இப்படி ஒரு தலைவனை.... #M_R_காந்தி ஜி....!!!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:07 | Best Blogger Tips


இதுவரை நான் கண்டது இல்லை இப்படி ஒரு தலைவனை....
#M_R_காந்தி ஜி....!!!!!

யார் இந்த #M_R_காந்தி ஜி...?

ஒரு காலத்தில் பெரிய கோடீஸ்வரர், நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள கடைகள் இவருக்கு சொந்தமானவை,
ஆனால் இன்று இவருக்கு என்று சொந்தமாக வீடு கூட கிடையாது,
தன்னிடம் உதவி என்று வருவோருக்கு இல்லை என்று கூறாத மனிதர்..
இன்று வரை..

மண்டைக்காடு கலவரம் பின்பு இந்து முன்னணி இயக்கம் தொடங்கவும், குமரியில் BJP கால் ஊற்றவும் அரும்பாடு பட்டவர்....

குமரி மாவட்டத்தில் இந்துகளுக்கு ஆதரவாக எங்கேனும் ஒரு குரல் கேட்டால் அங்கே ஒரு கருத்து சிறுத்த உருவம் தென்படும் அவர்தான்  #MR_காந்தி

அந்நிய மதத்தவரால் இந்துக்களுக்கு இழைக்கபடும் கொடுமைகளுக்கு எதிராக காவல் நிலையங்களில் நள்ளிரவு 12 மணிக்கும் ஒரு இந்து குரல் கேட்கும் அவர்தான் #MRகாந்தி

குமரி மாவட்டத்தில் இந்து இயக்கங்கள் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டங்களில் 4 பேர் இருந்தாலும் 40000 ஆயிரம் பேர் இருந்தாலும் முதல் நபராக ஒரு ஆள் இருக்கும் அவர்தான் #MR_காந்தி

குமரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு குரல் கேட்கும் அந்த குரலின் சொந்தகார்ர் தான் #MRகாந்தி

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மதிப்பெண் குறைவாக பெற்ற ஏழை மாணவர்களுக்கு அட்மிசனுக்காக காத்திருக்கும் பெற்றோர் கூட்டத்தில் கால் கடுக்க காத்து நிற்கும் அந்த முதியவர் தான் #MR_காந்தி

இந்து இயக்கத்தவர்களின் இல்லங்களில் நடைபெறும் விசேஷங்களிலோ துக்கங்களிலோ யாரும் அழைக்காவிடிலும் ஒருவர் வந்து அந்த சுக துக்கங்களில் பங்கு கொள்வார் அவர் தான் #MR_காந்தி

சாதரண தெருக்குழாய் பிரச்சினை முதற்கொண்டு அதிதீவிர பிரச்சினைகளுக்காக அடித்து கொள்ளும் நம்மவர்களிடையே சமாதானம் பேசும் மாமனிதர் தான் #MR_காந்தி

ஜனசங்க காலத்திறகு முன்பு இருந்தே இந்துத்வ வீரனாக வலம் வரும் ஒரு வயதான வாலிபர் தான் #MR_காந்தி..

 பாரத மாதா மீது கொண்ட பற்றால் பாதணி அணியாதவர்.

        எளிமையை தான் ஏற்றுக் கொண்டு இனிமையை தொகுதிக்கு தர வல்லவர்.

முன்பு விருது நகருக்கு காமராஜர் வாய்த்தது போல நாகர் கோவில் தொகுதிக்கு கிடைத்த நல்ல வரமாக திகழக் கூடியவர் திரு ௭ம் ஆர் காந்தி ஜி அவர்கள்.

       தமிழகத்திற்கு அரசியல் வழி காட்டியாகத் திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர் கோவில் தொகுதியில் இவர் வென்றால் எம் .எல் .ஏக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பு உள்ளது.

       தனக்கென்று வாழ்க்கையோ அல்லது வரலாரோ இல்லாமல் நாட்டின் வளத்திற்க்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

இவர் சட்டமன்றம் செல்வது அந்த சட்டமன்றத்திறகு தான் பெருமை...
அவரை  வாக்களிப்பது சட்ட மன்றத்திற்கு அனுப்புவது  நமக்கு தான் பெருமை....



நன்றி இணையம்