மன்மத குளம்:

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:11 | Best Blogger Tips
மன்மத குளம்:

நம் அரசர்கள் அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது நம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் நன்கு புலப்படும். அதேபோன்று நம் கோவிலின் சிற்பங்கள் வாயிலாக பல அறிய தகவல்களையும் நாம் பெற முடியும். அவற்றில் ஒன்று கலவியல் கலை, ஆம் தற்போது உள்ள காலக்கட்டத்தில் காமம் பற்றி பேசுவது மகா பாவமாக சித்தரிக்கபடுகிறது, ஆனால் நம் முன்னோர்கள் காமமும் நம் வாழ்கையின் முக்கிய அம்சம் என்பதை நன்

கு உணர்ந்து இருந்தனர். ஆகையால் அதை கலையாக போற்றி காமசாஸ்திரத்தை கண்டு பிடித்தவ
ர்கள். அந்த கலையை சிற்பத்திலும் ஏடுகளிலும் ஏற்றி தன் சங்கதியர்க்கு விட்டு சென்று உள்ளனர்.

அவற்றில் ஒன்று தான் இந்த சின்னையன் குளம், திருவண்ணாமலை அருகில் உள்ள சின்னியம்பேட்டை என்ற ஊரில் அமைந்து உள்ளது இந்த குளம். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இது வெறும் குளம் அல்ல, மன்மத குளம் என்றும் கூறலாம். இந்த குளத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் பல நிர்வான சிலைகள் வெவ்வேறுவிதமான கலவியலில் இடுப்படுவது போன்று நிறுவபட்டுள்ளது. இதை 16-17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னையன் என்ற குறுநில மன்னன் தன் மகளின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தை போக்கி அவள் மீண்டும் தன் கணவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வாழ கட்டப்பட்டதாக கூறப்படுகிறது . இதை போன்று மற்றும் ஒரு குளம் "Kilravandavadi" என்ற இடத்தில் உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். அதே போன்று இந்த குளங்கள் நாயகர் காலக்கட்டத்தில் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் அடுத்த முறை திருவண்ணாமலை செல்பவர்கள் தவறாமல் இந்த மன்மத குளத்தையும் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்...


நன்றி: தமிழ்நாடு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நக்கீரன்(புகைப்பட உதவி)