சித்தர்களின் குரல்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:48 | Best Blogger Tips
Image result for சித்தர்களின் குரல்

திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் யோக சுக்சுமங்களும் 
*****************************
*************************************
{யோகத்தை பயிலுபவர்களுக்கு , யோகத்தை பற்றி விரிவாக அறிய விரும்புபவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்னரே திருமூல தெய்வம் நமக்கு அளித்த யோக ரகசியங்கள் . படித்து முழுமையான பலனை பெறுவோம் .}
தியானத்தால் பிறர் மனதை அறியவும்
கேட்கவும் முடியும் (auditory hallucinations). பிறருக்கு கேட்காத
நுண்ணிய ஒலிகளை கேட்கவும் முடியும் (Micro wave hearing) என்ற அறிவியலை உணர்த்தும் திருமூலர்:
---------------------------------------------
---------------------------------
முன்பு பிறர் மனதை கேட்டு அவர்கள் வலிகளிக்கு தீர்வு சொன்ன தீர்க்கதரிசிகளை பித்தலாட்டகாரர்கள் என்று வசை பாடினர்.
பின்பு அது உண்மைதான் என்று நம்பிய அயல் நாட்டினர் அதற்கு Audio Hallucination என்றும் Micro Wave hearing என்றும் பெயரிட்டனர்.
இப்போது அதற்கான உபகரனங்களையும் கண்டுபிடித்து வருகின்றனர். ஆனால் நமது தீர்க்கதரிசி திருமூலர் என்றைக்கோ இதை பாட்டாக பாடி வத்துவிட்டார்.
வைகரி யாதியு மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈச னனாதியே செய்ததே” (திம 2007)
பொருள்:
-------------
வைகரி - செவியோசை; மத்திமை - உடலில் ஏற்படும் ஓசை; பைசந்தி - நினைவேசை; சூக்குமை - நுண்ணோசை.
வைகரை, மத்திமை, பைசந்தி, சூக்குமை இந்த ஆற்றல்கள் யாவையும் புருடன் எனப்படும் மாயயை கடந்து உயிர்களுக்கு கிடைக்கும் வகையில் என்றைக்கோ ஈசன் படத்து வைத்திருந்தான்.
இவைகளை தியானத்தின் மூலம் மனதை செம்மைப் படுத்துதல் மூலம் அடையலாம்.
அறிவியல் கூற்று:
---------------------------
இன்றைக்கு இந்த தொழில்நுட்பத்தைதான் பல Psychiatrist (மனநல மருத்துவர்கள்) பயின்று வருகின்றனர். 
இதன் வாயிலாகவே பல மனநல நோயாளிகளை குணப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் பல குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாலிகளை கண்டறியவும் இந்த தொழில் நுட்பம் உதவுகிறது.
இவையெல்லாம் விட Microwave Hearing உபகரணத்தின் வாயிலாகத்தாம் இந்த பிரபஞ்ச இரகசியகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வருகின்றனர்.
---------------------------------------------
------------------------------------
திருமூலரை நாம் சித்தர் எனவும் முனிவர் எனவும் நாம் கருதுகிறோம். ஆனால் அவர் இந்திய விஞ்ஞானி (உண்மையில் மெய்ஞானி) என்பதை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வோம்?
{இதனால்தான் ஏசுகிறிஸ்து கூட இந்தியா வந்து தியானத்தையும் சில சித்து வேலைகளையும் கற்று சென்ற வரலாறு உண்டு...
ஆதாரம்-கண்ணதாசன் பதிப்பகம்:இயேசு
கிறிஸ்து.இந்தியாவில் வாழ்ந்தார் என்ற புத்தகம்.பிரெஞ்சு எழுத்தாளருடையது.
மேலும் ஆதாரம்-இயேசுவினுடைய வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட பருவம் பைபிளில் இல்லாதது..
திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும் யோக சுக்சுமங்களும் தொடரும்..?

நன்றி இணையம்