கிருஷ்ணரின் அருள் வார்த்தைகள் - 86

மணக்கால் அய்யம்பேட்டை | PM 11:00 | Best Blogger Tips

மனம் கொள் !!
|| ராதேக்ருஷ்ணா ||
உலகம் என்ன தரப்போகிறதோ
என்று ஏங்காதே . . .
உலகம் எதைத் தந்தாலும்
ஏற்கும் மனம் கொள் ! ! !
உலகம் என்ன சொல்லப் போகிறதோ
என்று பயப்படாதே . . .
உலகம் என்ன சொன்னாலும்
கலங்காத மனம் கொள் ! ! !
உலகம் எப்படி நடத்துமோ
என்று நடுங்காதே . . .
உலகம் எப்படி நடத்தினாலும்
ஜெயிக்கும் மனம் கொள் ! ! !
உலகம் எப்படி ஏமாற்றுமோ
என்று குழம்பாதே . . .
உலகம் எப்படி ஏமாற்றினாலும்
ஏமாறாத மனம் கொள் ! ! !
உலகத்தில் எப்படி வாழப்போகிறேனோ
என்று புலம்பாதே . . .
உலகத்தில் எப்படியும் வாழ்ந்தே தீருவேன்
என்னும் மனம் கொள் ! ! !
உலகம் என்னை ஏற்குமா
என்று சந்தேகப்படாதே . . .
உலகம் என்னை ஏற்றுத்தான் ஆகவேண்டும்
என்ற திடம் கொள் ! ! !
உலகில் நான் வீணாகிவிடுவேனோ
என்று அழுதுகொண்டிருக்காதே . . .
உலகில் நான் சாதித்துக்காட்டுவேன்
என்ற வைராக்யம் கொள் ! ! !
உலகில் எனக்கு வாழ அதிகாரம்
இல்லை என்று உளராதே . . .
உலகில் நான் சந்தோஷமாக வாழவே
வந்திருக்கிறேன் என்று நினவில் கொள் ! ! !
உலகம் என்னை மதிப்பதில்லை
என்று அஹம்பாவத்தில் ஆடாதே . . .
உலகம் என்னை மதிக்கும்படியாக
காரியம் செய்வேன் என்று நம்பிக்கை கொள் ! ! !
உலகத்தில் யாரும் எனக்கு
உதவவில்லை என்று பழிபோடாதே . . .
உலகம் உதவவில்லையென்றாலும்
நான் வாழ்ந்துகாட்டுவேன் என்ற மனம் கொள் ! ! !
உலகம் என்பது சில தேசங்கள் ! ! !
உலகம் என்பது பல கோடி மனிதர்கள் ! ! !
உலகம் என்பது சில மொழிகள் ! ! !
உலகம் என்பது பல பழக்கவழக்கங்கள் ! ! !
அவ்வளவு தான் ! ! !
இந்த உலகிற்காகவா நீ பயப்படுகிறாய் ! ? !
என்ன கொடுமை இது ? ? ?
இனி உலகம் உனக்குச் சொந்தம் என்று நம்பு ! ! !
இனி உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு ! ! !
வாழ்ந்துவிடு . . .
உலகத்தை மறந்துவிடு . . .
உலகத்தை ஜெயித்துவிடு . .

 நன்றி : இணையம்