தமிழன் இந்து அல்லவா?.......

மணக்கால் அய்யம்பேட்டை | 1:06 PM | Best Blogger Tips


தமிழன் இந்துதான்
சமூக வலைத்தளங்களில் "தமிழன் இந்து அல்ல" என்று பரப்பப்படும் வதந்திகளுக்கு தீர்வு காணும் வகையில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கான பதிலையும் தொகுத்துள்ளேன்.

1. திருக்குறளில் இந்து தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. அதனால் திருக்குறள் காலத்திற்கு பின் தான் இந்து மதம் தமிழகத்திற்கு வந்தது.

பதில் :
திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான்.
மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும்
அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும்
பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும்

மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம்.

இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம்,

எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும்
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
(ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்)

இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

(ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.)

செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து
(செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
(தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?)

மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
(தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்)

அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி
குறுக தறித்த குறள் ;
என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான்,
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
திருநீறில்லா நெற்றி பாழ்

தேவர் குறளும் திருநான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்.  என்றாள்.

அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான்.

இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே !

2. திருக்குறள் தவிர வேறு எந்த நூல்கள் இந்து சமய தெய்வங்களை புகழ்ந்து பாடியுள்ளன .

இவ்வளவுதானா என்றில்லாமல் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பதற்கு நிறைய ஆதாரம் காண்பிக்க முடியும் என்றாலும் உதாரணமாக மட்டும் சில சங்க இலக்கிய பாடல்கள்

நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ....
சாவந்தாங்கிய, சாந்துபுலர் திணிதோள்,
ஆர்வ நன்மொழி ஆயும்...
(சிறுபாணாற்றுப்படை, 95-99)

பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த சிவப் பெருமானுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்..

பரிபாடல்

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம்.

ராமன் திருவடி பெருமையைப் பாடும் சிலப்பதிகாரம்
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே ;
(சிலப்பதிகாரம் -ஆய்ச்சியர் குரவை - ராமன் திருவடி பெருமையை கேளாத செவியை செவியாகவே மதிக்கவில்லை இளங்கோவடிகள் )

அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
சிலப்பதிகாரம் - புறஞ்சேரியிறுத்த காதை மூலம் ராமனை பாடுகிறது. (ராமனை பிரிந்து அயோத்தி நகர் வாடியதை போலும் என்று )

முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,
‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’
(அகம்., பா.எ., 59)

இப்படி எந்த தமிழ் நூலை இலக்கியங்களை எடுத்துக்கொண்டாலும் நமது சமய இறைவனை பாடாமல் இருக்காது. இவை தவிர்த்து தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் தமிழில் உள்ளன. தமிழுக்கு இந்துமதமும் இந்துமதத்திற்கு தமிழும் ஆற்றிய பங்கு நகமும் சதையும் போல. பிரிக்க முடியாதது.

3. தொல்காப்பியம் கூறும் தமிழர் ஐந்திணை தெய்வங்கள் சிறுதெய்வ வழிபாடு அது இந்து மதம் சாராதது :

பதில் : இந்திரன் , திருமால், காளி, வருணன்,முருகன் இவர்கள்தான் ஐந்திணை தெய்வங்கள். இவர்கள் ஹிந்து மத தெய்வங்கள் இல்லாமல் யார் ? மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் வழிபடுகிறார்களா ?  நம் தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெரு தெய்வங்கள் என்று சொல்வதே தவறு. இது திரிபுவாதம். சம்ஸ்கிருத வேதங்கள் நம் இறைவனை பாடினால் அவர்கள் நம் தெய்வங்கள் இல்லாமல் போய்விடுவார்களா? நமது  திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதால் அது  ஆங்கிலேயர்கள் நூலாகிவிடுமா ?

மேலும்தொல்காப்பியம் ஒரு இலக்கண நூல். பக்தி இலக்கியம் அல்ல. ஆனால் அவரது குருவாக விளங்கியவர் அகத்தியர். அகத்தியரின் அகத்தியம்தான் தமிழின் முதல் இலக்கண நூல். அகத்தியத்தை ஒட்டியே தொல்காப்பியர் தமிழ் இலக்கண நூலை வடிவமைத்தார். தொல்காப்பியரின் மற்ற நூல்கள் கிடைக்கபெறவில்லை. ஆனால் அகத்தியரின் சிவபக்தியும்  அவர் நமது ஹிந்து மதத்திற்கு ஆற்றிய தொண்டும்  நாம் அனைவரும் அறிந்ததே.

4. சமணர்கள் காலத்திற்கு பின்தான் இந்துமதம் தமிழகத்தில் பரவியது
பதில் : அடிப்படை ஆதரமில்லாதது. மேலே உள்ள விவரங்களை திரும்ப படித்தல் தெளிவு பிறக்க செய்யும். சமண சமயத்தை நமது தமிழ் மன்னர்கள் தழுவிய போது சில சிவாலயங்கள் மூடப்பட்டன. இடித்து சமண புத்த விகார்களாக கட்டப்பட்டன. பின்னர் வந்த சமயகுரவர்கள் காலத்தில், தமிழ் மன்னர்களுக்கு ஞானம் புகட்டப்பெற்று மீண்டும் மூடப்பட்ட சிவாலயங்களும், விகார்களாக மாற்றப்பட்ட இன்ன பிற ஆலயங்களும் மீண்டும் நமது தர்ம கோவில்களாகவே புத்துயிர் பெற்றன. (உதாரணம் : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் )

5. நரகாசூரன், சூரபத்மன், ராவணன் அசுரர்கள்  என்போர் தமிழர்கள் , ராமன் ஆரியன்
பதில் : ராவணனும் பிராமணன்தான். இந்தியாவில் ஐந்து கோவில்கள் ராவணனுக்கு உண்டு.  அதில் ஒன்று கூட தமிழகத்தில் இல்லை. அவன் தமிழகத்தில் வழிபடப்படவும் இல்லை. இராவணன் தமிழன் என்றால் அவனை பின்பற்றி அனைவரும் சிவ வழிபாடு செய்யும் சைவர்களாக மாற தயாரா ? அசுரர்கள் அனைவரும் தமிழர்கள் என்றால்  சூரபதுமன் யார் ? அவன் ஏன் தமிழ் கடவுள் முருகனால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் ? நரகாசுரன் உள்பட அனைத்து அசுரர்களையும் நாம் அறிந்தது எல்லாம் இந்து மத புராணங்களில்தான். வேறு ஆதாரம்  இல்லை. தனக்கு வசதிப்படும் ஒரு சிலவற்றைமட்டும் எடுத்துக்கொண்டு தமிழனை குழப்பும் வீணர்கள்வீண் முயற்சி அதை யாரும் நம்பப்போவதில்லை. அசுரர்களை  தமிழர்களாகவும் தேவர்களை ஆரியர்களாகவும் கற்பனை செய்து மக்களை  குழப்புவது திராவிட  வியாதி. நெற்றிக்கண் திறந்தாலும் குற்றத்தை கண்டிக்கும் தமிழ் மரபு நம்முடையது. தவறு செய்யும் அசுரர்களை சும்மா விடுமா ?

6. ஹிந்து என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களில் இல்லை.
பதில் : தமிழ்நாடு என்ற வார்த்தைகூட 100 ஆண்டுகளுக்கு முன் இல்லை. சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்றுதான் இருந்தது. ஒன்றிணைந்த பின் அது தமிழகமாகியது. பல மாநிலங்கள் கூட்டினையும் முன் இந்தியா பாரதம் என்றே அழைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு என்ற வார்த்தைகூட அந்த  காலத்தில் அவ்வாறு அழைக்கப்படவில்லை. அது ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்டது. அது போல ஷண்மதங்கள் ஹிந்து மதமாக ஒன்றிணைவதற்கு முன் சைவம், வைணவம், ஷாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம் என்று ஆறு பெயரில் இருந்தது. ஹிந்து மதம் என்று நாம் அழைக்கத்துவங்கும் முன்பும் இந்துமதம்  சிறப்பொடு தொழப்பட்டுதான்  வந்தது. பெயர்  புதியதனாலும் தெய்வங்கள் இருந்தது உண்மைதானே !  2000 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்படாத சொல்லை இப்போது பயன்படுத்துவது தவறு என்று சொல்வதானால், அதே காலக்கட்டத்தில்   ஏசு, அல்லா போன்ற தெய்வங்களும்  இல்லையே . அதனால் வழிபடல் ஆகாது என்று சொல்ல முடியுமா ?

மேலும் சமீப காலமாக ஆங்கிலேயர்கள்தான் நமது சமயத்திற்கு ஹிந்து என்று பெயரிட்டதாக திட்டமிட்டே பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. அதற்கான ஆதாரம் பின்வருமாறு:

7. தமிழ் மன்னர்கள் தம் பெருமைக்காக கட்டியவைதான் இந்து கோவில்கள்.
பதில்: தமிழ் மன்னர்கள் தங்கள் பெருமைக்காக கட்டுவதாக இருந்தால் தமது  அரண்மனையைத்தான் சிறப்பாக கட்டி இருப்பார்கள். அவர்கள் கட்டிய எண்ணிலடங்காத ஆலயங்கள் அவர்களின் பக்தி சிறப்பையே உணர்த்துகிறது. சோழனின் தஞ்சை பெரிய கோவில், பல்லவனின் மல்லை, பாண்டியனின் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், காஞ்சி, தில்லை என்று எந்த கோவிலை எடுத்தாலும் அதில் அவன் கட்டிட கலையும் , பக்தியும் மட்டுமே நமக்கு தெரிய வருகிறது. குறிப்பாக உத்திரகோசமங்கை சிவாலயம் "மண் முந்தியதோ மங்கை முந்தியதோ " என்ற முதுமொழி உடைய பழைய கோவில் என்றால் தமிழன் சிவபக்தி எவ்வளவு பழையது என்று பாருங்கள்.

மற்ற மதத்தை சார்ந்தவர்கள் தங்கள் தெய்வங்கள் இன்னதென்று கண்டுபிடிக்காத காலத்திலேயே தமிழர்கள் விண்ணில் உலவும் கிரகங்களை கண்டுபிடித்து கோவிலில் வைத்து வழிபட தொடங்கியவர்கள் தமிழர்கள் என்பது எவ்வளவு பெருமைக்குரிய விஷயம்.

8. ஹிந்து மதத்தில் ஜாதி கொடுமைகள் அதிகம். எனவேதான் அதிகமான மதமாற்றம்இங்கு நிகழ்கிறது.

பதில்: இந்து மக்களை இப்படி  சிறுபான்மை, பெரும்பான்மை என்று பிரித்து பேசுவதே தவறு. அரசியல் லாபத்துக்காக மக்களை பிரித்தாள்வது கயமைத்தனம்.  இந்து மதத்தை விட்டு ஓடி ஒழியாமல்,   ராமானுஜர் வழியில், ஆதிசங்கரர் வழியில் ஜாதிய அடக்கு முறைகள் கண்டிக்கப்பட ஒழிக்கப்பட வேண்டும், நிறுத்தப்படவேண்டும் என்பதில் இங்கு யாருக்கும் மாற்றுக்கருத்தே இல்லை. இஸ்லாம் போன்ற 1500 வருட மதத்தில்  லெப்பை, ராவுத்தர், பட்டாணி, உள்ளிட்ட பல்வேறு ஜாதி பிரிவுகளும் ஷியா, சன்னி , சூபி  பிரிவுகளும் எப்படி  வந்தது.  கிறிஸ்தவத்தில் மேரி மாதா வழிபாட்டு ஆலயங்கள், சி ஸ் இ, பெந்தேகோஸ்தே, செவென்த் டே,  ஆர்சி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் பிரிவுகள் எப்படி வந்தது. எனவே உட்பிரிவுகள் என்பது காலமாற்றத்தின் அடிப்படையில் நடந்துவிட்டது.அது தவிர்க்கப்பட்டு நாம் அனைவரும் தூய்மையான ஹிந்து தர்மம் பின்பற்றும் தமிழராக இந்தியராக  வாழ்வதும் இணைவதும்  அவசியம்.

9. தமிழருக்கு என்று ஒரு தேசியம் தமிழ் தேசியம் அவசியம்.
பதில்: அவசியமில்லாதது. என்றைக்கு தமிழகம் தேசிய நீரோட்டத்தில் பயணித்து , தேசியக்கட்சிகளுக்கு தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வருகிறார்களோ அன்றுதான் தமிழகத்தின் நெடுநாள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இந்தியாவிற்கு தேவை உணர்வார்ந்த தமிழனின் தேசிய தலைமை. பசும்பொன் தேவரைப்போல, காமராஜரை போல. மாநிலக்கட்சிகள் தங்கள் அரசியல் தேவைக்காக தமிழக மக்களை தூண்டிவிட்டு இந்திய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் சிந்தனை மழுங்க செய்து  அவர்கள் நடத்தும் நாடகம்தான் தமிழ் தேசியம், திராவிடம் என்பதெல்லாம்.

10.தமிழன் இந்துவாகத்தான் இருந்திருக்க வேண்டுமா ?

பதில்: ஆம். நம் வீட்டு பெண்களால் வீட்டு வாசல்களில் வரையப்படும் கோலங்களில் இருந்து, வானளாவ நிற்கும் கோவில்கள், அழகு நிறைந்த சிற்பங்கள், கட்டிடக்கலை, கருநாடக இசை, ராமாயண, வள்ளி திருமண நாடகங்கள்,

11 தமிழ் மாதங்களுக்குமான பொங்கல் விழாக்கள், தீபாவளி, ஊர் பொங்கல், தெரு பொங்கல், தேர் திருவிழா என்று நமது பண்பாடு அனைத்தையும் தமிழன் இந்து மதம் சாராதவனாக இருந்திருந்தால் யார் பின்பற்றுவார்கள் ? தமிழன் இந்துமதம் சாராதவனாக இருந்தாஇதெல்லாம் செய்தான்? சிந்திப்பீர்.

முடிவாக,
இந்தியா முழுமைக்கும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது என்றால் அது ஹிந்து சமயம் மட்டும்தான். எனவே தமிழன் இந்துவாக இருந்துவிட்டால், ஒரே மதம் என்ற அடிப்படையில் மாநில எல்லைகளை கடந்து ஜாதிகளை அழிக்கும் விழிப்புணர்வுற்று அவன் இந்திய நீரோட்டத்தில் இந்தியனாக பயணிப்பான். இது நடந்து விடக்கூடாது.  இப்படி நடந்தால் நம் அரசியல் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்ட சில அந்நிய சக்திகள்தான் தமிழன் இந்து இல்லை என்று பரப்புகிறது. ஹிந்து கலாச்சாரத்தையும் தமிழினத்தையும் பிரிப்பதென்பது கனவிலும் கூட நடக்காத ஒன்று. அந்த தமிழ்விரோத சக்திகள் தங்கள் மனதை தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள  வேண்டுமானால் தமிழனுக்கு மதம் இல்லை, தமிழன் மதம் சாராதவன் என்று சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம். ஆனால் தமிழன் இந்து மதம் சார்ந்தவன்தான் என்பது மறுக்க முடியாதது. வெற்று வார்த்தைகளால் மறைக்க முடியாதது. தமிழன் என்றாலே இந்துதான்.  தமிழன் இந்துதான்.
நூல்-புஸ்தஸ்ம்ருதி : இந்து என்ற வார்த்தை கிமு நாலாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூலில் உள்ளது

ஹிந்து என்ற வார்த்தை ஆங்கிலேயர் சூட்டியதல்ல .
ஹிந்து என்ற சொல் யாரால் கொடுக்கப்பட்டது?
ஸ்ரீகுருஜி மாதவ_சதாசிவகோல்வால்கர் :-
’ஹிந்து’ என்ற சொல் சமீபகாலத்தில் தோன்றிய சொல் என்பதோ, அது  அந்நியர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பெயர் என்பதோ சரியல்ல...
உலகிலேயே மிகப்பழமையான நூலான ரிக்வேதத்தில் வரும் ’ ஸப்தஸிந்து’ என்ற பெயர், நமக்கும் நம் நாட்டிற்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காண்கிறோம். மேலும், சம்ஸ்கிருத மொழியில் உள்ள ‘ஸ’ என்ற எழுத்து, புராதன மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் ‘ஹ’ என்று மாறி வருவது நாம் அறிந்ததே. எனவே அந்தச்சொல், ‘ஹப்தஹிந்து’ என்று மாறி, பிறகு  ஹிந்து என்ற சொல்லாக வழங்கி வருகிறது. ‘ஹிந்து’ என்ற சொல் நம் முன்னோர் இட்ட பெயர். பிற்காலத்தில் அந்நியர்களும் இதே பெயராலேயே நம்மை அழைத்தார்கள்...
பிருகஸ்பதி ஆகமத்தின்படி, ஹிமாலயம் என்பதிலிருந்து ‘ஹி’ என்ற எழுத்தையும் இந்து_ஸரோவர் (குமரிக்கடல்) என்பதிலிருந்து (இ)ந்து என்ற எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு ‘ஹிந்து’ என்ற பெயரைத் தோற்றுவித்திருக்கிறார்கள். இவ்வாறு தேசம் முழுவதையும் குறிக்கும் சொல்லாகிறது ‘ஹிந்து’...
ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷ்யதே (பிருகஸ்பதி ஆகமம்)
(இமயமலை முதல் இந்து ஸரோவரம் (குமரிக்கடல்) வரை பரந்துள்ளதும், இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுமான நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது)
நெருக்கடிகள் மலிந்த ஆயிரம் ஆண்டு காலத்தில் ஹிந்து என்ற சொல்தான் நம்மைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பிருதிவிராஜ் காலத்திலிருந்து நம் நாட்டுக் கவிஞர்கள், சரித்திர ஆசிரியர்கள், சமுதாயத் தலைவர்கள், அரசியல் நிபுணர்கள் அனைவரும், நம்மையும் நமது தர்மத்தையும் ‘ஹிந்து’ என்ற பெயரால்தான் குறிப்பிட்டு வருகின்றனர்....
சுதந்திரப்போராட்ட வீரர்களான குரு கோவிந்த சிம்மன், வித்யாரண்யர், சிவாஜி போன்றோரின் கனவு ‘ஹிந்துஸ்வராஜ்ய’த்தை நிறுவுவதே. ‘ஹிந்து’ என்ற சொல் அப்படிப்பட்ட வீரர்களின் லட்சிய வாழ்க்கை, தீரச் செயல்கள் அனைத்தையும் நம் நினைவிற்குக் கொண்டு வருகிறது. இவ்வாறு ‘ஹிந்து’ என்ற சொல், நம் மக்களின் ஒருமைப்பாட்டையும்_உயர்வையும்_சிறப்பையும் குறிக்கும் சொல்லாக உள்ளது. நம்சமுதாயத்தைக் குறிப்பது ‘ஹிந்து’ என்ற சொல்லே.
நூல் : 

நன்றி : ஸ்ரீகுருஜிசிந்தனைக்களஞ்சியம், பாகம் 11, பக்.129-130 !!!

*நம் எண்ணமும்...நம் நட்பும்...!!*

மணக்கால் அய்யம்பேட்டை | 11:25 AM | Best Blogger Tips


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

*💗இன்றைய சிந்தனை....*

*நம் எண்ணமும்...நம் நட்பும்...!!*

நம்மை சுற்றி இருப்பவர்கள் எல்லோரையும் நாம் நண்பர்களாக ஏற்பதில்லை. சிலரை ஏற்கிறோம். சிலரை மட்டுமே உயிர் நண்பர்களாக மதிக்கிறோம்.

அவர்களிடமே நமது ரகசியங்களை பகிர்கிறோம். நமக்கான ஆறுதலையும் நம்பிக்கையையும் தேடுகிறோம். 

சங்ககாலம் முதல் இந்த நவீன ஊடக காலம் வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள்.

நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். 

5 வயதில் அறிமுகம் ஆகும் சில நண்பர்கள் ஆயுள் முழுக்க தொடர்ந்து வருவது நமக்கு கவுரவம் கூட. 

இன்றளவும் பலரின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டு வருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது நல்ல நண்பர்கள் மட்டுமே..

ஒரு கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர்.கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார்.

கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர்.

மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார்.அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார்.

அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார்.

ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், “ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன்,” என்று கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன்.

பணப்பெட்டியும் திறந்தே இருந்தது. அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த அவனின் நண்பன் ஒருவன் அங்கே வந்தான்.

”அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம்,” என்று யோசனை கூறினான்.

திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா? என்ற தயக்கம்…தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை.

சிறிது நேரம் சிந்தித்தவன், “”தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை.” என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.

சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம், ””எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா?  என்று பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான்.

கடைக்காரரோ,””ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால்தான் கடையை ஒப்படைத்து சென்றேன். அதனால்பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவை இல்லை,” என்றார்.

கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது.“ உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு தூய்மையாகி விட்டதே..

வாழ்நாளெல்லாம் உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பு கிடைத்தால் அதைவிட எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றான்.

கடைக்காரர்,, ''நீ சொல்வது புரிய வில்லையே!”, என்றார்.

”ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன்.என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம்.. ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது.

இனி ஒருநாளும் திருட மாட்டேன்,” என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான்.

ஆம்.நண்பர்களே..,

ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும்,, நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும்.

ஒருவன் தான்செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ் பெற்றிருக்க முடியும்.

*அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும்,*
*நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.*

*💗வாழ்க வளமுடன் 💗*

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


நன்றி இணையம்

இப்படி ஒரு தலைவனை.... #M_R_காந்தி ஜி....!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:07 PM | Best Blogger Tips


இதுவரை நான் கண்டது இல்லை இப்படி ஒரு தலைவனை....
#M_R_காந்தி ஜி....!!!!!

யார் இந்த #M_R_காந்தி ஜி...?

ஒரு காலத்தில் பெரிய கோடீஸ்வரர், நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள கடைகள் இவருக்கு சொந்தமானவை,
ஆனால் இன்று இவருக்கு என்று சொந்தமாக வீடு கூட கிடையாது,
தன்னிடம் உதவி என்று வருவோருக்கு இல்லை என்று கூறாத மனிதர்..
இன்று வரை..

மண்டைக்காடு கலவரம் பின்பு இந்து முன்னணி இயக்கம் தொடங்கவும், குமரியில் BJP கால் ஊற்றவும் அரும்பாடு பட்டவர்....

குமரி மாவட்டத்தில் இந்துகளுக்கு ஆதரவாக எங்கேனும் ஒரு குரல் கேட்டால் அங்கே ஒரு கருத்து சிறுத்த உருவம் தென்படும் அவர்தான்  #MR_காந்தி

அந்நிய மதத்தவரால் இந்துக்களுக்கு இழைக்கபடும் கொடுமைகளுக்கு எதிராக காவல் நிலையங்களில் நள்ளிரவு 12 மணிக்கும் ஒரு இந்து குரல் கேட்கும் அவர்தான் #MRகாந்தி

குமரி மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டங்களில் 4 பேர் இருந்தாலும் 40000 ஆயிரம் பேர் இருந்தாலும் முதல் நபராக ஒரு ஆள் இருக்கும் அவர்தான் #MR_காந்தி

குமரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு குரல் கேட்கும் அந்த குரலின் சொந்தகார்ர் தான் #MRகாந்தி

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மதிப்பெண் குறைவாக பெற்ற ஏழை மாணவர்களுக்கு அட்மிசனுக்காக காத்திருக்கும் பெற்றோர் கூட்டத்தில் கால் கடுக்க காத்து நிற்கும் அந்த முதியவர் தான் #MR_காந்தி

இந்து இயக்கத்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களிலோ துக்கங்களிலோ யாரும் அழைக்காவிடிலும் ஒருவர் வந்து அந்த சுக துக்கங்களில் பங்கு கொள்வார் அவர் தான் #MR_காந்தி

சாதரண தெருக்குழாய் பிரச்சினை முதற்கொண்டு அதிதீவிர பிரச்சினைகளுக்காக அடித்து கொள்ளும் நம்மவர்களிடையே சமாதானம் பேசும் மாமனிதர் தான் #MR_காந்தி

ஜனசங்க காலத்திறகு முன்பு இருந்தே இந்துத்வ வீரனாக வலம் வரும் ஒரு வயதான வாலிபர் தான் #MR_காந்தி..

 பாரத மாதா மீது கொண்ட பற்றால் பாதணி அணியாதவர்.

        எளிமையை தான் ஏற்றுக் கொண்டு இனிமையை தொகுதிக்கு தர வல்லவர்.

முன்பு விருது நகருக்கு காமராஜர் வாய்த்தது போல நாகர் கோவில் தொகுதிக்கு கிடைத்த நல்ல வரமாக திகழக் கூடியவர் திரு ௭ம் ஆர் காந்தி ஜி அவர்கள்.

       தமிழகத்திற்கு அரசியல் வழி காட்டியாகத் திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர் கோவில் தொகுதியில் இவர் வென்றால் எம் .எல் .ஏக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பு உள்ளது.

       தனக்கென்று வாழ்க்கையோ அல்லது வரலாரோ இல்லாமல் நாட்டின் வளத்திற்க்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் சட்டமன்றம் செல்வது அந்த சட்டமன்றத்திறகு தான் பெருமை...
அவரை  வாக்களிப்பது சட்ட மன்றத்திற்கு அனுப்புவது  நமக்கு தான் பெருமை....



நன்றி இணையம்

மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. நம் சந்ததிக்கு.... ....

மணக்கால் அய்யம்பேட்டை | 7:13 PM | Best Blogger Tips



20 வருட கடும் போராட்டத்துக்கு பின் வியட்நாம் அமெரிக்காவை வென்றது..(1955-1975)


போர் முடிந்ததும் ஒரு செய்தியாளர் வியட்நாம் அதிபரை பார்த்து கேட்டார்...


இது எப்படி சாத்தியம்..???

ஒரு சிறிய தெற்காசிய நாடு..வல்லரசு அமெரிக்காவை தோற்கடித்தது எப்படி???

அதற்கு அந்த அதிபர் அமெரிக்க போன்ற வல்லரசை தோற்கடிப்பது மிகவும் கடினம்..


ஆனால் ஒரு சரித்திர புகழ்பெற்ற மாவீரனின் வீரமும் தீரமும் செறிந்த கதையை படித்தேன்.....அது எனக்குள் எழுப்பிய கனலால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியது...அவரின் போர் தந்திரங்கள்.. யுக்திகளை எங்கள் போரில் கடைபிடித்தோம்..வெற்றி கிடைத்தது என்றார்...


யாரந்த மாவீரன்... பேரரசன்..என பத்திரிகையாளர் வினவ...


வேறு யாருமில்லை.. 


கிழக்காசியாவை வென்ற ராஜராஜ சோழன் தான்... 


வியட்நாமில் மட்டும் இப்படி ஒரு மாவீரன் அவதரித்திருந்தால் இந்நேரம் உலகம் எங்கள் கைகளில் இருந்திருக்கும்..என்றார்.


சில வருடங்கள் கழித்து அந்த அதிபர் இறந்து போனார்...


அவரது கல்லறையில் அவரது விருப்பப்படி பொறிக்கப்பட்ட வாசகம்...


""ராஜராஜனின் பணிவான பணியாள் இங்கே ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்...""


இப்பொழுதும் அங்கே சென்றால் அதை நீங்கள் காணலாம்...


சில வருடங்கள் கழித்து வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வர நேரிட்டது..


நம்மாட்களும் வழக்கம் போல இந்த காந்தி சமாதி..சக்தி ஸ்தல்..செங்கோட்டை... அது இதுனு சுத்தி காட்ட....


அலுத்து போன அமைச்சர்..ராஜராஜன் பிறந்த ஊர், அரண்மனை,சிலை எங்கே உள்ளது என அதிகாரிகளை கேட்க

அவர்கள் ஆச்சரியத்துடன் அது தமிழ் நாடு தஞ்சாவூர்ல இருக்கு என்றனர்...

உடனே தஞ்சாவூர் போக வேண்டும் என  வியட்நாம் அமைச்சர் கூற ...படைதஞ்சாவூருக்கு பறந்தது..


அங்கு சென்று தஞ்சை பெரிய கோவிலில் அவர்கள் சிலைக்கு அஞ்சலி செலுத்திய பிறகு...கையளவு மண்ணை அள்ளி மரியாதையுடனும்...வாஞ்சையுடனும்...தன் பையில் சேமித்து கொண்டார்...


 இதைக்கண்ட பத்திரிகைகள் வழக்கம் போல வினா எழுப்பின...


இந்த மண்..வீரமும்.. வெற்றியும்..நிறைந்த ராஜராஜன் பிறந்து வளர்ந்த மண்..

வியட்நாம் சென்றடைந்ததும் என் தேச மண்ணில் இந்த மண்ணை கலந்து விடுவேன்...

இனி வியட்நாம் மண்ணில் பல்லாயிரம் ராஜராஜ சோழன் பிறக்கட்டும் என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக..


 இது போன்ற நிகழ்வுகள் நீங்கள் எங்கும் படிக்க நேர்ந்திருக்காது .இப்படி பாடபுத்தகத்தில் படித்து வீரம் மிக்க தலைமுறை ஏற்பட்டுவிட்டால்...

என்னாவது...???


ஆனாலும் மறைக்கப்பட்ட வரலாற்றை நாம் கூறுவோம்.. 

நம் சந்ததிக்கு.... .... 

*படித்ததில் பிடித்தது*


நன்றி இணையம்

சிவபெருமானை பற்றி.....

மணக்கால் அய்யம்பேட்டை | 7:01 PM | Best Blogger Tips




சிவபெருமானை பற்றி அனைவரும்
 தெரியவேண்டுபவை 🌺🌺

1.சிவ சின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

         சிவ சிவ 🙏🙏

நன்றி இணையம்

பவுர்ணமி பர்வதமலை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:35 PM | Best Blogger Tips


முடிந்தால் சென்று  அனைவரும் ஆனந்தம் அடையுங்கள்.

*பர்வதமலை:*


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து

தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை
என்கிறார்கள்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி

வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு
சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய

பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து
சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.


சிறப்புகள்:::


பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த

பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது
விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள

செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட
அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து

வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின்
கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன்
அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து

பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும்.
மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக்
காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள்

இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக
நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள்
வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில்
உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி

ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ
சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த
மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்
என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு.   26 கி.மீ.,

சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால்
கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று
இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி

வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து
கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும்
காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:


மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு

விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு
முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள
சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.


நன்றி