நவராத்திரி கொலு பொம்மை தத்துவம்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:43 | Best Blogger Tips

Related image
நவராத்திரி என்றால் கொலுதான் முக்கிய அம்சம் பெறுகிறது.
கொலு என்றால் அழகு என்று பொருள்.ஒன்பது படிகள் அமைத்து கொலு வைக்க படுகிறது.இவை ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.
கொலு பொம்மை தத்துவம் என்ன வென்றால் மனிதன், குடும்ப வாழ்விலும், ஆன்மிக வாழ்விலும் படிப்படியாக முன்னேறவேண்டும் என்பதை நவராத்திரியின் கொலு படி தத்துவம் உணர்த்துகிறது.
*
முதல் படியில்*
புல், செடி, கொடி ஆகிய தாவர பொம்மைகளை வைக்க வேண்டும். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையை இது குறிக்கிறது.
*
இரண்டாம் படியில்*
சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம் பயக்கும். நத்தை போல மெதுவாக நிதானமாக சென்று உயர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று உறுதி கொள்வதே இதன் பொருள் ஆகும்.
*
மூன்றாம் படியில்*
எறும்பு, கரையான் புற்று பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பைப் போல சுறுசுறுப்பு, எத்தனை முறை தகர்த்தாலும் கரையான் திரும்பத் திரும்ப புற்றைக் கட்டுவது போன்ற திட மனப்பான்மை மனிதனுக்கு வேண்டும் என்பதை உணர்த்துவதாகும்.
*
நான்காம் படியில்*
நண்டு, வண்டு பொம்மைகள் இடம்பெற வேண்டும். இவற்றின் குணம் ஆழமாக ஊடுருவி பார்ப்பது. எந்த விஷயத்தையும் ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
*
ஐந்தாம் படியில்*
மிருகம், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட வேண்டும். பறவை போல் கூடி வாழ வேண்டும் என்பதே இதன் பொருள்.
*
ஆறாம்படியில்*
மனித பொம்மை வைக்க வேண்டும். வாழ்க்கையில் மேற்கண்ட ஐந்து படிகளில் உள்ளது போன்ற குணங்களை கடைபிடித்தால் முழு மனிதன் ஆகலாம் என்பது பொருளாகும்.
*
ஏழாம்படியில்*
முனிவர்கள், மகான்கள் பொம்மை வைக்க வேண்டும். மனிதன் உயரிய பக்தி மார்க்கத்தை கடைபிடித்தால் மகான்கள் ஆகலாம் என்பதே இதன் பொருள்.
*
எட்டாம்படியில்*
தேவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகான் நிலையை அடையும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வதை இது காட்டுகிறது.
Image result for நவராத்திரி கொலு பொம்மை தத்துவம்
*
ஒன்பதாம் படியில்*
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்க வேண்டும். ஆதி பராசக்தி சிலையை நடுவில் பெரிய அளவில் வைக்க வேண்டும். உயிர்கள் தங்கள் நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, தெய்வமாக வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே கொலு உருவானது

https://www.facebook.com/images/emoji.php/v9/f1e/1/16/1f33f.png🌿 *தி ரு ச் சி ற் ம் ம்*https://www.facebook.com/images/emoji.php/v9/f1e/1/16/1f33f.png🌿
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png
🚩https://www.facebook.com/images/emoji.php/v9/f92/1/16/1f549.png🕉 றை ன் பி ல்https://www.facebook.com/images/emoji.php/v9/f92/1/16/1f549.png🕉https://www.facebook.com/images/emoji.php/v9/fc6/1/16/1f6a9.png🚩
┈┈❀❀┈┈❀❀┈┈❀❀┈┈