சுமங்கலி பாக்கியம்....

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:20 | Best Blogger Tips
Image result for திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர்


திலிபச்சக்கரவர்த்தி ஆழ்ந்த வேதனையடைந்தார்.காட்டுக்கு வேட்டைக்கு வந்த அவர்பெண் மானுடன் சுற்றிக்கொண்டிருந்த ஒரு ஆண்மான் மீது அம்பெய்தார்ஆனால்அது ஒரு முனிவராக மாறியதுஅந்த முனிவர் கடும் அவஸ்தைப்பட்டு இறந்தார்இதைக்கண்ட பெண் மான் ரிஷிபத்தினி (ரிஷியின் மனைவிவடிவெடுத்ததுஅந்தப்பெண்அவர் மீது விழுந்து அழுதாள்நிலைமை விபரீதமாகி விட்டதைக் கண்ட ராஜாஅவளருகே ஓடிவந்தார். ""அம்மாமான் என்று நினைத்தே அம்பெய்தேன்இப்படி ஆகிவிட்டதேஅந்தணரைக் கொன்றதன் மூலம் கடுமையான பிரம்மஹத்திக்கு ஆளாகித் தவிக்கிறேனே! '' என்று கண்ணீர் வடித்தார்.
அதுகேட்ட ரிஷிபத்தினி, ""மன்னாஇது தாங்கள் அறியாமல் செய்த தவறுஇது மன்னிப்பிற்குரியதேஇருப்பினும்என் கணவரின்றி என்னால் வாழ இயலாதுஎன்னையும் கொன்று விடுங்கள்,'' என்று அழுதாள்.
மன்னரின் மனம் இன்னும் வேதனைப்பட்டதுஒரு பெண்ணை...அதிலும் அந்தணப்பெண்ணைக் கொன்று மேலும் பாவத்தை வரவழைத்துக் கொள்வதாஐயையோஎன்ன செய்வேன்என் குலகுருவேவசிஷ்ட மகரிஷியேதாங்கள் இப்போதே இங்கு எழுந்தருள வேண்டும்இந்த குழப்பமான சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,'' என்று வேண்டினான்வசிஷ்டர் அங்கு தோன்றினார்அந்தப் பெண் அவரது பாதங்களில் விழுந்தாள்.
என்ன நடந்ததென்பதை அறியாத வசிஷ்டர்,""தீர்க்க சுமங்கலி பவ'' என அவளை வாழ்த்தினார்.
""மாமுனிவரேஇதோஇங்கே இறந்து கிடப்பவர் என் கணவர்அவர் இறந்தபிறகுஅபாக்கியவாதியாக நிற்கிறேன்தாங்களோ நான் சுமங்கலியாக வாழ்வேன் என்று சொல்கிறீர்ளேஇதெப்படி சாத்தியம்!'' என்று வருத்தமாகக் கேட்டாள்வசிஷ்டருக்கு இப்போது தான் நிலைமை புரிந்தது. "தன் மாணவனையும் காப்பாற்ற வேண்டும்இந்தப்பெண்ணுக்கும் தன் வாக்குப்படி சுமங்கலியாய் வாழும் பாக்கியம் தர வேண்டும்என்ன செய்யலாம்?' அவர் யோசித்தார். ""பெண்ணேகாவிரிக்கரையில் வில்வமரக்காட்டில் ஒரு சிவலிங்கம் இருக்கிறதுஅருகில் அம்பாள் சிலையும் இருக்கும்அங்கே நீ செல்உன் கணவனின் உடலை ஒரு பல்லக்கில் ஏற்றிக்கொள்அதை இந்த மன்னனின் சேவகர்கள் சுமந்து வருவார்கள்அந்தக் கோயிலிலுள்ள ஜல்லிகை தீர்த்தத்தில் நீராடிமூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவனின் உடலில் தெளிஅவர் பிழைத்து எழுவார்அந்தக் கோயிலில் ஜல்லிகை என்ற அசுரகுலப் பெண்மணிஇதே போல உயிர்போன தன் கணவனை எழுப்பினாள்அசுரனுக்கே அருளிய அந்த இறைவன்உனக்கு
நிச்சயம் உதவுவான்கிளம்பு,'' என்றார்அந்தப் பெண் மகிழ்ந்தாள்ரிஷிபத்தினி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடிமூன்று கை தண்ணீர் எடுத்து தன் கணவரின் உடல் மீது தெளித்தாள்தூங்கி எழுந்தவர் போல் எழுந்தார் முனிவர்அப்போது அம்பாளும்சிவனும் அவர்கள் முன் தோன்றினர்அம்பாளிடம் ரிஷிபத்தினி, ""அன்னையேஎன்னைப் போலும்ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல்நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்,' ' என வேண்டினாள்அம்பாளும் அப்படியே செய்வதாக வாக்களித்தாள்ரிஷிபத்தினியும்முனிவரும் மீண்டும் திலீபனைச் சந்தித்தனர்தாங்கள் சிவபார்வதி தரிசனம் கண்ட இடத்தில் கோயில் கட்டும்படி கூறினர்மன்னனும் அவ்வாறே செய்தான்அதுவே திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோயிலாகும்.


திருவாரூரில் இருந்து 30 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளதுஇந்தக் கதையைப் படித்தவர்களின் குடும்பத்தில் அகால மரணம் நிகழாது என்பது ஐதீகம்தம்பதி சமேதராய் இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று வாருங்கள்தீர்க்கசுமங்கலியாய் இருக்கும் பாக்கியம் பெறுங்கள்..
நன்றி....இணையம்