*எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்tகள் வழங்கப்படுகின்றன?*

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:37 | Best Blogger Tips

 


எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்tகள் வழங்கப்படுகின்றன?*

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில், *ரங்கநாதரு*-க்கு *தேங்காய்த் துருவலும்*, 

துலுக்க நாச்சியாரு*-க்கு *ரொட்டி, வெண்ணெய், கீரையும்* நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் *அரவணை* பிரசாதமும் உண்டு.

திருவாரூர் *தியாகராஜப் பெருமானு*-க்கு _நெய்யில் பொறிக்கப்பட்ட *முறுக்கு*_ தினசரி பிரசாதம்.

திருக்கண்ணபுரம் *சௌரிராஜப் பெருமாளு*-க்கு தினமும் இரவில் *முனியோதரயன் பொங்கல்* எனும் அமுது செய்விக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் *வரதராஜப் பெருமாளு*-க்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய *காஞ்சிபுரம் இட்லி*-தான் முதல் நைவேத்யம்.

திருப்பதி *வெங்கடாஜலபதி*-க்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது *தயிர்சாதம்* மட்டுமே.

திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் *ஆத்மநாதருக்கு* *புழுங்கலரிசிச் சோறும், பாகற்காய் கறி*-யுமே பிரசாதம்.

கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் *விநாயகப் பெருமானுக்கு* சுடச்சுட *நெய்யப்பம்* செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.

உதயம் முதல் அஸ்தமனம் வரை *அப்பம்* ஏற்கும் கணபதி இவர்.



ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு *முக்தாபி சூரணம்* எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

கேரளம், திருவிலா *மகாதேவர்* ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து *பாலுடன்* கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத்

தீர்க்கிறது.

நவகிரக, *சுக்கிர* தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது *சுரைக்காய்* பிரசாதம் படைக்கப்படுகிறது.

மதுரை *மீனாட்சியம்மன்* ஆலயத்தில் காலையில் *ஞானப்பால்* பிரசாதமும்,

இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் *சுண்டலும், பாலும்* நிவேதனம் செய்யப்படுகின்றன.

கொல்லூர் *மூகாம்பிகை*-க்கு இரவு அர்த்தஜாமபூஜையின் போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க *கஷாயம்* பிரசாதமாகத் தரப்படுகிறது.

நெல்லையில் உள்ள *புட்டாத்தி அம்மன்* ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் *புட்டு*-தான் பிரசாதம்.

கேரளம், குருவாயூரில் *குருவாயூரப்பனுக்கு* சுண்டக் காய்ச்சிய *பால் பாயசம்* பிரசாதமாக படைக்கப் படுகிறது.

திருச்சியில் கோயிலடி *அப்பக்குடத்தானுக்கு* தினமும் *அப்பம்* நிவேதனம் செய்யப்படுகிறது.

கேரளம், இரிஞ்சாலக்குடாவில் *பரதன்* ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட *வழுதனங்கா* எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப் பட்டுள்ளது.

குற்றாலம் *குற்றால நாதருக்கும், குழல்வாய்மொழி அம்மை*-க்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த *கஷாயம்* படைக்கப் படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும், ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.

முழு உளுந்தை ஊற வைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் *தோசை*, மதுரை *அழகர்* கோயிலின் பிரதான பிரசாதம்.

திருநெல்வேலி *பூமாதேவி அம்மன்* ஆலயத்தில் தமிழ் மாதக்

கடைசி வெள்ளியன்று, *கூட்டாஞ்சோறும், சர்க்கரைப் பொங்கலும்* நிவேதனம் செய்வர்.

துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.

சிதம்பரம் *நடராஜப் பெருமானு*-க்கு *கிச்சடி சம்பா சாதமும், சிதம்பரம் கொத்சும்* சிறப்பான நிவேதனங்கள்.



*திருச்சிற்றம்பலம்*


நன்றி