பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள ........?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:50 PM | Best Blogger Tips

 பசும்பாலா எருமைபாலா? சுவைக்கு இது, ஆரோக்கியத்துக்கு அது! | லைப்ஸ்டைல் News,  Times Now Tamil

 

பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது...

🐃 எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.

🐂 பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.

🐃 எருமையை 2கிமீ தூரம் கொண்டு போய் விட்டு விட்டால். வீடு திரும்ப மாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.

🐂 நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.

பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.

🐃 பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.
Whose milk are you using? Cow's or buffalo's milk, -
🐂 ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே தன் தாயை அடையாளம் காணும்.

🐃 பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.

🐂 பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.

பசுவின் பாலில் மென்மை உள்ளது

🐃 எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.

🐂 பசு மே-ஜூன் சூரியனையும் தாங்கும்.

பசும்பால்-எருமைபால் வித்தியாசம் | Difference between cow milk and buffalo  milk

🐃 எருமை பெரியது மற்றும் சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரால் கன்று வளர்க்கப்படுகிறது.

🐂 பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்திலிருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்லதல்ல.

ஆனால் பசுவின் பால் உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.

எல்லாவற்றிலும் கொழுப்பைப் பார்க்கிறோம். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கொலஸ்ட்ராலை உண்டாக்குவதில்லை, அந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் என்ற விளம்பரத்தின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் பணம் கொடுத்து வீட்டிற்கு வாங்குகிறோம், எருமைப்பாலில் அதிக கொழுப்பு உள்ளது, இது கொலஸ்ட்ராலுக்கும் (கொழுப்பு உள்ளடக்கம்) காரணமாகும்.

🐃 எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.

🐂 பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

பசுக்களை பாதுகாப்போம்..
பசும்பாலையே அருந்துவோம்..!
நன்றி: அறம் செய்
அறக்கட்டளை
மயிலாடுதுறை 



  🙏       நன்றி
வாழ்க நலமுடன் 🙏

வீட்டில்_யாரேனும் #இறந்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:29 AM | Best Blogger Tips

 May be an image of temple

 

#வீட்டில்_யாரேனும் #இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " #இப்பழக்கம்_சரியா....????
 
#தவறான_வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
 
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . 
 
#இறப்பு_நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . #இடைச்_செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்களை
ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு
,அக்குடும்பத்தினருக்கு
எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்து விடும்
இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . 
 
#பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , சினிமா , செய்தித்தாள் படித்தல் , புது ஆடைகள் , ஸ்வீட்டுகள் , காபி , டீ , ருசிகர உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும்.. 
 
#கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .
#தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
 
--- ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் மாத இதழிலிருந்து.✍🏼🌹

 

கண்டவுடன் என் கண்களில் வரும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 


 

🌹🌺" வாசுதேவ ஸ்ரீகிருஷ்ணரை கண்களில் கண்டவுடன் என் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை ...என்ற  பெரியவர்..... விளக்கும் எளிய கதை 🌹🌺
--------------------------------------------------------

🌹🌺ஒரு பெரியவர் தினமும் கோவிலில் அமர்ந்து முதலில் விஷ்ணு சகஸ்ரநாமமும் பின்னர் பகவத்கீதையும் பாராயணம் செய்வது வழக்கம்.

🌺எப்போதும் விஷ்ணு சகஸ்ரநாமம் பிழையின்றி பாராயணம் செய்வார். அதன்பின் பகவத்கீதை பாராயணம் செய்யும் போது தப்பும் தவறுமாக சொல்லுவார்.

🌺இது தினமும் நடந்தேறும்
பலரும் இவரின் காது
படவே எடுத்துரைப்பார்கள்.

🌺இவரும் அடுத்த நாள் சரி செய்து கொள்கிறேன் என உறுதி கூறுவார். ஆனால் மறுநாளும் அதே கதை தொடர்ந்தது.ஒரு நாள் அத்திருத்தலத்திற்கு சைத்தன்ய மஹாபிரபு வருவதாக அறிவிப்பு செய்தார்கள்.

🌺உடனே வேத பண்டிதர்கள் கவலை அடைந்தார்கள்
மஹாப்பிரபு வரும் போது இந்த பண்டிதர் தப்பும் தவறுமாக பகவத்கீதையை பாராயணம் செய்வதை பார்த்தால் வருந்துவாரே என எண்ணி ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

🌺ஊர் பெரியவர்கள் அனைவரும் அவரிடம் சென்று ஐயா சைதன்ய மஹாபிரபு வரும் நாள் அன்று மட்டும் இங்கு அமர்ந்து நீங்க பாராயணம் செய்ய வேண்டாம்.

🌺குளக்கரையில் அமர்ந்து வழக்கம் போல் தாங்கள் பாராயணம் செய்யுங்கள் எனங்க வேண்டிக் கொண்டார்கள்.

🌺அவரும் அதை ஏற்றுக் கொண்டு மஹாபிரபு வரும் நாள் அன்று குளக்கரையில் அமர்ந்து பாராயணம் செய்ய முடிவு செய்தார்.




🌺அன்றைய நாளும் வந்தது சைதன்ய மஹாபிரபுவும் வருகை தந்தார்கள் ஊர் மக்கள் வேத கோஷம் முழங்க மங்கல வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தார்கள் அதை மகிழ்ச்சியுடன் ஏற்ற மஹாபிரபு சில நொடிகளில் தம் காதுகளில் பாய்ந்த விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் ஒலிப்பது கேட்டு கூர்ந்து கவனித்து அந்த திசை நோக்கி சென்றார்.

🌺உடனே ஊர் பெரியவர்கள் கவலை கொண்டார்கள்
எது நடக்கக் கூடாது என எண்ணினார்களோ அது நடந்தேறியது கண்டு வருத்தம் அடைந்தார்கள்.

🌺மஹாபிரபு பாராயணம் ஒலிவரும் திசை நோக்கி சென்று அப்பெரிவரை கண்டார்.


🌺அப்போது அப் பெரியவர் வழக்கம் போல் விஷ்ணு சகஸ்ரநாமம் முடித்து வழக்கம் போல் பகவத் கீதை பாராயணம் தப்பும் தவறுமாக சொல்ல ஆரம்பித்து இருந்தார்.

🌺அப்பெரியவர் சைதன்யர் வந்ததை அறியவில்லை.உடனே சைத்தன்ய மஹாப்பிரபு சாஷ்டாங்கமாக அப்பெரியவர் காலில் விழுந்து வணங்கினார்.

🌺அப்போதும் அப்பெரியவர் கவனிக்கவில்லை
உடனே சைதன்யர் அப்பெரியவரின் தோள்களை பிடித்து உளுக்கினார். உடனே அப்பெரியவர் நிமிர்ந்து பார்த்தார்.

🌺தன்னைச்சுற்றி ஊர் மக்கள் அனைவரும் கூடி இருப்பது அறிந்து கொண்டு சைதன்ய மஹாபிரபு இவராகத்தான் இருக்க வேண்டும் என எண்ணி பிரபுவின் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய முற்ப்பட்டார்.

🌺உடனே மஹாப்பிரபு அப்பெரியவரை தடுத்து அப்பெரியவரிடம் தங்கள் பாராயணத்தை இடையூறு செய்தமைக்கு முதலில் மன்னிக்க வேண்டிக் கொண்டு அப்பெரியவரிடம் பேசத் தொடங்கினார்.

🌺மஹாப்பிரபு அப்பெரியவரிடம் தங்கள் பாராயணம் செய்யும் ஒலி எம்மை இங்கு ஈர்த்து வந்தது ஊரார் அனைவருக்கும் மிகுந்த சந்தேகம் தாங்கள் தினமும் பகவத் கீதை பாராயணம் செய்யும் போது மட்டும் ஏன் தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறீர்கள் என வினவுகிறார்கள் எனக் கேட்டார்.

🌺உடனே அப்பெரியவர் கூறினார் தான் தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து விட்டு பகவத் கீதை பாராயணம் செய்ய ஆரம்பித்து முதல் ஸ்லோகம் ஆரம்பித்து உடனே கண்முன் குருக்ஷேத்திர பாரத போர் கண் முன் தெரிகிறது,

🌺இரண்டாவது ஸ்லோகம் ஆரம்பித்த உடன் கௌரவா சேனையும் பாண்டவ சேனையும் கண்முன் வருகிறது, இப்படியே ஒவ்வொரு ஸ்லோகம் ஆரம்பித்து உடனே அந்த ஸ்லோகத்திற்கான காட்சிகள் கண்முன் தோன்றுகிறது

🌺கடைசியாக அந்த புருஷோத்தமன் பாகவத ஸ்ரீகிருஷ்ணர் கண்களில் தெரிய ஆரம்பித்தவுடன் என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோடுகிறது.

🌺அதனால் எழுத்துகள் சரியாக தெரிவதில்லை ஆகவே தப்பும் தவறுமாக பாராயணம் செய்கிறேன் எனக்கூறி சரி நாளை இத்தவறை திருத்தி கொள்ள வேண்டும் என நினைப்பேன்

🌺ஆனால் வழக்கம் போல் வாசுதேவ ஸ்ரீகிருஷ்ணரை கண்களில் கண்டவுடன் என் கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை அதனால் தினம் தோறும் தப்பும் தவறுமாக பாராயணம் செய்ய நேறுகிறது என வருத்தத்துடன் கூறினார்.

🌺உடனே சைதன்ய மஹாபிரபு அப்பெரியவரை சாஸ்டாங்கமாக வணங்கி ஊர் மக்கள் அனைவரையும் அர்த்த புன்னகையுடன் பார்த்தார்கள்.
 
🌺அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிந்து அப்பெரியவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோரினார்கள்.

🌺🌹 வையகம்  வாழ்க 🌹 வையகம் வாழ்க🌹🌹🌺 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
----------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *💐🌹🌺
ஸ்ரீமஹாகாளேஷ்வர்ஜியின் இன்றைய  அலங்கார தரிசனம் 🙏🌹 

நன்றி இணையம்

❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️டேப் ரிகார்டர் ❤️ ❤️ ❤️ ❤️அது_ஒரு_கனா_காலம் ‌‌ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 PM | Best Blogger Tips

 

 m.media-amazon.com/images/I/71IbuECtVRL._AC_UF1000...


கேசட் வெளிவந்த காலத்தில்
 
இதை வீட பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் 
 
வருவதற்கு வாய்ப்பு இல்லை எனும் அளவுக்கு
 
அதை கொண்டாடி மகிழ்ந்தோம் ❤️
 
 
கேசட் ல பதிவு செய்ய பாடல்களை தேர்வு செய்ய 
 
பரிட்சை க்கு தயாராவதை போல முழு 
 
ஈடுபாட்டுடன் செய்வோம் ❤️
 
 
60 கேசட் ல 12 பாடல்கள்
 
 
90 கேட்டு ல 18 பாடல்கள்
 
 
கடைக்கார அண்ணாச்சி இடம் பதிவு செய்ய 
 
கொடுத்து விட்டு ஒரு வாரம் நடையாய் நடப்போம்
 
 அந்த காலகட்டத்தில் அவர் நமக்கு கடவுளாக 
 
தெரிவார்❤️
 
 
இளையராஜா பாடல்கள்
 
ரஜினி ஹிட்ஸ்
 
மோகன் ஹிட்ஸ்
 
என தனித்தனியாக தேர்வு செய்து பதிவு செய்து 
 
அதை கேட்கும் போது அடடா என்ன ஒரு ஆனந்தம் ❤️
 
ஒரு லைப்ரரி வைக்கும் அளவிற்கு
 
கேசட் அடுக்கி வைத்து இருப்போம்
 
என்ன என்ன பாடல்கள் என்று தேர்வு செய்து மறந்து 
 
போகாமல் இருக்க எழுதி வைத்து கொள்ளவும் ஒரு 
 
தனி நோட் வைத்து இருப்போம் ❤️
 
 
ஸ்கெட்ச் பேனாவில் ஒவ்வொரு கேசட் முகப்பிலும் 
 
அழகாக எழுதி ஆசையாக பார்த்து இருப்போம் ❤️
 
 நிலா தென்றல் வானவில் மயில் குயில் என்று 
 
வரிசைப்படுத்தி அதற்குண்டான பாடல்கள் என்று 
 
தனி தொகுப்பாக பல கேசட்டுகள் வைத்து 
 
இருப்போம் ❤️
 
 
பாடல் கேட்டு கொண்டு இருக்கும் போது ஒலிநாடா 
 
மாட்டி கொள்ளும்...
 
 
அதை நாசூக்காக வெளியே எடுத்து
 
 
அதை பழைய படி கேசட்ல சுற்றி கொள்ள ஒரு 
 
நட்ராஜ் பென்சில் தயாராக இருக்கும் ❤️
 
 
இன்று பல அறிவியல் சாதனங்கள் நம்மை 
 
ஆக்ரமித்தாலும் அன்று நாம் அடைந்த இதுபோன்ற 
 
ஆனந்தங்கள் என்றென்றும் நம் மனதில் பசுமையாக 
 
இருக்கும் ❤️
 
 
❤️அது_ஒரு_கனா_காலம் ‌‌ ❤️
❤️   ❤️

 

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்......

மணக்கால் அய்யம்பேட்டை | 3:24 PM | Best Blogger Tips

 

 

May be an illustration of temple

 

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன்......

முன்னொரு காலத்தில் குருகுலத்தில் தங்கி பலர் கல்வி கற்றனர். அவர்களுக்கு அனைத்துவிதமான போதனைகளையும் வழங்கிய அந்த குருகுலத்தின் குரு, தன்னுடைய சீடர்களிலேயே மிகவும் திறமைசாலியும், புத்திசாலியுமான சைதன்யா என்பவன் மீது கூடுதல் பாசம் காட்டினார். சைதன்யாவுக்கு 16 வயது நிரம்பி விட்டது. அவன் தன் குருவிடம் அனைத்து கலைகளையும், ஞான போதனைகளையும் கற்றுவிட்டான்.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்... - Arunachalam அருணாசலம் | Facebook

அவன் தன் வீட்டிற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த குரு, சைதன்யாவை அழைத்து, “நீ இனி இல்லம் செல்லலாம். உன்னோடு இறைவன் துணை இருப்பார்என்று ஆசி வழங்கினார்.

அதைக்கேட்ட சைதன்யா, “குருவே.. எனக்கு எல்லாம் போதித்தீர்கள். ஆனால் நான் கடவுளை காணவில்லையே. கண்ணில் தெரியாத ஒருவர் எனக்கு எப்படி துணையிருப்பார்என்று வினவினான்.

உடனே குரு, “சைதன்யா.. உன் கேள்விக்கு பதிலளிக்கிறேன். அதற்கு முன்பாக நீ ஒரு வேலை செய்ய வேண்டும். இந்த வழியாக காட்டிற்குள் புகுந்து சென்றால் அந்த பக்கம் சுனந்தநகர் என்ற ஊர் இருக்கும். அங்கே என்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசிக்கிறார். அவரை சந்தித்து நலம் விசாரித்து வாஎன்று அனுப்பினார். வழியில் உணவுக்காக தன் மனைவியிடம் சொல்லி சில பதார்த்தங்களையும் செய்து கொடுத்து அனுப்பினார்.

காட்டின் வழியாக சைதன்யா சென்று கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் சில செடிகளை தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். பின்னர் அதை முகர்ந்து பார்த்து பறித்து, தான் வைத்திருந்த பையில் சேகரித்தார். அவர் கண் தெரியாதவர் என்பதை உணர்ந்து கொண்ட சைதன்யா, அந்த நபரிடம் சென்றுஐயா.. இங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு அவர், “நான் ஒரு வைத்தியன். பாம்புக் கடிக்கான மூலிகையை தேடி வந்தேன். கண் பார்வை இல்லாததால், முகர்ந்து பார்த்து அதை சேகரிக்கிறேன். நீ காட்டிற்குள் வந்திருக்கிறாய்.. உனக்கு இந்த மூலிகை தேவைப்படலாம். வைத்துக் கொள்என்று கூறி மூலிகையில் சிறிதளவைக் கொடுத்தார்.அகங்காரம் அகன்ற மனதை ஆண்டவன் ஆட்கொள்வான் - Kungumam Tamil Weekly Magazine

அதைப் பெற்றுக்கொண்ட சைதன்யா, “ஐயா.. இங்கே. தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்க, அருகில் ஒரு கிணறு இருப்பதாக அவர் சொன்னார். அங்கு சென்று நீர் அருந்தி விட்டு பயணத்தை தொடங்கிய சைதன்யா, ஓரிடத்தில் ஓய்வெடுத்தான்.

சில பதார்த்தங்களை சாப்பிட்டு விட்டு, மரத்தடியில் தூங்கினான். அப்போது ஏதோ சத்தம் கேட்டு எழுந்தவன், அங்கே ஒரு முயல் வேகமாக ஓடுவதைப் பார்த்தான். அப்போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழப்போவதையும் சைதன்யா பார்த்தான். உடனே அங்கிருந்து அகன்றான். அவன் தூங்கிய இடத்திலேயே அந்த பெரிய கிளை விழுந்தது.

பின்னர் பயணத்தை தொடங்கியவன், இரவில் ஊரை அடைந்தான். இரவு என்பதால் ஒரு சத்திரத்தின் வாசலில் தங்கினான். அங்கே பசியோடு இருந்த ஒருவருக்கு தான் மீதம் வைத்திருந்த பதார்த்தங்களை வழங்கினான்.

பின்னர் சிறிது கண்ணயர்ந்த சைதன்யாவுக்கு ஒரு சத்தம் கேட்டது. விழித்து பார்த்த போது, அருகில் ஒருவர் வாயில் நுரைதள்ள விழுந்து கிடந்தார். அவரை விஷப்பாம்பு தீண்டி இருந்தது. உடனே தன்னிடம் இருந்த மூலிகையை சாறு எடுத்து அந்த நபருக்கு கொடுக்க, சில நிமிடங்களில் அவர் இயல்புக்கு திரும்பினார்.

அவரைக் காப்பாற்றிவிட்டு, குருவின் சகோதரர் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு, மீண்டும் குருகுலம் திரும்பினான். தான் இங்கிருந்து புறப்பட்டது முதல், வருவது வரை நடைபெற்ற அனைத்து விஷயங்களையும் தன் குருவிடம் சொன்னான். இப்போது குரு, “ஒரு வழியாக கடவுளை பார்த்துவிட்டாய் அல்லவா?” என்று கேட்டார். சைதன்யாவோ, “நான் எப்போது கடவுளைக் கண்டேன் குருவே..” என்றான்.

ஒருவரை பிழைக்க வைப்பாய் என்பதை அறியாமல், உனக்கு பாம்புக்கடிக்கான மூலிகைகளைத் தந்தாரே, அவர்தான் கடவுள். உன் தாகம் தீர்க்க, காடாக இருந்தாலும் அங்கே கிணறு வெட்டி வைத்திருந்த முகம் தெரியாதவரும் கடவுள்தான். உன்னைக் காப்பாற்ற சத்தம் எழுப்பிய முயலும் கடவுள்தான். பசியோடு இருந்தவருக்கு உணவளித்தாயே அப்போது நீ அவருக்கு கடவுள். பாம்பு தீண்டி இறக்க இருந்தவரை, காப்பாற்றியபோது அவருக்கும் நீ கடவுள். இவ்வளவு உருவங்களின் இறைவனைப் பார்த்த பிறகுமா, ‘கடவுளைக்காணவில்லைஎன்கிறாய்என்று கேட்டார், குரு. சைதன்யாவுக்கு எல்லாம் புரிந்தது. எங்கும், எதிலும் இறைவன் அரசாட்சி செய்வதை புரிந்துகொண்டான்.

தெரிந்து கொள்ளுங்கள்......

...
🙏🙏🙏🙏
🙏

நன்றி இணையம்