இதுதான் காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 10:45 | Best Blogger Tips


காங்கிரஸ் - 
பாகிஸ்தானில் போய் பேசினார்கள். " நீங்க எங்களுக்கு உதவுங்கள். அப்பதான் மோடியை தோற்கடிக்கலாம்."
மோடி - 
"
மிஸ்டர் நவாஸ் ஷெரீப்! நான் இப்பொழுது லாகூரில் வந்து இறங்கப் போகிறேன். உடனே வந்து என்னைப் பார்க்கவும்."
நவாஸ் ஷெரீப் - 
"
இதோ கிளம்பிட்டேன்."
நவாஸ் ஷெரீப் கார்கள் லாகூர் விமான நிலையம் விரைகின்றன......நரேந்திர மோடி கொடுத்த அதிர்ச்சியால் " RAW " உளவு அமைப்பே அதிர்ந்து போய் உள்ளது.
இதுவரை எந்த வித பாதுகாப்பும், முன்னேற்பாடு்களும் இன்றி பாகிஸ்தான் சென்ற ஒரே தலைவர் மோடிஜி தான்.
வீரம் என்பது பிறப்பில் இருந்து வருவது... 
அதெல்லாம் சந்தர்ப்பத்திற்க்காக வாழ்பவர்களிடம் வர வைக்க முடியவே முடியாது!
இரண்டு மணி நேரத்தில் பாகிஸ்தான் ஊடகங்களின் விமரிசனங்களை புரட்டிப் போட்ட தலைவர் மோடி...!
காலையில் ஆஃப்கானிஸ்தானில் பார்லிமெண்ட் கட்டிடத்தை திறந்து வைத்து பேசிய போது பாகிஸ்தானிற்கு எதிராக கொம்பு சீவும் நடவடிக்கை என்று கூவிய ஊடக வாய்கள்...
மதியம் லாகூரில் நவாஸுடன் பிறந்த நாள் விருந்து என்றவுடன் மோடியை ஒரு ராஜதந்திர நிபுணர் என்று புகழாரம்...!.........
குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்றுகொண்டு வீரவசனத்தையும் மென்று முழுங்கி் பேசிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரனுக்கு, அப்படியெல்லாம் இல்லாமல் தைரியமாய் என் நாட்டிற்குள் வந்து எவனடா என்னை என்ன செய்து விடுவான் என தைரியமாய் திறந்த மேடையில் நின்று தேசியக் கொடியை ஏற்றும் நரேந்திர மோடியைக் கண்டால் பொறாமை வருவதும்...
அமெரிக்கா சென்று சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டு விட்டு, கொடுத்த சாப்பாட்டை தின்றுவிட்டு அமெரிக்க அதிபரிடம் ஆட்டோகிராஃப் வாங்கி நாட்டை கேவலப் படுத்திய காங்கிரஸ்காரனுக்கு நீங்க சொல்ற இடத்திலெல்லாம் கையெழுத்து போட முடியாது, நாங்க சொல்ற மாதிரி மாத்துங்க என ஆன்மையுடன் சொல்லும் நரேந்திர மோதியைக் கண்டால் பொறாமை ஊறுவதும்...
10 ஆண்டுகளாக பாக்கிஸ்தானை எதிர்த்து அறிக்கை விடுவது கூட சிறுபான்மையின முஸ்லிம்களின் ஓட்டு வங்கியை பாதிக்குமோ என நம் நாட்டின் ராணுவ வீரர்களை சாகடிக்க விட்டு வேடிக்கை பார்த்த காங்கிரஸுக்கு, ஒரு குண்டு நம் எல்லையில் வீழ்ந்தால் 30 குண்டுகளை பாக்கிஸ்தானை நோக்க உத்தரவிடும் நரேந்திரமோதியைக் கண்டால் பொறாமை வருவதும்..
ராஜதந்திரம் என்றால் கட்சித் தலைவியின் முந்தனையை பிடித்துக்கொண்டு அந்தம்மாள் சொலும் உளரல்களைக்கேட்டு நடந்து கொள்வதுதான் என இருக்கும் காங்கிரஸ்காரனுக்கு, உண்மையான ராஜரீக நடவடிக்கைகள் நாட்டில் நடப்பதைக் கண்டால் பொறாமை வருவதும் இயற்கையே..
உன் நாட்டிற்குள் நட்புடன் வருகிறேன் எனச் சொல்லி விட்டு எதிரி நாட்டுக்குள் காலை வைக்கும் தைரியம் வேண்டும்.
அதையெல்லாம் மோடியை அகற்ற உதவி செய்யுங்கள் எனக்கேட்கும் மூளையற்ற, பதவி வெறி பிடித்த காங்கிரஸ்காரன் மூளைக்கு எட்டாத விஷயங்கள்..
எனவே அவர்களின் கட்சித்தலைவி சொல்வதைக் கேட்டுக் கொண்டு மீடியாவில் உளரிக் கொட்டுவதே அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதைச் செய்யுங்கள் காங்கிரஸ் கட்சியின் அடிமைகளே....!
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பின் தாயாரை சந்தித்த மோடி அவர் காலைத் தொட்டு வணங்கினார்.இதுவே தாய்மையை வணங்கும் நம் பாரதப் பண்பாடு.

நன்றி இணையம்