இஷ்டம் போல் கடவுள் நம்பிக்கையை சிதைக்கும்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:17 | Best Blogger Tips
Image may contain: 2 people, sky and outdoor

ஒருபுறம் இராமாயணம் பொய், இராமன் கற்பனை கதாபாத்திரம் என்று பெரியாரிஸ்ட்டுக்களும் கம்யூனிஸ்டுகளும் சொல்லி பிரச்சாரம் செய்வார்கள்

மறுபுறம் இராமன் பிராமண ஆரியன், ராவணன் திராவிடன் என்று சொல்லி பிரச்சாரம் செய்வார்கள்

இவர்கள் பொய் பித்தலாட்டம் எல்லாம் இவர்களின் முரண்பட்ட செயல்களிலேயே புரிந்து கொள்ள முடியும்

இதில் இவர்கள் இரண்டாவது சொல்வதிலும் எவ்வளவு பொய் என்றால் இராமன் பிராமணர் என்பது மிகப்பெரிய பொய், இராமன் சத்திரியன் என்பதை உன்மை,

அதுபோலவே இராவணன் திராவிடர் என்பதும் மிகப்பெரிய பொய், இராவணன் பிறப்பால் பிராமண வகுப்பை சேர்ந்தவன், இவனது செயலால் அரக்கன் ஆகிறான்...

இதற்கு சான்றாக

இராமன் சத்திரிய ஜாதி என்பதால் இராவணன் பிராமணரை கொன்றதால் இராமனுக்கு பிரமஹர்த்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று தான் இராமேஸ்வரத்தில் மணலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து இராமன் வணங்கினார் என்பதற்கு வரலாற்று சாட்சியாக இராமேஸ்வரம் ஆலயம் நம் கண்முன்னால் தமிழகத்தில் புகழ்பெற்று விளங்குகிறது...

இராமேஸ்வரம் வரலாறு பற்றி மேலும் தகவல் கீழே உள்ள லிங்கில் போய் படித்து அறியலாம்


ஆக இவர்கள் இஷ்டம் போல் கடவுள் நம்பிக்கையை சிதைக்கும் நோக்கத்துடன் எது வேண்டும் என்றாலும் சொல்வார்கள் ஆனால் அதையெல்லாம் மக்கள் கடுகளவு கூட மதிக்கவே இல்லை

நாத்திகம் பேசும் தலைவர்கள் வீட்டில் உள்ள அவர்கள் பொண்டாட்டிகள் கூட புருஷன் பேசும் நாத்திக கொள்கைகளை தூக்கி குப்பையில் எரித்துவிட்டு கோவிலுக்கு போகிறார்கள்
Image may contain: 1 person, close-up
சிவ பரமசிவம்
திருவாரூர்