கிரகங்கள் படுத்தும் பாடு -(37)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:06 | Best Blogger Tips


ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
ஒரு மனிதன் வீர தீர விஷயங்களில் பலமுடன் திகழவும்,துணிச்சலுடன் சவாலாக செயல்படவும் சாதகருக்கு அவரது கட்டத்தில் செவ்வாய் பகவான் பலம்பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல ஒருவர் அடாவடியாகவும்,முரட்டுதனமாகவும் செயல்படுகிறார் எனில் அவர் செவ்வாய் பகவானை லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியாகவோ கொண்டிருப்பார்.
ஒருவர் துஷ்டத்தனமாகவும்,பிறர் மனம் புண்படும்படியாகவும் பேசுகிறார் எனில் அவரது சாதகத்தின் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருக்கவோ அல்லது பார்வையோ அல்லது வாக்காதிபதியாகவோ திகழும்.
ஒருவரது ரத்த முஷ்டியாக இருக்கவும் ,மேலும் ரத்தத்திற்கும் காரகராக இருப்பதால் தொழில் ஸ்தானத்தோடு செவ்வாய் பகவான் தொடர்பு பெற்று உச்சம்,திரிகோணம் மற்றும் ஆட்சி பெற்ற நிலையில் மக்கள்போற்றும் மகத்தான மருத்துவராக்கி அழகுபார்க்கும்.மேலும் செவ்வாய்பகவான் ராகு சாரம்பெறின் அறுவை சிகிச்சை நிபுணராவார்.
ஒருவருக்கு செவ்வாய் பகவான் பலம்பெற விவசாயத்தில் சிறந்து விளங்க வைக்கும்.
சிலர் நிலச்சுவான்தாரகவும்,ரியல் எஸ்டேட் செய்து பிழைப்பு நடத்தவும் செவ்வாய் பகவானின் பலன் அவசியம்..
சிலர் காம உணர்வு மிக்கவராக மாற்றக்கூடிய திறன் செவ்வாய் பகவானுக்கு அதிகம்.செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்த அமைப்புடையவர்கள் அதிக காம உணர்வுடையவர்கள்.சுபர் பார்வை பெறின் வரம்பு மீற மாட்டார்கள்.
இதேபோல செவ்வாய் +சனி பார்வை பார்க்கும் ஸ்தானத்தை கெடுக்கும்.இவர்கள் இருவரும் இணைந்து வாக்குஸ்தான தொடர்பு பேச்சு சுத்தம் இருக்காது.எனவே இவர்கள் வழக்கறிஞருக்கு படிக்கலாம்.
செவ்வாய் பகவான் ஆனவர் லக்கனம் மற்றும் ராசிக்கு மற்றும் சுக்கிரபகவானுக்கு 
சாதகத்தில் 2,4,7,8,12 ஆம் இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் சாதகரை செவ்வாய்தோஷம் தந்து திருமணத்தடையை உண்டு பண்ணுகிறார்.
அதேநேரத்தில் செவ்வாய் ஆட்சி,உச்சம்,நீசம் பெற்ற ஸ்தானங்களும்,குரு,சனி,சூரியன் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றாலும் தோஷநிவர்த்தி ஆகும்.
செவ்வாய் மேற்கண்ட ஸ்தானங்களில் பலமாக பெற்றவர்கள் அது தனது 4,7,8 பார்வை மூலம் முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் அவர்கள் காம உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இணையாக செக்ஸ் இன்பம் தரக்கூடியவர்களை ஜோடி சேர்த்தால்தான் திருமணவாழ்வு சிறக்கும்.எனவேதான் தோஷத்திற்கு தோஷம் உடையவர்களை இணைத்தல் நலம்.மேலும் செவ்வாய் ஆனவர் நமது ரத்த தொகுதியையும் காட்டக்கூடியவர் ஆவார்.எனவே செவ்வாய் தோஷம் ரத்த தொகுதி பொருத்தமாகும்.
இதில் இரண்டு ,ஏழு மற்றும் எட்டாமிட செவ்வாய் பலமான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பகவான் பலம்பெற்று நான்காமிட தொடர்பு பெற்றவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடிய யோகம் பெற்றவர்கள்.இத்துடன் ஏழாமிட தொடர்பு திருமண மண்டபம் கட்டி பல பேர் திருமணம் செய்து கொள்ள ஏதுவாக அமைவார்கள்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்க செவ்வாய் பகவானின்
ஆதரவு தேவை.
செவ்வாய்பகவான் எலும்பு மஞ்சைக்கு காரகர் ஆவார்.எனவே செவ்வாயை பலமாக பெற்றவர்கள் பலவானாக திகழ்வார்மேலும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்.
செவ்வாய் பகவான சுபர் சாரம் பெற்று பலம்பெற்றவர்கள் ரியல் எஸ்டேட்,விவசாயம்,மருத்துவம், போன்றவையை தமது தொழிலாக செய்வார்.
செவ்வாய் பகவான் பாபர் சாரம் பெற்றவர்கள் போலீஸ்,ராணுவம்,ரொளடிதனம், போன்றவற்றை தொழிலாக பெறுவர்.
செவ்வாய் பகவானும்,மூன்றாமிடம் பலவீனப்பட்டால் கோழையாகவும்,துணிச்சல் அற்றவர்களாகவும் திகழ்வார்.இவர்களுக்கு நிலபுலயோகம் ,விவசாய யோகம் அமையாது.
செவ்வாய்+ராகு சேர்க்கை,செவ்வாய்+கேது சேர்க்கை பெற்றவர்கள்.மேலும்
செவ்வாயை பலவீனமாக பெற்றவர்கள் நாள்தோறும் செவ்வாய் பகவானின் சுலோகம் செய்து அறுபடை வீடுகளில் உள்ள முருகனை வழிபடலாம்.வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.sc,MA,BEd.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647 (இந்த எண்தான் எமது வாட்ஸ்அப் நம்பரும் )
செல் : 740 457 08 99
(போன்வழியாக தங்களது சாதக பலனைப்பெறலாம்.கட்டணம் உண்டு)
online astro consult
conduct my cell no.

 கிரகங்கள் படுத்தும் பாடு -(37)
ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்
ஒரு மனிதன் வீர தீர விஷயங்களில் பலமுடன் திகழவும்,துணிச்சலுடன் சவாலாக செயல்படவும் சாதகருக்கு அவரது கட்டத்தில் செவ்வாய் பகவான் பலம்பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல ஒருவர் அடாவடியாகவும்,முரட்டுதனமாகவும் செயல்படுகிறார் எனில் அவர் செவ்வாய் பகவானை லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியாகவோ கொண்டிருப்பார்.
ஒருவர் துஷ்டத்தனமாகவும்,பிறர் மனம் புண்படும்படியாகவும் பேசுகிறார் எனில் அவரது சாதகத்தின் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருக்கவோ அல்லது பார்வையோ அல்லது வாக்காதிபதியாகவோ திகழும்.
ஒருவரது ரத்த முஷ்டியாக இருக்கவும் ,மேலும் ரத்தத்திற்கும் காரகராக இருப்பதால் தொழில் ஸ்தானத்தோடு செவ்வாய் பகவான் தொடர்பு பெற்று உச்சம்,திரிகோணம் மற்றும் ஆட்சி பெற்ற நிலையில் மக்கள்போற்றும் மகத்தான மருத்துவராக்கி அழகுபார்க்கும்.மேலும் செவ்வாய்பகவான் ராகு சாரம்பெறின் அறுவை சிகிச்சை நிபுணராவார்.
ஒருவருக்கு செவ்வாய் பகவான் பலம்பெற விவசாயத்தில் சிறந்து விளங்க வைக்கும்.
சிலர் நிலச்சுவான்தாரகவும்,ரியல் எஸ்டேட் செய்து பிழைப்பு நடத்தவும் செவ்வாய் பகவானின் பலன் அவசியம்..
சிலர் காம உணர்வு மிக்கவராக மாற்றக்கூடிய திறன் செவ்வாய் பகவானுக்கு அதிகம்.செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்த அமைப்புடையவர்கள் அதிக காம உணர்வுடையவர்கள்.சுபர் பார்வை பெறின் வரம்பு மீற மாட்டார்கள்.
இதேபோல செவ்வாய் +சனி பார்வை பார்க்கும் ஸ்தானத்தை கெடுக்கும்.இவர்கள் இருவரும் இணைந்து வாக்குஸ்தான தொடர்பு பேச்சு சுத்தம் இருக்காது.எனவே இவர்கள் வழக்கறிஞருக்கு படிக்கலாம்.
செவ்வாய் பகவான் ஆனவர் லக்கனம் மற்றும் ராசிக்கு மற்றும் சுக்கிரபகவானுக்கு 
சாதகத்தில் 2,4,7,8,12 ஆம் இடங்களில் செவ்வாய் பகவான் இருந்தால் சாதகரை செவ்வாய்தோஷம் தந்து திருமணத்தடையை உண்டு பண்ணுகிறார்.
அதேநேரத்தில் செவ்வாய் ஆட்சி,உச்சம்,நீசம் பெற்ற ஸ்தானங்களும்,குரு,சனி,சூரியன் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றாலும் தோஷநிவர்த்தி ஆகும்.
செவ்வாய் மேற்கண்ட ஸ்தானங்களில் பலமாக பெற்றவர்கள் அது தனது 4,7,8 பார்வை மூலம் முக்கிய ஸ்தானங்களை பார்வை செய்வதால் அவர்கள் காம உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இணையாக செக்ஸ் இன்பம் தரக்கூடியவர்களை ஜோடி சேர்த்தால்தான் திருமணவாழ்வு சிறக்கும்.எனவேதான் தோஷத்திற்கு தோஷம் உடையவர்களை இணைத்தல் நலம்.மேலும் செவ்வாய் ஆனவர் நமது ரத்த தொகுதியையும் காட்டக்கூடியவர் ஆவார்.எனவே செவ்வாய் தோஷம் ரத்த தொகுதி பொருத்தமாகும்.
இதில் இரண்டு ,ஏழு மற்றும் எட்டாமிட செவ்வாய் பலமான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பகவான் பலம்பெற்று நான்காமிட தொடர்பு பெற்றவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடக்கூடிய யோகம் பெற்றவர்கள்.இத்துடன் ஏழாமிட தொடர்பு திருமண மண்டபம் கட்டி பல பேர் திருமணம் செய்து கொள்ள ஏதுவாக அமைவார்கள்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்க செவ்வாய் பகவானின்
ஆதரவு தேவை.
செவ்வாய்பகவான் எலும்பு மஞ்சைக்கு காரகர் ஆவார்.எனவே செவ்வாயை பலமாக பெற்றவர்கள் பலவானாக திகழ்வார்மேலும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்.
செவ்வாய் பகவான சுபர் சாரம் பெற்று பலம்பெற்றவர்கள் ரியல் எஸ்டேட்,விவசாயம்,மருத்துவம், போன்றவையை தமது தொழிலாக செய்வார்.
செவ்வாய் பகவான் பாபர் சாரம் பெற்றவர்கள் போலீஸ்,ராணுவம்,ரொளடிதனம், போன்றவற்றை தொழிலாக பெறுவர்.
செவ்வாய் பகவானும்,மூன்றாமிடம் பலவீனப்பட்டால் கோழையாகவும்,துணிச்சல் அற்றவர்களாகவும் திகழ்வார்.இவர்களுக்கு நிலபுலயோகம் ,விவசாய யோகம் அமையாது.
செவ்வாய்+ராகு சேர்க்கை,செவ்வாய்+கேது சேர்க்கை பெற்றவர்கள்.மேலும்
செவ்வாயை பலவீனமாக பெற்றவர்கள் நாள்தோறும் செவ்வாய் பகவானின் சுலோகம் செய்து அறுபடை வீடுகளில் உள்ள முருகனை வழிபடலாம்.வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடலாம்.
அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
M.sc,MA,BEd.
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
சோதிட ஆராய்சியாளர்,
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.
செல் : 97 151 89 647 (இந்த எண்தான் எமது வாட்ஸ்அப் நம்பரும் )
செல் : 740 457 08 99
(போன்வழியாக தங்களது சாதக பலனைப்பெறலாம்.கட்டணம் உண்டு)
online astro consult
conduct my cell no.