நமது உடலின் அடிப்படை இயக்கத்தை புரிந்துகொள்வதே ஆரோக்கிய வாழ்வின் அடித்தளம்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 9:47 | Best Blogger Tips


Regha Health Care's photo.
"நம் கையில் இருக்கும் ஒரு பொருளை உலகில் வேறு எங்கு தேடினாலும் கிடைக்காது" ஏனென்றால் அந்த பொருள் இருக்கும் இடத்தை விட்டுவிட்டு இல்லாத இடத்தில் தேடுகிறோம்.

இவ்வாறாக இன்றையதினத்தில் நாம் நமது ஆரோக்கியத்தை மருத்துவமனைகளில் தேடுகிறோம். நிம்மதியை கோவில்களிலும் தியான நிலையங்களிலும் தேடுகிறோம். அதனால் தான் இவை யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. இவை இரண்டும் நம்மிடம் தான் இருக்கிறது என்று புரிந்துகொண்டவர்களே ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடனும் வாழுகின்றனர்.

அடித்தளம் (Foundation) சரியாக போடாத கட்டிடமோ(Building), பாலமோ (Bridge) எவ்வாறு நிலையற்றதாக இருக்குமோ அவ்வாறே நமது உடலின் அடிப்படை இயக்கத்தை பற்றி புரிந்துகொள்ளாமல் இருப்பதால் நமது ஆரோக்கியமும் நிலையற்றதாக இருக்கிறது.

என்னிடம் பலர் ஆரோக்கியம் தொடர்பாக உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்வது வழக்கம். அப்படி சமீபத்தில் ஒருவர் அவரது உறவினருக்கு சிலகாலமாக மூலம் (Piles) இருக்கிறது என்று கூறினார். மருத்துவர் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய நாள் குறித்துவிட்டதாகவும் கூறினார். அவரிடம் நம் உடல் தவறு செய்வதில்லை நாம் தான் நம் உடலுக்கு ஒழுங்காக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பதை புரியவைத்தேன்.

அதை புரிந்துகொண்டவராய் அவரது உறவினரும் சில நாட்கள் நல்ல ஓய்வு எடுக்கலாம் என முடிவு செய்து இயற்கை காற்றோட்டம் உள்ள இடத்தில் ஓய்வெடுத்திருக்கிறார். பசி எடுக்காததால் இரண்டு நாட்கள் உணவு கூட உண்ணாமலும் வழக்கமாக நேரத்திற்கு அருந்தும் டீ, காப்பி போன்றவற்றை அருந்தாமலும் இருந்திருக்கிறார். அடுத்தநாள் காலையில் எழுந்து பார்த்தால் மூலம் (Piles) இருந்ததற்கான சுவடே தென்படவில்லையாம். அவருக்கே ஒரே ஆச்சர்யம் ஒரு மருந்து கூட உண்ணாமல் எவ்வாறு நலமடைந்தோமென்று. உண்மையில் எந்த ஆங்கில மருந்தும் எடுக்காமல் அவரது உடலின் மேல் நம்பிக்கை வைத்து மனதைரியத்துடன் இருந்ததாலே இது அவருக்கு சாத்தியமாயிற்று.

மற்றுமொரு சம்பவம். ஒருவரது மகள் சமீபத்தில் தான் +2 பரீட்சை எழுதி இருக்கிறார். அவரது நுரையீரலில் (Lungs) தேங்கிய கழிவுகளை வெளியேற்ற காய்ச்சல் என்னும் நமது உடலின் செயல்முறை (Process) நிகழ்ந்திருக்கிறது. உடனடியாக அதை தடுத்து நிறுத்த ஆங்கில மருந்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு அந்த பெண்ணுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

இவர்கள் வசதி படைத்தவர்கள் என்பதை அறிந்த அந்த மருத்துவமனையில் ஒரு வாரத்தில் 2 லட்சம் பில் போட்டுள்ளனர். புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு என கூறி இருக்கிறார்கள். பிறகு அங்கிருந்து கடைசியாக அடையாரில் உள்ள பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் சேர்த்திருக்கிறார்கள். அவர்கள் பரிசோதித்து விட்டு வெறும் நீர்கட்டிதான் எனவும் அதற்கு 4.5 லட்சம் பணம் மட்டும் இப்போதைக்கு கட்டுங்கள் என கூறியுள்ளனர்.

ஒரு சாதாரண சளியையும் காய்ச்சலையும் வியாதி என தவறாக புரிந்துகொண்டமையால் அந்த பெண்ணின் தந்தைக்கு 6.5 லட்சம் செலவானது தான் மிச்சம். கல்லூரிக்கு கூட செல்ல இயலாமல் இன்னும் அந்த பெண் அந்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்.

இந்த லட்சணத்தில் அந்த புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தில் ரத்த புற்றுநோய்க்கு இலவச மருந்து கொடுக்கிறார்கள் என்று காலம்காலமாக நம்மில் பலர் SMS, Whatsapp, Facebook மூலமாகவும் விளம்பர படுத்துகிறோம். ஒரு மருந்து ஆராய்ச்சி நிலையில் இருக்கும்போது சோதனை செய்ய மனித எலிகள் தேவை. அதற்குதான் இவ்வாறு வதந்திகளை கிளப்புகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் நம் உடலில் ஏற்படும் தொந்தரவுகளின் அடிப்படை காரணம் (தவறான வாழ்க்கைமுறை) தெரியாமல் அவற்றை குணப்படுத்த முடியாது என நமது அரசாங்கம் சட்டம் கூட இயற்றியுள்ளது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940 (Drugs and Cosmetics Act, 1940)http://reghahealthcare.blogspot.in/2012/09/1940.html

அந்த பட்டியலில் புற்றுநோயும் மற்றும் இரத்தப் புற்றுநோயும் அடக்கம். எனவே ஆங்கில மருந்துகளை கொண்டு இந்த புற்றுநோய்களை குணப்படுத்தமுடியாது என்கிற உண்மையை அறிந்துகொள்ளுங்கள். இனியாவது சிந்தித்து செயல்படுங்கள் மக்களே.

Schedule J
8. Cancer and Benign tumour (Cysts to Cancer tumors in body)
உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்றுநோய் வரை
34. Leukaemia (Blood cancer)
இரத்தப் புற்றுநேரய்.
"கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்"
நம் உடலில் தேங்கிய கழிவுகளை நம் உடம்பானது எவ்வாறு வெளியேற்றும்?

# நம் சுவாச பாதையில் தேங்கும் கழிவுகளை தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல் மூலமாக வெளியேற்றும்.

# நம் இரைப்பையில்(வயிறு) தேங்கும் கழிவுகளை வாந்தி மூலமாகவும் எதிர்களிப்பின் மூலமாகவும் வெளியேற்றும்.

# நம் குடலில் தேங்கிய கழிவுகளை மலத்தின் மூலமாகவும் பேதி மூலமாகவும் வெளியேற்றும்.

# நமது ரத்தத்தில் தேங்கிய கழிவுகளை சிறுநீர் மூலமாகவும் வியர்வையின் மூலமாகவும் வெளியேற்றும்.

இவற்றை நாம் வியாதி என கருதி அதை தடுக்க முயற்சிக்கும்போது இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் எரித்துவிடும்.

காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தி தேவைப்படும். அப்போதுதான் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குதான் தலைவலி ஏற்படுகிறது.

யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வருவதில்லை.

யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு Typoid, Jaundice, Chicken Guniya, Coma (விபத்துக்களால் ஏற்ப்படும் Coma அல்ல), புற்றுநோய் (Cancer), ரத்த புற்றுநோய் (Blood Cancer) போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை.

இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.

மேலும் நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை புரிந்துகொண்டு பின்பற்றுங்கள் http://reghahealthcare.blogspot.in/…/08/to-live-healthy.html

எனவே நமது உடலின் அடிப்படையை கற்றுக்கொண்டு மருந்துக்களின்றி ஆரோக்யமாக வாழ்வோம்.

இப்படிக்கு,
விழிப்புணர்வு வினீத்

மேலும் பல மருத்துவ தகவல்களுக்கு:

கழிவின் தேக்கம் வியாதி

கழிவின் வெளியேற்றம் குணம்

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குபடுத்துவது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.

இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.

இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு கீழே உள்ள எண்ணுக்கோ / ஈமெயில்க்கோ தொடர்புகொள்ளலாம்.

Thanks & Regards,
Vineeth.S
+91 98409 80224
+91 97509 56398
vineeth3d@gmail.com