புற்றுநோய் அல்லது கான்சர்- வருமுன் காக்க

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:33 | Best Blogger Tips

எமது உடல் பல நுண்ணிய கலங்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.இது சிறுகற்கள் அடுக்கப்பட்டு கட்டப்பட்ட வீட்டைப்போலத்தான். ஒரு வீடு எழுவதற்கு கொத்தனார் ஒருவர் கல்லை அடுக்கி சாந்து பூச வேண்டும். ஆனால் உடலின் கலங்கள் உயிருள்ளவை. அவை இரண்டாய் இரண்டு நான்காய் என தாமாகவே பிரிந்து தம்மை அடுக்கி ஒழுங்கமைத்துக்கொள்கின்றன.இதனை நாம் வளர்ச்சி என்கிறோம். இந்தக்கலங்க... மேலும் பார்க்களின் பிரிவு ஒரு திட்டமிட்ட ஒழுங்கில் நிகழுகிறது. கலங்களின் பிரிவை ஒருங்கமைக்கிற இந்தப்பொறிமுறையை மீறி கலங்கள் தறிகெட்டதனமாக ஒழுங்கற்று பிரிந்து பெருகத்தொடங்குமானால் அது உடலின் சமநிலையை குலைத்துவிடும். உதாரணத்துக்கு குடலின் சுவர்கலங்கள் கட்டுமீறி பிரியத்தொடங்கினால் அது கட்டியாக வளர்கிறது. குடலை அடைக்கிறது.தொடர்ந்து வளர சூழ உள்ள பகுதிகளுக்கும் ஊடுருவுகிறது உடலின் போஷணையை உறிஞ்சியே இது அசுரத்தனமாக வளர்கிறது. இதனால் உடல் மெலிந்து விடுகிறது.

இதை புற்றுநோய் என்கிறோம். இது உடலின் மற்றைய பகுதிகளுக்கும் பரவிவிடுகிறது.

இப்படி புற்று நோய் மாற்றம் உடலில் நிகழ்வதை நாம் விழிப்பாக அவதானித்தால் கண்டுகொள்ளலாம்

சில குணங்குறிகள்

தோல் என்பு : மாறாத புண், கட்டிகள், உருமாறும் மறு,மச்சம்

குடல்: நீடித்த வாய்ப்புண; வயிற்றுப்புண்,பசியின்மைஇஉணவுப்பாதையில் அடைப்பு வயிற்றுவலி, நீடித்த மலச்சிக்கல் வயிற்றோட்டம், மலத்தோடு இரத்தம் வெளியேறல், வயிற்றில் வீக்கம்,உடல் மெலிதல் இப்படி உடற்பகுதிக்கேற்றாற்போல குணங்குறிகள் வேறுபடும்.

உங்கள் உடலின் சாதாரண தொழிற்பாடுகளில் ஏற்படுகிற பெரும்பாலும் படிபடிப்படியான மாற்றத்தை ( “ நான் சரியாக சாப்பிடுவதில்லை அல்லது எனக்கு கவலை அதுதான் இந்த மெலிவு”) அலட்சியப்படுத்தாதீர்கள்.

பலவகையான புற்றுநோய்கள் மனிதர்களை பாதிக்கின்றன. இரத்தப்புற்றுநோயிலிருந்து தோல் புற்று என பல வகை.

அனேகர் குடல் புற்றுநோயினால் பாதிப்படைந்து சாவடைகிறார்கள். யாருக்கு குடல் கான்சர் வரும் அபாயம் இருக்கிறது?

50 வயதுக்கு மேல் ஆண் பெண் இருபாலாருக்கும்
பரம்பரை அல்லது இரத்த உறவில் புற்றுநோய்
புகையிலைப்பாவனை –சுருட்டு சிகரட் பீடி பொயிலை போடுதல்
அதீத மதுப்பாவனை- கள்ளு சாராயம்.

அளவுமீறிய உடல் நிறை-தொப்பை
சோம்பேறித்தனமான வாழ்க்கை- உடல் உழைப்பு பயற்சியின்மை
ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் அழுத்தம் நிறைந்த வாழ்வு உடையவர்கள். (இவை உடலின் நோய்களோடு போராடும் ஆற்றலை குறைக்கிறது.)

புற்றுநோய் வருமுன் காக்க

வாழ்க்கை முறையை ஒழுங்காக்கிக் கொள்வதன் மூலம் இந்நோய் ஏற்படும் சாத்தியத்தைகுறைக்கலாம்

உணவில் அதிகளவில் பழங்களையும் மரக்கறிகளையம் தானியங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.இவற்றில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது.

கல்சியம் நிறைந்த கொழுப்பு நீக்கிய பால்,பாற்பொருட்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளல்.
ஒழுங்கான உடற்பயிற்சி—சுறுசுறுப்பான வாழ்க்கை,மன அமைதி.

புகையிலைப்பாவனை-சுருட்டு, சிகரட், பீடி அறவே தவிர்த்தல்.

கள்,சாராயம் கூடாது.

பரம்பரை அல்லது இரத்த உறவில் புற்றுநோய் உள்ளவர்கள் 50 வயதுக்கு மேல் காலத்துக்கு காலம் வைத்தியப்பரிசோதனை (cancer screening)செய்து கொள்ளவேண்டும்.

புற்றுநோய்ச்சிகிச்சை,நோயின் வகை, பரவல் அளவு,பாதிப்பின் நிலைகளுக்கேற்பவே தீர்மானிக்கப்படுகிறது.இவை சத்திரசிகிச்சை கதிர்வீச்சு மருந்து என்பவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.ஆரம்ப நிலையில் காணப்படுகிற கான்சருக்கான சிகிச்சைகள் நல்லபலனை அளிக்கின்றன.

அவர் இவரை விட நிறையவே புகைப்பார்.ஆனால் புற்றுநோய் இவருக்குத்தான் வந்திருக்கிறது எப்படி?

புற்றுநோய் வருவதற்கு... மேலும் பார்க்க காரணமாக ஒரு பரம்பரை அலகு இருக்கிறது என்கிறார்கள். இது தொழிற்படாத நிலையில் இருக்கும்வரை சிக்கலில்லை.இது எமது செயற்பாடுகளினால் அல்லது சூழல் மாற்றங்களால் (புகைத்தல் கதிர்வீச்சு போன்றவற்றினால் )தூண்டப்பட்டால் கலங்கள் கட்டுப்பாடின்றி பெருகி கான்சர் உருவாகலாம். சிலரில் இம்மாற்றம் இலகுவாக நிகழக்கூடிய தன்மை உள்ளது.அதாவது கான்சர் உள்ளே நுழைவதற்கான தடைக்கதவில் சிலரில் ஒரு பூட்டுத்தான்;;. மற்றவர்களில் பல பூட்டுக்கள். பூட்டு உடைய சிலருக்கு கொஞ்சம் புகைத்தால் போதுமானதாயிருக்கும்.


பேசும் மாத்திரை.!! புற்று நோயை வீட்டிலேயே சோதிக்க ஸ்கேனர்!! புதிய கண்டுபிடிப்புகள்.


இந்த மாத்திரையை டாக்டர் எப்போ சாப்பிடச் சொன்னார்? ச்சே... மறந்து போச்சே... இப்படிச் சொல்லும் நோயாளிகள் பலர் இருக்கிறார்கள். மாத்திரையை சாப்பிட மறப்பவர்களும் இருக்கிறார்கள்.

இதுபோல நேரம் மாற்றி மாத்திரை சாப்பிடுவதாலும், மாத்திரைகளை மாற்றி சாப்பிட்டு விடுவதாலும் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. வியாதிகள் குணமாகாது, புதிய பாதிப்பு ஏற்படுவது, கூடுதல் செலவு, மருத்துவர்களுக்கும் தொல்லை... என பாதிப்புகளை அடுக்கி கொண்டே செல்லலாம்

இந்த சிக்கலைத் தடுக்க புளோரிடா பல்கலைக்கழக மருத்துவக் குழு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. அதுதான் பேசும் மாத்திரை!

இந்த மாத்திரையை நோயாளி சாப்பிடுவதற்காக வாய் அருகே கொண்டு சென்றால், என்னை இப்போது சாப்பிடக்கூடாது. நான் ராத்திரி சாப்பிட வேண்டிய மாத்திரை என்று கூறிவிடும். இதற்காக விசேஷமாக இந்த மாத்திரை வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரு அடுக்காய் இருக்கும் மாத்திரையில் மெல்லிய ஆண்டனா இருக்கும். (இது செரித்துவிடும் தன்மை கொண்டதுதான். எனவே கவலை வேண்டாம்).

மாத்திரையுடன் வழங்கப்படும் மற்றொரு கருவியில் மாத்திரை பற்றிய பதிவுகள் இருக்கும். வேளை மாற்றி சாப்பிட்டால் எச்சரிக்கும்.

இதனால் சரியான நேரத்தில், சரியான மாத்திரையை சாப்பிட்டு எளிதில் நலமடயலாம். மாத்திரைக்கான கருவியை செல்போன் மற்றும் கணினியுடன் இணைக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

புற்று நோயை வீட்டிலேயே சோதிக்கலாம்

புற்று நோய் மருத்துவ உலகிற்கு சவாலான கொடிய வியாதி. இதன் அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம். இந்த கொடிய வியாதியையும் எளிமையாக பரிசோதிக்க இந்தியர் ஒருவர் நவீன ஸ்கேனரை உருவாக்கி உள்ளார்.

ரத்தப் பரிசோதனை மூலமே எந்த வகையான புற்றுநோயையும் கண்டு பிடித்து விடும் அந்த நவீன ஸ்கேனர். மருத்துவர்களிடம்கூட செல்ல வேண்டாம். நீங்களே பரிசோதித்துப் பார்க்கும் வகையில் எளிமையானது, விலை குறைவானது இந்த ஸ்கேனர்.

அசாம் மாநிலத்திலுள்ள வடகிழக்கு குன்றுகள் பல்கலைக்கழக (என்.இ.எச்.யு) பேராசிரியர் ஆர்.என்.சாரன் இந்த கருவியை வடிவமைத்துள்ளார். பயோ மாலிகுலர் மார்க்கர் எனப்படும் இந்தக் கருவி கையாளுவதற்கு எளிமையானது. தனிநபர்கூட பரிசோதித்துப் பார்க்கலாம். சில துளிகள் ரத்தம் கொடுத்தால் போதும். சிறிது நேரத்தில் பல்வேறு தகவல்களை அட்டவணைப்படுத்தி காட்டிவிடும்.

கருப்பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை போன்ற சோதனைகளையும் செய்து கொள்ளலாம். இதற்கு 100 முதல் 150 ரூபாய்தான் செலவாகும். 20 ஆண்டுகால முயற்சிக்குப் பிறகு சாரன் இதை உருவாக்கி இருக்கிறார்.

இந்தியர்களின் அடிப்படை நிலையை உணர்ந்து கொண்டு இதை வடிவமைத்ததாக அவர் பெருமிதம் கொள்கிறார். எளிமையான இந்த ஸ்கேனர் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பை பெறும். வருங்காலத்தில் அதிக எண்ணிக்கையில் புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.


புற்று நோயை போக்கும் கோதுமை புல் சாறு

மனிதன் இயற்கையை விட்டு விலக விலக பாதிப்புகளும், நோய்களும் தவிர்க்க முடியாத தொடர்கதை தான். குறிப்பாக உணவு - உற்பத்தி முறை, பாதுகாக்கும் முறை, தயாரிக்கும் முறை, தவிர்க்க ,உட்கொள்ள வேண்டிய உணவு, அதன் அளவு, பயிற்சி, கிரியை என சில சாதாரண காரியங்களில் நாம் கவனம் செலுத்தினாலே 75... மேலும் பார்க்க% நோய்களை நாம் தவிர்க்க முடியும்.

இவைகளில் நாம் கவனம் செலுத்தாமல் போனதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நோய் வர காரணமாகிறோம்.இவைகளில் அதிகமாக தாக்குவதும் அதிக பணச் செலவு வைப்பதும் இரு நோய்கள்.

1. இருதய நோய்
2. புற்று நோய்.

இன்றைய வேளாண்மையில் அதிக இரசாயன உரம், களை, பூச்சி கொல்லி மருந்து உபயோகித்ததின் விளைவுகளை ஓரளவு நாம் மருத்துவமனை நோக்கி வரும் கிராம மக்களின் தொகையை கொண்டு உணர முடியும். தங்களின் பெரும் பகுதி சேமிப்பை தற்சமயம் மருத்துவமனைகளில் மேற்கண்ட நோய்களுக்காக செலவிடுகிறார்கள். நகர மக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஆனால் ஆரம்ப நிலைகளில் தடுக்கவும், பின் நிலைகளில் தாக்கத்தை குறைக்கவும் கோதுமை புல் சாறு சிறந்த நிவாரணி என நிருபிக்கப்பட்டுள்ளது.

இதனை பச்சை ரத்தம் என அழைக்கிறார்கள். எளிதாக இதனை நாமே வளர்த்து தயாரிக்க முடியும்.10 தொட்டிகளில் இயற்கை எரு இட்டு கோதுமை மணிகளை (70-100 கிராம்) தினம் ஒரு தொட்டி வீதம் விதைக்க பத்தாவது நாளில் முதல் நாளுக்குரிய புல் கிடைத்து விடும். இதனை கொண்டு சாறு பிழிந்து வெறும் வயிற்றில் பருக வேண்டும். அறுவடை செய்த தொட்டியில் திரும்ப விதைக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யவேண்டும் அவ்வளவே. தற்சமயம் பெருநகர அங்காடிகளில் கோதுமை புல் கிடைக்கிறது.

இதனை தவிர வெண்நுணா (Morinda citrifolia ) என்ற தாவரத்தின்பழச்சாறும் மிகவும் சிறந்தது. இதனை நோனி (Noni) என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள். இந்திய தாவரம். நாம் இதனை மறந்து விட்டோம். பசிபிக் பெருங்கடல் அருகேயுள்ள நாடுகள் சிறப்பாக வியாபாரம் செய்கின்றன.


ப‌ப்பா‌ளி‌ப் பழ‌த்‌தி‌‌ன் இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய்‌களு‌க்கான எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பதாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

பு‌ற்றுநோ‌யா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திகமாக உ‌ள்ளது. அதே சமய‌ம் நாளு‌க்கு நா‌ள் பு‌ற்று நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே போ‌கிறது.

மரு‌த்துவ‌ர்களு‌க்கு ... மேலும் பார்க்கசவாலான ‌வியா‌திக‌ளி‌ல் பு‌ற்றுநோயு‌ம் ஒ‌ன்று. இத‌ற்கு சாதாரண ப‌ப்பா‌ளி இலை‌ச் சா‌ற்‌றி‌ல் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்து இரு‌ப்பது த‌ற்போது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ உ‌ள்ளது.

ப‌ப்பா‌ளி இலை‌யி‌ல் பு‌ற்றுநோ‌ய் வைர‌ஸ்களை எ‌தி‌ர்‌க்கு‌ம் டி.எ‌ச்.1 டை‌ப் சைடோ‌கி‌ன்‌ஸ் எ‌ன்னு‌ம் மூல‌க்கூறுக‌ள் உ‌ள்ளன.

இது நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தியை ஊ‌க்கு‌வி‌த்து பு‌ற்று நோ‌‌யி‌ன் ‌தீ‌விர‌த்தை க‌ட்டு‌க்கு‌ள் வை‌க்‌கிறது. புளோ‌ரிடா ப‌ல்கலை‌க்கழக ஆ‌ய்வு‌க் குழு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள க‌ட்டுரை‌யி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது