திரிபுராவில் அடுத்தது பிஜேபி ஆட்சி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:00 | Best Blogger Tips

Image may contain: 4 people, people smiling, people standing
திரிபுரா மாநிலத்தின் புராண வரலாற்றை தேடினால் அது தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னு ம் மூன்று அசுர சகோதரர்களை (திரிபுரர்) அழிப்பதற் காக சிவபெருமான் எடுத்த திரிபுராந்தகர் என்கிற புராணத்தில் இருந்து துவங்குகிறது.அதனால் தான் வட கிழக்கு மாநிலங்களில் இந்துக்கள் அதிகமாக இருக்கும் முதல் மாநிலம் என்கிற பெருமை திரிபுரா வுக்கு உள்ளது.
இந்துக்கள் அதிகமாக வாழும் இந்த புனிதபூமியை இந்து விரோத சக்திகளை ஆளவிட்டுவிட்டு அழுது
கொண்டு இருக்கும் திரிபுரா மக்களின் கண்ணீரை
துடைத்துவிடும் பணியினை பிஜேபி துவக்கிவிட்டது
இன்னும் இரண்டு மாதத்தில் வர இருக்கும் சட்டம ன்ற தேர்தல் மூலமாக அங்கே 25 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகளின் ஆட்சி முடிவு க்கு வருகி றது.
22 வருட ங்களாக குஜராத்தில் உள்ள பிஜேபி ஆட்சி
சில தொகுதிகளை பறிகொடுத்ததற்க்கே பிஜேபியை
எள்ளி நகையாடும் கூட்டம் 25 வருடங்களாக திரிபு ராவில் ஆட்சியில் இருக்கும் இடது சாரிகள் இந்த
தேர்தலில் ஆட்சியையே பறிகொடுத்தப்பிறகு இந்த
ஊடகங்கள் எப்படி ஒப்பாரி வைக்கப்போகிறது என்று
நானும் பார்க்கத்தானே போகிறேன்.
சுமார் 39 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் திரிபுரா
இந்தியாவில் கோவா சிக்கிமை அடுத்து மூன்றாவது
சிறிய மாநிலமாகும்.இந்தியாவின் அடையாளமான
இந்துக்கள் 84% திரிபுராவில் இருக்கிறார்கள்.அடுத்து
8%
முஸ்லிம்கள் 5% கிறிஸ்துவர்கள் 3% பவுத்தர்க ளும் இருக்கிறார்கள்.
60 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட திரிபுராவில்
30
தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும்.இதில் 20 தொகுதிகள் எஸ்டிக்கு அதாவது பழங்குடி மக்களுக் கு உள்ளது.10 தொகுதிகள் எஸ்சி மக்களுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.மொத்தம் 30 தொகுதிகள் மட்டும் தான் பொது தொகுதிகளாகும்.
84% இந்துக்களில் சாதி ரீதியாகப்பார்த்தாலும் மாநி லத் தின் மக்கள் தொகையில் சரி பாதியாக எஸ்டி 32% எஸ்சிக்கள் 18% இருக்கிறார்கள் அதனால்தான் சட்ட மன்ற தொகுதிகளும் சரி பாதி ரிசர்வ் தொகுதிக ளாகும். அடுத்து 30%க்கும் மேல் ஒபிசிக்கள் இருக்கி றார்கள். இந்த ஒபிசிக்களில் 90% தேப்நாத் என்கிற நாத் இன மக்கள் தான் உள்ளனர்.
Image may contain: 5 people, people standing, crowd and outdoor
இந்த நாத் மக்களின் குருபீடம் எது தெரியுமா? பாபா கோரக்நாத் கோயில் தான்.இது எங்கிருக்கிறது தெரி யுமா? உத்தரபிரதேசத்தில் கோரக்பூரில் இருக்கிறது.
இப்பொழுது இந்த கோரக்நாத் மடத்தின் பீடாதிபதி யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும்..ஆம் சா ட்சாத் நம்முடைய உத்தரபிரதேச முதல்வர் யோகி தான்.
பாருங்கள் எங்கோயோ வடகிழக்கில் இருக்கும் திரிபு ரா மாநிலத்தில் வசிக்கும் தேப்நாத் மக்களுக்கும் இந்தி யாவின் மையப்பகுதியில் இருக்கும் யோகி ஆதித்ய நாத் அவர்களின் கோரக்நாத் கோயிலுக்கு ம் இடையி ல் சுமார் 2600 கிலோமீட்டர் தொலைவு இரு ந்தாலும் இந்த கோரக்நாத் கோயில்தான் திரிபுரா மக்களின் குருபீடம் என்றால் ஆச்சரியம்தானே..
இந்த கோரக்நாத் குருபீடம் தான் 25 வருடங்களாக திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் இடது சாரிகளின்
ஆட்சிக்கு முடிவு கட்ட இருக்கிறது.பொது தொகுதிக ளான 30 தொகுதிகளில் இந்த தேப்நாத் மக்கள் தான்
வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியை படை த்தவர்கள்.உபி முதல்வர் யோகியும் இவர்கள் இனத் தை சார்ந்தவர்தான்.அதனால் திரிபுராவில் பிஜேபி யை வெற்றி பெற வைக்கும் முதல் பொறுப்பு யோகி யையேசாரும்.
திரிபுரா தேர்தலில் தான் பிஜேபி தன்னுடைய உண் மை யான எதிரியை சந்திக்க இருக்கிறது.ஆம் இங்கு தான் வலதுசாரி இடதுசாரி இடையே நேரடியான யுத்தம் நடைபெற உள்ளது.இதில் நாம் வெற்றி பெற் றே தீரு வோம் என்பதில் நமக்கு மாற்று கருத்து கிடையாது
Image may contain: one or more people, crowd and outdoor
ஏனென்றால் இடதுசாரிகளின் அசைக்கமுடியாத
கோட்டையாக திரிபுரா இருக்கிறது என்றால் அதற்கு
முக்கிய காரணம் பழங்குடியின மக்கள் தான்.பழங் குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலு ம் இடது சாரிகளே இது வரை ஜெயித்து வந்துள்ளார் கள்.
ஆனால் இந்த தேர்தலில் அது நடக்காது, ஏனென்றா ல் திரிபுராவில் உள்ள பழங்குடி மக்களின் நம்பிக்கை யை பெற்றுள்ள இன்டிஜினியஸ் நேசனலைஸ்டு பார்ட்டி ஆப் திரிபுரா (INPT) இன்டிஜினியஸ் பீப்புல்ஸ் பிரண்ட் ஆப் திரிபுரா(IPFT) நேசனல் கான்பரன்ஸ் ஆப் திரிபுரா (NCT) ஆகிய கட்சிகளுடன் பிஜேபி கூட் டணி அமைக்க இருக்கிறது.
இதில் ஐஎன்பிடி ஏற்கனவே பிஜேபி கூட்டணியில்
தான் இருக்கிறது.ஐஎன்எப்டியும் கூட்டணிக்கு தயா ராக வே இருக்கிறது.அடுத்து என்சிடியும் பிஜேபியு டன் கூட்டணி வைக்க தவம் இருந்து வருகிறது. இதி ல் காமெடி என்னவென்றால் இந்த நேசனல் கான்பர
ன்ஸ் ஆப் திரிபுரா என்கிற கட்சி இடதுசாரிகளின் ஆதிவாசிபிரிவான கனமுக்திபரிஷத்தில் இருந்து பிரிந்து வந்த அமைப்பாகும்.
சூப்பர்ல்ல....இடதுசாரிகளின் முகாமில் இருந்து வந் வந்த ஒரு அமைப்பு வலதுசாரிகளான பிஜேபியி டம் கூட்டணிக்கு கெஞ்சிக்கொண்டு இருப்பதை பார் த்தால் திரிபுராவில் நடைபெற இருக்கும் வலதுசாரி இடதுசா ரி யுத்தத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று நீங்களே சொல்லுங்கள்.
இந்த பழங்குடிமக்களின் 20 தொகுதிகள்தான் இதுவ ரை திரிபுராவில் இடதுசாரிகளை ஆட்சியில் அமர்த் தி வந்தது.இனி அதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் தங்களுக்கு எதிராக மக்கள் திரும்பும்பொழுது இடது
சாரிகள் காட்டும் வழக்கமான வன்முறையினால் திரிபுராவின் பழங்குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடனே சில அறிவுஜீவிகள் ஏம்பா விஜயகுமாரு 2015
ல் நடந்த திரி­புரா பழங்­கு­டி­யி­னர் தன்­னாட்சி மாவட் கவுன்­சில் தேர்தலில் (டிடிஏஏடிசி)இடதுசாரிகள் தானே மொத்தம் உள்ள 28 இடங்களிலும் ஜெயித்தார் கள் என்று கேட்டு வருவார்கள்.இந்த Tripura Tribal Areas Autonomous District Council என்பது திப்ரலாந்து என்று தனிநாடு கேட்டு போராடிவரும் பழங்குடி மக் களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள ஆட்சிமுறை யாகும்..
இதன்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பழங்கு டி மக்கள் பகுதிகளில் தேர்தல் வைத்து அதன் மூலம்
28
உறுப்பினர்களை தேர்வு செய்வர்கள் .இதோடு கவர்னர் இரண்டு உறுப்பினர்களை நியமிப்பார்.இந்த
30
உறுப்பினர்களும் ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து
அவரின் தலைமையில் பழங்குடி மக்களின் தேவை களை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும்.
வழக்கமாக ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக் கு ம் இந்த தேர்தலிலும் இடதுசாரிகள் தான் ஜெயிப்ப து வழக்கம்.ஆனால் 2015 ல் நடந்த தேர்தலில்தான் முத ல்முறையாக இடதுசாரிகள் சுமார் 10% வாக்குக ளை இழந்துள்ளர்கள்.அதே நேரத்தில் பிஜேபி அந்த தேர்த லில் முதன் முறையாக தனித்தே சுமார் 10% வாக்குகளை வாங்கி சில இடங்களில் இரண்டாவது இடத்திற்கு வந்தது.
.
இதில் இருந்து பிஜேபிக்கு திரிபுராவில் ஏறுமுகம் தான்.சொன்னால் நம்பமாட்டீர்கள்..2013 சட்டமன்ற தேர்தலி ல் பிஜேபியின் வாக்கு சதவீதம் 2% கூட கி டையாது. ஆனால் 2015ம் ஆண்டில் நடந்த பிர­தா ப்­கார்க், சுமா­ரக் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தே ர்தலில் பிஜேபி 22% வாக்குகளை வாங்கி இரண்டாவ து இடத்திற்கு வந்தது.
சென்ற வருடம் நடந்த பார்­ஜலா சட்­­சபை தொகுதி
யில் சிபிஎம் வெற்றி பெற்றாலும் பிஜேபி 36% வாக்கு களை பெற்று இரண்டாம் இடத்திற்கு வந்தது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றா ல் இப்பொழுது திரிபுராவில் எதிர்க்கட்சிகளே கிடை யாது பிஜேபி தான் சட்டசபையில் எதிர்க்கட்சியாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் எல்லாம் பிஜேபியில் ஐக்கியமாகிவிட்டார்கள்.அதனால் வரு ம் தேர்தலில் வலதுசாரி இடதுசாரி நேரடி யுத்தம் தா ன் நடக்கும்.
.
இந்த தேர்தலில் பிஜேபி பழங்குடிமக்களின் கட்சிக ளோடு கூட்டணி வைத்து மொத்தம் உள்ள 30 ரிசர்வ்
தொகுதிகளில் 20 தொகுதிகளை மோடியின் பிரச்சார த் தினால் கைப்பற்றிவிட்டாலே போதும் .திரிபுராவி ன் ஆட்சி பிஜேபி பக்கம் திசைமாறிவிடும்.மீதியுள்ள 30 பொது தொகுதிகளில் தேப்நாத் மக்கள் அதிகமுள் 15 தொகுதிகளில் ஒரு 10 தொகுதிகளை யோகியி ன் பிரச் சாரத்தினால் பிஜேபி ஜெயித்துவிட்டால் திரி புராவில் பிஜேபி ஆட்சி உறுதியாகிவிடும்.
அதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலில் காங்கிரஸ்
ஜெயித்த 10 தொகுதிகளிலும் உள்ள எம்எல்ஏக்கள்
இப்பொழுது பிஜேபியில் இணைந்து தேர்தலில் போ ட் டியிட உள்ளார்கள்.அதனால் பிஜேபி தனித்து ஆட் சி யை கைப்பற்றும் அளவிற்கு ஜெயித்துவிடும் என்று உறுதியாக சொல்லலாம்
.
சரிப்பா முடிவா என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்கிறீர்களா..25 ஆண்டு கால இடதுசாரிகளின் தொடர் ஆட்சியில் இந்தியாவிலேயே வேலை வா ய்ப்பு வழங்குவதில் கடைசி இடத்தில் திரிபுரா உள்ள து.அது மட்டு மல்லாமல் பெண்களுக்கு எதிராக டை பெறும் குற்றங்களின் வரிசையிலும் திரிபுராதா ன் முதல் இடத்தில் இருக்கிறது.
மாணிக்சர்க்காரின் ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள் மக்கள் மாற்றத்திற்கு காத்திருக்கிறார்கள்.அந்த
மாற்றத்தை பிஜேபி தான் தரும் என்று திரிபுரா மாநி பிஜேபி இன் சார்ஜ் சுனில் தியோடரும் திரிபுரா மா நில பிஜேபியின் தலைவர் பிப்லாப்குமார தேபும் மக் ளின் மனதில் விதைத்துவிட்டார்கள்.
அதை ஓட்டுக்களாக மோடியும் யோகியும் சென்று மாற்றி பிப்ரவரி மாத இறுதியில் சிகப்பு கோட்டை யில் காவிக்கொடியை பறக்க வைப்பார்கள்.இதற்கு
கோரக்நாதர் துணை நிற்பார்.


நன்றி இணையம்