தானம் செய்தால்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:35 | Best Blogger Tips
தானம் செய்தால் க்கான பட முடிவு


அன்னதானம் செய்தால்:

பூர்வ ஜென்ம கர்மவினைகள் தீரும் . பித்ருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஆடைதானம் செய்தால்:
தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.

காலணி தானம்:
பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும்.தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

மாங்கல்ய தானம்:
காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும் .

குடை தானம்:
தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

பாய் தானம்:
பெற்றவர்களை பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும் .

பசு தானம்:
இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

பழங்கள் தானம்:
பல ஜீவன்களை வதைத்த சாபம் தீரும். ஆயுள் விருத்தியாகும்.

காய்கறிகள் தானம்:
பித்ரு சாபங்கள் விலகும் . குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

அரிசி தானம்:
பிறருக்கு ஒன்றுமே தராமல் தனித்து வாழ்ந்த சாபம் தீரும். வறுமை தீரும்.

எண்ணெய் தானம்:
நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும் .கடன்கள் குறையும்.

பூ தானம்:
அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும் , சாந்தமாகவும் அமையும்.

பொன் மாங்கல்யம் தானம்:
மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும் .

மேலும் நமக்கு பயன்படாத, மற்றவருக்கு பயன்படும் பொருட்கள் எதுவாகினும் தானம் கொடுக்கலாம், மற்றவர் கேட்டு கொடுப்பதைக் காட்டிலும் அவர்களுக்கு அப்பொருள் கண்டிப்பாக தேவைப்படும் என்பதை அறிந்து நாமே அவர்களுக்கு கொடுப்பது இன்னும் பலன்களை அதிகரிக்கச் செய்யும்.


நன்றி இணையம்