ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

மணக்கால் அய்யம்பேட்டை | 11:12 AM | Best Blogger Tips

May be an image of 2 people and temple 

*ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது*.

*இது இந்தியாவின் உண்மை*.

*அடுத்த 10/15 ஆண்டுகளில் இந்தியாவின் ஒரு தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது வயது மூப்பின் காரணமாக*.

*ஆம்*...

*அது நாமாகவோ*,

*நம் தாயாகவோ*, *தந்தையாகவோ, பாட்டி, தாத்தா,பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா*, *சித்தி, மாமி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்*

*இந்த உண்மையை ஒத்துக்கொண்டு மேலே படியுங்கள்*.

*நான் கூறும் இந்த தலைமுறை மக்கள் (நம் பெரியவர்கள்) முற்றிலும் வேறுபட்டவர்கள்*.

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள்,

அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் *நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்*

*வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்*

*கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து*, *பிரார்த்தனை செய்பவர்கள்*,

*தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்*.

*வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள்*,

*அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும்* *விசாரிப்பவர்கள்*

*இரு கைகளை கூப்பி* *வணங்குபவர்கள்*.

*வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக் கொள்ளாதவர்கள்*

*அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்*.

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள்

*அவர்களின் அனைத்துமே குடும்பத்தையும், உற்றார் உறவினர் நலனையும்*,

*அது மட்டுமில்லாமல் ஊறார் நலனையும்*, *அவர்களுக்கான விருந்தோம்பலையும் சுற்றி சுற்றியே வருகிறது*.

செய்தித்தாள்கள், லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள்

தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள்.

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்

*எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள்*,

*கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள்*

*சமூக பயம் உள்ளவர்கள்*,

*பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள்*

*பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்*.

*கோடையில், ஊறுகாய்*, *வடாம் தயாரிப்பவர்கள்*

*வீட்டில் உள்ள உரலில்* *இடித்த மசாலாப்* *பொருள்களைப்* *பயன்படுத்துபவர்கள்*

*எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்*.

*இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா*?

*உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா*?

*ஆம் எனில்*, *அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்*.

*மரியாதை கொடுங்கள்*

*அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்*

*இல்லையெனில்* *அவர்களோடு ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதி முக்கிய வாழ்க்கைப்பாடமும் மறைந்தே போய்விடும்*

*அதாவது, மனநிறைவு*, *எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை*,

*கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை*,

*மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள* *ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை*

*எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்*.

*எனவே இதற்காகவாவது உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்*.

*நம்முன்னோர்களே நமது அடையாளம்*.

*அவர்களே நமது முகவரி*

*மற்றும் நமது பெருமை*

🙏

*அவர்களிடமிருந்து சாஷ்டாங்க பழக்க வழக்கங்களை, வாழ்வியல் நெறிமுறைகளை நாம் கற்க வேண்டும்*.

*அப்போதுதான் நாம் நம் குழந்தைகளுக்கும்*, *நம்மைவிட வயதில் சிறியவர்களுக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்*.

*எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்*

*எண்ணுவம் என்பது இழுக்கு.

 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

எம். எஸ். சுப்பு லட்சுமி......

மணக்கால் அய்யம்பேட்டை | 11:10 AM | Best Blogger Tips

 May be an image of 1 person and smiling

எம். எஸ். சுப்பு லட்சுமி......
 
‘’ரகுபதிராகவ ராஜாராம்’ எனும் பாடல் உலகத் தமிழர்களுக்குப் பிடித்த பாடல்.மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல்.
 M.S. Subbulakshmi Songs: Listen M.S. Subbulakshmi Hit Songs on ...
‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார் காந்தி. இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது.
 M.S. Subbulakshmi passes away, aged 88 - The Hindu
திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடலே.
 M S Subbulakshmi and her music - Part 11: Neraval - Various
"இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்" என ஒருவரை பார்த்து சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார். ஆம். 
 
அவர்தான் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி.
 Vidya Balan pays visual ode to Bharat Ratna MS Subbulakshmi on her ...
எம். எஸ். சுப்புலட்சுமி யின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார். சிறந்த வீணைக் கலைஞ்ராகவும் திகழ்ந்த இவர் இசை உலகில் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப் பட்டார்.
 Black And White Portrait Of M. S. Subbulakshmi - Framed Prints by Mahesh |  Buy Posters, Frames, Canvas & Digital Art Prints | Small, Compact, Medium  and Large Variants
குடும்பத்தார் அழைத்த பெயர் குஞ்சம்மாள். 
 
அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான்.
 
சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது.
 
விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார். 
 1991-2000 – MS Subbulakshmi Biography
இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 
 
1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய்.
 
அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப் பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா.
 
ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. பெண்ணிய மனுஷி சரோஜினி நாயுடு அவர்களுடன் மகாகவி பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற மேதைகளின் தமிழ்ப் பாடல்களை மேடை தோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும்.
 
இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு "இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!" என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்றைக்கும் மிகவும் பிரபலமானது.
 
அவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான்.
 
இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது.
 
இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.
 
1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
 
1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை.
 
1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.
 
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷  🌷 🌷🌷 🌷