரிவிக்க முடிகின்றது;
உலகம் முழுவதும் இருக்கும் 220 நாடுகளில் பக்தி உணர்ச்சி ஆசியக் கண்டத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே உருவாகின்றது;அதுவும் பாரத தேசத்தில் பிறந்துள்ளவர்களுக்கு ஒரே பிறவியில் முக்தி கிடைக்கக் கூடிய வழிமுறைகள் அனைத்து பாரத மொழிகளிலும் படைப்புக்களாக கிடைக்கின்றன;பாரத மொழிகளில் அனைத்து விதமான ஆன்மீக ரகசியங்களும் சம்ஸ்க்ருதத்திலும்,தமிழ் மொழியிலும் மட்டுமே நிரம்பியிருக்கின்றன;
60 ஆண்டு நாத்திகப் பிரச்சாரத்தினால்,சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கும் பணி நின்று போனது;சம்ஸ்க்ருதத்தில் இருக்கும் அனைத்து ஆன்மீக,ஜோதிட,வாஸ்து ரகசியங்களையும் தற்போது மலையாளத்தில் மொழி பெயர்த்துக் கொண்டே இருக்கின்றார்கள்;
யாருக்கெல்லாம் ஜோதிடக்கலையும்,சம்ஸ்க்ருதமும் கைகூடுகின்றதோ அவர்கள் மட்டுமே பசுவின் பெருமைகளை அறிய முடியும்;அகத்திய மகரிஷி போதித்தவைகளில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;
மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரி மற்றும் வளர்பிறை சிவராத்திரி நாட்களில் கோசாலை வைத்திருப்பவர்கள்,கோசாலையில் பணிபுரிபவர்கள்,கோசாலைகளை நாடு முழுவதும் உருவாக்குபவர்கள் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;இந்த நாட்களில் பசுவின் பெருமைகளை அறிந்த சித்தரான கறவைப்பால் சித்தர் சூட்சுமமாக கிரிவலம் வருவார்;இதன்மூலமாக,கோசாலை சேவையில் ஈடுபடுபவர்கள் வளமான நலமாக வாழ்க்கையைப் பெறுவார்கள்;மேலும் நாம் நினைத்துப் பார்க்க முடியாத வரங்களும்,நலன் களும்,ஆசிகளும் கறவைப்பால் சித்தரின் அருளால் கிட்டும்;
பலவிதமான பிரிவுகள் குடும்பத்தில் பலருக்கு ஏற்படுகின்றன;
நினைத்துப் பார்க்க முடியாத பேரிழப்புகளும் உருவாகின்றன;
மரணம்,குடும்பத்தில் இருப்பவர்கள் காணாமல் போய்விடுதல் அல்லது மூளை வளர்ச்சி இல்லாமல் இருந்து குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் சிரமங்கள் ஏற்படுதல் போன்றவைகளால் நொந்து நொறுங்கிப்போனவர்களுக்கு சித்தர்களின் தலைவரும்,தமிழ்மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி ஒரு அற்புதமான அதே சமயம் மிகவும் எளிமையான சுயபரிகாரத்தை நமக்குப்போதிக்கின்றார்;
பசுவின் உடலில் அனைத்து கடவுள்சக்திகளும்,கோடிக்கணக்கான தேவதைகளும் உறைந்திருக்கின்றன;ஒரே ஒரு பசுவை ஒரே முறை முறைப்படி குளிக்க வைத்துவிட்டால்,300 கோடி தெய்வ சக்திகளுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிட்டும்;(கலியுகத்தில் நாம் அறியாத கடவுள்கள் நிறைய இருக்கின்றன;)
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை துவாதசி மற்றும் வளர்பிறை துவாதசி நாட்களில் கன்றுடன் கூடிய பசுவை அழைத்துக் கொண்டு கிரிவலம் வரவேண்டும்;அப்போது,நிதானமாக,அந்த கன்றுடன் கூடிய பசுவின் வேகத்திற்கு கிரிவலம் மெதுவாக நடக்க வேண்டும்;கிரிவலம் நிறைவடையும் போது,அந்த கன்றுடன் கூடிய பசுவை அண்ணாமலை கோசாலைக்கு தானமாக தந்துவிடவேண்டும்;பொருளாதாரத்தில் வசதி குறைவாக இருப்பவர்கள்,அண்ணாமலை கிரிவலப் பாதையில் கன்றுடன் கூடிய பசுவை வைத்திருப்பவர்களிடம் பேசி,அவரையும் சம்பளத்திற்கு அழைத்துக் கொண்டு கிரிவலம் வரவேண்டும்;ஒரே நாளில் கன்றுடன் கூடிய பசுவை அழைத்துக் கொண்டு கிரிவலம் வருவது ஆச்சரியம் தான்!
கிரிவலம் புறப்படும் முன்பு,பசுவுக்கும் கன்றிற்கும் வயிறார உனவளிக்க வேண்டும்;பசுவிக்கு ஆடைகள் அணிவிக்க வேண்டும்;இப்படி ஒருவருடம் வரை தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக கறவைப்பால் சித்தரின் ஆசிகளும்,அண்ணாமலையாரின் அருளும் கிட்டும்;கிரிவலம் நிறைவு செய்த பின்னர்,கன்றுடன் கூடிய பசுவை அதன் உரிமையாளரிடம்,அவரது இருப்பிடத்தில் நமது பொறுப்பில் கொண்டு சென்றுவிட்டுவிடவேண்டும்;
எதிர்காலத்தில் பசுவின் கருப்பையும் பெண்ணின் கருப்பையும் ஒரே மாதிரியானவை என்பதை நவீன அறிவியல் கண்டுபிடிக்கும்;பெண்களுக்கும்,பசுவுக்கும் எந்த நாட்டில் அளவற்ற மரியாதை செய்யப்படுகின்றதோ,அங்கே சரியான தருணத்தில் மழை பொழியும்;சமுதாயத்தில் பெரிய அளவில் குற்றங்கள் நிகழாது;எல்லோருடைய மனதிலும் போதும் என்ற மனப்பான்மை உருவாகும்;திருட்டு,கற்பழிப்பு,நயவஞ்சகம்,மாந்திரீகம்,
அக்கிரமம் போன்றவைகள் இருக்காது;
1947 இல் நமது நாடு முழுவதும் சுமாராக 243 பசுவதைக் கூடங்களை கிறிஸ்தவ ஆங்கிலேயன் நிறுவினான்;(தான் இந்த நாட்டை விட்டுச் சென்றாலும்,இந்த நாடு முன்னேறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்)இன்று 2016 அக்டோபர்,நாடு நெடுக 30,000 பசுவதைக் கூடங்கள் 24 மணி நேரமும் நமது தாயான பசுக்களை உயிரோடு கொன்று குவிக்கின்றன;நாமோ பசுவின் பெருமைகளை அறியாததால் தான் இவைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்;இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாமா?

 நன்றி இணையம்