ஒரு குட்டி கதை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:42 | Best Blogger Tips

😇கடவுள்: 🐴கழுதையைப்
படைத்து அதனிடம் சொன்னார். "நீ
🐴கழுதையாகப் பிறந்து, நாள் முழுவதும்
🎒பொதி சுமப்பாய். உனக்கு 😰சிந்திக்கும் திறனே கிடையாது. 🌱புல்லைத்
தின்று 50 ஆண்டுகள் வாழ்வாய்."


🐴கழுதை: 🐴கழுதையாகப் பிறந்து 50 ஆண்டுகள் வாழ விருப்பமில்லை. 20 ஆண்டுகளே போதும்.


😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.


😇கடவுள்: 🐕நாயைப் படைத்து அதனிடம்
சொன்னார். "நீ 🚶மனிதனின்
🏠வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல
💞நண்பனாய் இருப்பாய். 🚶மனிதன் தரும்
மிச்ச 🍚மீதிகளை உண்டு 30 ஆண்டுகள் வாழ்வாய்."


🐕நாய்: 30 ஆண்டுகள் எனக்கு அதிகம். 15 ஆண்டுகளே போதும்.
😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.


😇கடவுள்: 🐵குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார். "நீ 🌳மரங்களில்
கிளைக்கு கிளை தாவி 👶குழந்தைகளை மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."


🐵குரங்கு: எனக்கு 10
வருடங்களே போதும் சாமி.


😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.


😇கடவுள்: 🚶மனிதனைப் படைத்தார். "நீ
✨😄✨சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
🔫அறிவைப் பயன்படுத்தி எல்லா 🐾உயிர்களையும் உன் 🚧கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20 ஆண்டுகள் உயிர் வாழ்வாய்."


🚶மனிதன்: "😇சாமி. 20 வருடம் எனக்கு ரொம்ப குறைவு.
🐴கழுதை 🚫வேண்டாமென்று சொன்ன 30 வருடங்களையும், 🐕நாயின் 15 வருடங்களையும், 🐵குரங்கின் 10 வருடங்களையும் எனக்குத் தாருங்கள்."


😇கடவுள்: அப்படியே ஆகட்டும்.
* அன்றிலிருந்து 🚶மனிதன் 20 வருடங்கள்
🚶மனிதனாகவும்,


* பின் 👫திருமணம் செய்து 30 ஆண்டுகள் 🐴கழுதையைப்
போல குடும்பப் 💰பாரம் சுமந்தும்,


* 👪குழந்தைகள் வளர்ந்த பின் 15 ஆண்டுகள்
🐕நாயைப் போல 🏠வீட்டைப் பாதுகாத்தும்,


* கடைசிப் பத்து வருடங்கள் 🐵குரங்கைப் போல தன் ஒவ்வொரு 👨மகன் அல்லது 👩மகள் வீடு சென்று 👶பேரக் குழந்தைகளை 😄மகிழ்விக்கிறான்...!!!

நன்றி இணையம்