குணவதி ஒருத்தி மனைவியாக அமைந்துவிட்டால்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:24 | Best Blogger Tips


குணவதி ஒருத்தி மனைவியாக அமைந்துவிட்டால்

தேவைகள் எல்லாமே தேவை யற்றதாகிவிடும்.

மனைவி அன்பானவளாய் அமைந்துவிட்டாள்
வாழ்க்கை அழகானதாய் மாறிவிடும்.

வறுமையிலும் வீட்டில் வசந்தம் குடி கொள்ளும்
நோயில் விழுந்தாலும் மனம் சோர்வை உணராது.

வேதனைகள் வந்தாலும் நெஞ்சில் வலிகள் தெரியாது.

தோல்விகள் வந்தாலும்
வாழ்க்கையில் நம்பிக்கை குறையாது.

அன்பை பொழியும்போது
அம்மாவாய்,

ஆசையாய் பேசும்போது
அழகான மனைவியாய்,

அக்கறையாய் திட்டும் போது செல்ல மகளாய்,

புத்திமதி சொல்லும் போது இடித்துரைக்கும் நண்பனாய்,

துண்பத்தில் திசைகள் மறையும் போது
வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய்,

குடும்பத்தை ஆறளுவதில் ராணிமகா ராணியாய்
இருப்பவள் மனைவி.

ஏன்,

உறவுகள் எல்லாம்

நன்றி மறந்து ஒதுங்கி நின்றாலும்

பிள்ளைகள்கூட பாசம் துறந்து பிரிந்து சென்றாலும்
சேர்த்த செல்வமும் புகழும்கூட

தொலைந்தே போனாலும்
உயிராய் ஒட்டிக் கொண்டு
ஒரு நொடியும் விட்டுப் பிரியாமல்
நம்தேவைகளை தெரிந்துகொண்டு
நம் உணர்வுகளை புரிந்துகொண்டு
ஒரு தாயைப்போல் குழந்தையாய நம்மை தன் மடியில் கிடத்திக் கொண்டு ஆறுதல் சொல்லும்போது
மனைவி கனவனுக்கு
தெய்வமாகிறாள்.

நல்ல மனைவி அமைந்துவிட்டாள்
சொர்கம்கூட
நம் வீட்டு வாசலில் வந்து நின்று,

"
உள்ளே வரலாமா,
வந்து உங்களோடு வாழலாமா!!!" என்று கேட்க்கும்.

கலயானம் ஆவதற்கு முன்
கடவுளிடம் இதை கேளுங்கள்,
ஆண்டவனே,

எனக்கு ஒரு நல்ல மனைவியை தா....
என்று............ அல்ல???

எனக்கு வரப்போகும் மனைவிக்கு
எந்த வகையிலும் குறைவில்லாத எல்லா வகையிலும் அவளுக்கு
நல்ல கனவனாக இருக்க
இறைவா எனக்கு ஒரு வரம் தர வேண்டும்
என்று கேளுங்கள.

கேட்டால் கடவுள் நம்மை நல்லவானக மாற்றுவாறோ இல்லையோ
நல்ல மனைவியை நமக்கு வரமாக தருவார்.

நாம் எதை
எதிர்பார்க்கிறோமோ
அதுவாக நாம் இருந்தால்
வரம் இல்லாமலே
வாழ்க்கை நல்லதாய் அமையும்.

அம்மா ,மனைவி, மகள் இது மூன்றுமாய் இருக்கின்ற ஒரே உறவு
நம் மனைவி.

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்பு மனைவியே வாழ்வின் எல்லை🌟
மீண்டும் சொல்கிறேன்...

அம்மாவை மதிப்பவன் நல்ல மகனாக
இருக்கலாம்....

மகளை கொண்டாடுபவன்
நல்ல தந்தையாக இருப்கலாம்.....

ஆனால்

மனைவியை மதிப்பவனால் மட்டுமே
நல்ல மனிதனாய் இருக்க முடியும்.

🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.🌸🌷🙏🙏.



நன்றி இணையம்