மணக்கால் அய்யம்பேட்டை | 10:46 AM | Best Blogger Tips

 May be an image of 1 person

மரண சடங்குகளில் பானையில் ஓட்டை போட்டு உடைப்பது எதற்கு?

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"

நந்தவனமாகிய இந்த உலகத்தில் ஒருவன் நாலு + ஆறு = பத்து மாதம் இறைவனிடம் வேண்டி பிறக்கிறான். பிறக்கும் போது தோண்டி என்கிற உடலை உயிராகிய ஜீவனுடன் இறைவனிடமிருந்து பெற்று வருகிறான். மனமே தனக்கு குரு என்று நினைக்காமல் ( இங்கு மனம் என்பது நீங்கள் நினைக்கும் மனம் அல்ல) உலகில் கூத்தாடி கூத்தாடி, தன்னுள் உள்ள இறைவனையும் மறந்து, ஜீவனையும் உடலையும் நஷ்டப்படுத்தி மண்ணுக்குள் மக்கி போகிறான்.

இதையே தோண்டியை போட்டுடைத்தாண்டி என்று கடுவெளிச் சித்தர் கூறுகிறார். இதை குறியிட்டு தான் மரண சடங்குகளில் முதலில் பானையில் ஓட்டை போடுகிறார்கள். அது, இவன் ஜீவனாகிய அந்த வித்து ஜலமாக வெளி வந்ததை குறிக்கிறது. கடைசியாக அந்த பானையை போட்டு உடைப்பார்கள். இது, இவன் பெற்று வந்த உயிர் மற்றும் உடலை உடைத்து நஷ்டப்படுத்திவிட்டான் என்பதை குறிக்கிறது. இந்த மண்பானையில் ஐம்பூதங்களும் அடங்கும் ... சரியாக யோசித்தால் புரியும்...

சடங்குகளின் மெய்ப்பொருளை அறிந்தால் மட்டுமே மரணம் எனும் தீயில் இருந்து தப்பிக்க முடியும்...

நமசிவாய நமசிவாய.

 

 

வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவோம். வாகனத்தில் அல்ல.

மணக்கால் அய்யம்பேட்டை | 10:40 AM | Best Blogger Tips

 Using Mobile Phone While Riding? A Nasty Habit Indeed! » BikesMedia.in

*திருப்புமுனையை உருவாக்குவோம்*

*வாகனத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.*
 
*அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.*
 
*அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*
 
*இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது*
 
*ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது*
 
*ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.*
 
*இந்த 4 இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்தைகள், பணம் செலவு, வருவாய் இழப்பு, குடும்ப நிம்மதி இழப்பு மற்றும் பல*
 
*ஏதாவது ஒரு இடத்தில் விபத்தில் இறந்துவிட்டார் என வைத்துக் கொள்ளுவோம். அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 20 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது.*
 
*5 மற்றும் 20 ஆண்டுகள் வாழ்க்கை தரம் பின்னோக்கி செல்கிறது என்பது ஓர் ஆய்வறிக்கை ஆகும்.*
 
*இறந்தால் காப்பீடு மூலமாக இழப்பீடு கிடைக்கலாம்.*
 
*ஆனால் மனைவிக்கு கணவர் கிடைப்பாரா?*
 
*பிள்ளைகளுக்கு அப்பா கிடைப்பாரா?*
 
*பெற்றோருக்கு பிள்ளை கிடைப்பாரா?*
 
*உடன்பிறப்புக்கு சகோதரன் கிடைப்பாரா?*
 
*ஒரு மணிநேரத்தில் 50 கிலோமீட்டர் தூரம் சென்றோம் என்றால், 12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர் (50 கிலோமீட்டர் / 60 நிமிடம் * 12 நிமிடம். அதாவது 50/60*12= 10 கிலோமீட்டர்) தூரம் தான்*
 
*10 கிலோமீட்டர் தூரம் முந்தி செல்வதில் எதையும் சாதித்துவிடுவது இல்லை அல்லவா?*
 
*சில நேரங்களில் நேரம் ஆகிட்டு என்று வேகமாக போகிறோம், அப்படி செல்வதில் 5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால் 4.15 கிலோமீட்டர் தான் முன்னால் சென்று உள்ளோம். அப்படி வேகமாக செல்வதினால் நமக்கு நாமே எமனாகி விடுகிறோம் அல்லது எதிரே வந்தவருக்கோ நாம் எமனாய் மாறிவிடுகிறோம்.*
 
*சிந்திப்பீர்*
 
 
*செயல்படுவீர்*
 
*வேகம் என்பது விவேகம் அல்ல.*
 
*5 நிமிடத்தில் ஒன்றுமே சாதித்துவிட போவதில்லை.*
 
*வேகத்தினால் நம் குடும்பத்தினரை அல்லது எதிரே வந்த நபரின் குடும்பத்தினரை கஷ்டப்படுத்தாதீர்கள்*
 
*ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 5 நிமிடம் முன்னதாகவே கிளம்பினால் எவ்வித பிரச்சினையும் இல்லை அல்லவா, ஆதலால் சரியான நேரத்தில் அல்லது 5 முதல் 10 நிமிடம் முன்கூட்டியே கிளம்புவோம்.*
 
*நம்மில் இனி மாற்றம் உருவாக்குவோமா?*
 
*திருப்புமுனையை செயல்படுத்துவோம்*
 
சாலை விதிகளை மதிப்போம் 
 
சாதனைகள் புரிவோம் 
 
சரித்திரம் படைப்போம். 
 
வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவோம். 
 
வாகனத்தில் அல்ல. 
 
🏍🏍🏍🛵🛵🛵🚙🚙🚙🚙🚕🚕🚕🚗🚗🚗🚌
🚌

 நன்றி இணையம்