நாகை மலையீஸ்வரன் திருக்கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:32 | Best Blogger Tips

 



#நாகை_பன்னிரு_சிவாலயங்கள் வரிசையில் இன்று #மலையீஸ்வரன் திருக்கோயில் பற்றி பார்ப்போம்.

முற்கால #பல்லவர்கள் திருப்பணி மற்றும் #கோச்செங்கட்_சோழன் கட்டிய மிகப்பழமையான மாடக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.



இக்கோயிலின் நுழை வாயிலில் இராஜ கோபுரம் இல்லை. மொட்டைக் கோபுரத்தின் மேலே சுதை வடிவங்களாக ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் காட்சி அளிக்கிறார்கள். இருபுறமும் கணபதியும் கந்தனும் காட்சி தருகிறார்கள்.

மாடக்கோயிலின் கீழே நந்தியும் பலிபீடமும் அமைந்துள்ளன. மேலே பதினெட்டுப் படிகள் ஏறிச்சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். பதினாறு பட்டை லிங்கமாக கைலாசநாதப் பெருமான் லிங்கத் திருமேனியாக தரிசனம் தருகிறார்.

மூலஸ்தானத்தில் லிங்கத் திருமேனிக்கு பின் சிம்மத்தில் ஆன சிற்பத்தின் நடுவே அம்மையப்பர் காட்சியளிக்கிறார். இதுபோல மற்றொரு சிம்ம விளக்குத்தூண் கோயிலின் கீழ் புறத்தில் அமைந்துள்ளது. இவையே பல்லவர்கால சிற்பமாக கூறப்படுகிறது.

மேலும் 1777 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் நாகையில் கோட்டை அமைத்து ஆட்சி செய்த போது இக் கோயிலை புதுப்பித்த கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளது.



#ஸ்தல_வரலாறு

ஸ்தல யாத்திரையாக நாகைக்கு வந்த பராசர முனிவர்க்கு பதினாறாயிரம் சிகரங்கள் கொண்ட கயிலையங்கிரியைத் தரிசிக்கும் ஆவல் வந்தது. அதிலும்,அம்மலையை நாகையிலே தரிசிக்கவேண்டும் என்ற பேராவல் ஏற்பட்டது.

ஒரு பட்டை ஆயிரம் சிகரங்களுக்கு சமம் என்ற நோக்கில் பதினாறு பட்டைகளை உடைய பாணத்தோடு கூடிய சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அப்பெருமானை ஒரு உயர்ந்த கட்டுமலையில் வைத்து வழிபாட்டு வந்தார். அதன் பயனாக நீண்ட ஆயுள் பெற்றுப் பின்னர் கைலைநாதனின் கழலடி அடைந்தார்.

 

நன்றி இணையம்