மெய்சிலிர்க்கும் தேசபக்தி ரத்தன் டாடா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:21 | Best Blogger Tips
Image may contain: 1 person, closeup


*“
உங்களுக்கு வேண்டுமானால் வெட்கம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் எனக்கு அப்படி அல்ல”*
-- *ரத்தன் டாடா*
மத்திய அமைச்சரிடம்
கொட்டித் தெறித்த வார்த்தைகள்..
இந்தியாவில் பெருமைமிகு மிக உயர்தர ஹோட்டல்கள் கொண்ட குழுமம் *தாஜ்* க்ரூப் ஆஃப் ஹோட்டல்கள்..!!
இதன் உரிமையாளர் திரு. ரத்தன் டாடா.!
டாடா க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ன் சிஇஓ..!!
பல வருடங்களுக்கு முன்பு 26/11 நிகழ்வுக்கு சில மாதங்கள் கழித்து, தாஜ் க்ரூப் ஆஃப் ஹோட்டல்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தங்கள் அனைத்து ஹோட்டல்களையும் மறு சீரமைப்பு மற்றும் உள் அலங்காரம் செய்ய உலகளாவிய (மிகப்பெரிய பணிக்கான) மாபெரும் டெண்டர் ஒன்றை வெளியிட்டது.
இந்த கோடிக்கணக்கான தொகை மதிப்பு டெண்டர்க்கு உலகளாவிய பல நிறுவனங்கள் தங்கள் மதிப்பீட்டு ஏலத் தொகையை அனுப்பி வைத்தன. அதில் சில பாகிஸ்தான்..??!!! கம்பெனிகளும் அடக்கம்.
இந்த டெண்டரை எப்படியாவது எடுத்து விட இரண்டு பாகிஸ்தான் தொழிலதிபர்கள் எந்தவொரு முன்னறிவிப்போ, அப்பாயிண்ட்மென்ட்டோ இல்லாமல் நேரடியாக மும்பையில் உள்ள *பாம்பே ஹவுஸ்* எனப்படும் டாடா குழுமத்திற்க்கான தலைமை அலுவலகத்தில் திரு. ரத்தன் டாடாவை சந்திக்க கிளம்பி வந்து, அலுவலக வரவேற்பு அறையில் காத்திருக்கிறார்கள்.
டாடாவை, அவரே கொடுக்கும் அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் அப்படி எல்லாம் யாரும் சந்தித்து விட முடியாது.
அவர்கள் வரவேற்பு அறையில் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்கள். பல மணி நேரம் ஆகியும் அவர்கள் அழைக்கப்படவில்லை. இவர்கள் வந்திருக்கும் விசயம் டாடாவுக்கு தெரிவிக்கப்பட்டு, பின்பு இவர்களுக்கு ஒரு பதில் தகவல், 'திரு. டாடா அவர்கள் பிஸியாக இருக்கிறார், மேலும் அவர் எந்த அப்பாயிண்ட்மென்ட்ம் இல்லாமல், யாரையும் சந்திக்கமாட்டார்' என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெறுத்துப்போன, இந்த இரண்டு பாகிஸ்தான் பிஸினஸ் மேக்னட்கள்ம் உடனடியாக டெல்லிக்குப் பறந்து தங்கள் நாட்டு தூதரகத்தில் நுழைத்து, அங்கிருக்கும் தங்கள் நாட்டு ஹை-கமிஷனர் சந்தித்து, விபரங்கள் சொல்லி எப்படியாவது டாடாவை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படி கெஞ்சுகிறார்கள்.
அடுத்த நிமிடம் போன் கால்கள் டெல்லி முழுக்கப் பறக்கின்றன.
யார், யாரையோ அழைக்கிறார்கள், வேண்டுகிறார்கள், இறைஞ்சுகிறார்கள்.
கடைசியில், அப்போதைய #காங்கிரஸ் அமைச்சர் திரு. ஆனந்த் சர்மாவைப் பிடித்து, இந்த டெண்டர் பற்றியும், தங்கள் நாட்டு தொழிலதிபர்கள் வந்த விசயத்தையும், அவர்கள் நியாயமான ஏலத் தொகை பற்றியும் தரமான பணி செய்து கொடுப்பதாகவும், எப்படியாவது டாடாவிடம் சொல்லி அந்த டெண்டரை பெற்றுத் தருமாறு வேண்டுகிறார்கள்.
அமைச்சர் உடனே டாடாவையே போன் லைனில் பிடித்து இந்த இரண்டு பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அவர்கள் குறித்துக் கொடுத்த ஏலத் தொகை பற்றி சொல்லி, வேலையை இவர்களுக்கே தர யோசிக்கும்படியும் சொல்லி கேட்டதும்தான் தாமதம், வெகுண்டெழுந்தார் டாடா, *'YOU COULD BE SHAMELESS, I AM NOT..'*
*
உங்களுக்கு வேண்டுமானால் வெட்கம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு அப்படி அல்ல....* என்று கோபத்தில் கத்திவிட்டு, போனை கோபமாக வைத்தும்விட்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதங்கள் கழித்து, பாகிஸ்தான் அரசிடம் இருந்தே ஒரு மிகப்பெரிய ஆர்டர் வருகிறது, டாடாவின் தயாரிப்பான *டாடா சுமோ* கார்கள் பாகிஸ்தானுக்குள் இறக்குமதி செய்யும்படி..
வேறு தொழிலதிபர்களாக இருந்திருந்தால், உடனடியாக கூத்தாடி கொண்டாடி இருப்பார்கள், ஆனால், டாடாவோ தன்னுடைய தயாரிப்பு ஒரு காரை கூட பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யமாட்டேன் என்று மறுத்து, ஆர்டரை திருப்பி அனுப்பினார்.
எவ்வளவு பெரிய நாட்டுப்பற்றும், நாட்டின் மீது மதிப்பும், மரியாதையும் மற்றும் நேசித்தலும் இப்படி இருந்தாலொவிய இதை நிரூபிக்க முடியும்..??
இதையெல்லாம், நம் அரசியல்வாதிகள் அவரிடம் பார்த்து, கற்றுக்கொள்ள வேண்டும்..
ஹேட்ஸ்-ஆஃப் யூ சார்..!!
தேசபற்று சொல்லி வருவதில்லை அது ரத்தமும் சதையுமாக உயிருடன் கலந்தது
நாட்டு மக்களே விழித்தெழுங்கள், நம் நாடு மற்ற எல்லாவற்றையும் விட உயர்வானது..