ஆதபசுஷ்கம் அல்லது மேஜிக் வடாம் (வடகம்)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:33 | Best Blogger Tips

ஆதபசுஷ்கம் அல்லது மேஜிக் வடாம் (வடகம்) 

இதை அப்பிடியே பொரிச்சோ / வறுத்தோ சாப்டக்கூடாது. கூட்டு அல்லது தால் செய்யும் போது தனியாக மிளகாய்/காரப் பொடி  போடாமல், இந்த வடாத்தை  தாளிக்கும் போது  உதிர்த்துப் போட்டுக் கொண்டால் சுவை அதிகம். உடல் நலத்துக்கும் நல்லது. இதில் கொடுத்துள்ள அளவுக்கு குறைந்தது 50 உருண்டைகள் (பெருநெல்லிக்காய் அளவு) வரும். 

சப்பாத்திக்குச் செய்யும் கூட்டு, தால் ஆகியவற்றில் போட்டுக் கொள்ளலாம். பிரசவமாகி ஆறுமாதம் ஆனதும், உருளைக்கிழங்கு போன்று வேரில் விளையும் கறிகாய்களோடு சமைக்கும் போது சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை உண்டாகாது.

அனேக பயன்கள். பிரசவ காலம், பிரசவத்துக்கு பின், தாய்பாலூட்டும் காலம் என்று மட்டும் இல்லாமல் அனைவருமே, ஆண் பெண் இருபாலாருமே சாதாரணமாக பயன் படுத்தலாம்.


கருப்பு உளுந்து - அரைக் கிலோ
வரமிளகாய் - 20
மிளகு - 4 டேபிள் ஸ்பூன்கள்
கிராம்பு - 8
ஜாதிக்காய் - 5
பெருங்காயம் - 3 டேபிள் ஸ்பூன்
இலவங்கபட்டை - 4
பெரிய ஏலக்காய் - 30
மேஜிக் பவுடர் - 8 டேபிள் ஸ்பூன்கள்
பூசணிக்காய் - 5-6 பத்தைகள்
சுரைக்காய் - 1 
இஞ்சி - உள்ளங்கை நீளத்துக்கு 5 துண்டுகள்
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லி தழை - இரண்டு கைப்பிடி

கருப்பு உளுந்தை தோல் நீக்காமல் ஊற வைத்து கொள்ளுங்கள்.

வரமிளகாய், ஜாதிக்காய் ஆகியவற்றைத் தனித்தனியாக நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள்.

கிராம்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றோடு பூசணிப்பத்தைகள் / சுரைக்காய் தோல் சீவி,  விதை நீக்காமல், விதை நீக்காமல், அப்படியே சேர்த்து, வரமிளகாய், ஜாதிக்காய் பொடியோடு சேர்த்துக் கொண்டு, ஊறிய கருப்பு பாதி அரைபட்டதும், இந்தப் பொடிகளைச் சேர்த்து மையாக கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இவற்றை வடகம் போல நெல்லிக்காய் அளவுக்கு உருட்டி வைத்து நல்ல வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதம் வரை கெடாது. இருந்தாலும் ஃப்ரீசரில் வைத்துக் கொண்டால் நல்லது.இதை அப்பிடியே பொரிச்சோ / வறுத்தோ சாப்டக்கூடாது. கூட்டு அல்லது தால் செய்யும் போது தனியாக மிளகாய்/காரப் பொடி போடாமல், இந்த வடாத்தை தாளிக்கும் போது உதிர்த்துப் போட்டுக் கொண்டால் சுவை அதிகம். உடல் நலத்துக்கும் நல்லது. இதில் கொடுத்துள்ள அளவுக்கு குறைந்தது 50 உருண்டைகள் (பெருநெல்லிக்காய் அளவு) வரும்.

சப்பாத்திக்குச் செய்யும் கூட்டு, தால் ஆகியவற்றில் போட்டுக் கொள்ளலாம். பிரசவமாகி ஆறுமாதம் ஆனதும், உருளைக்கிழங்கு போன்று வேரில் விளையும் கறிகாய்களோடு சமைக்கும் போது சேர்த்துக் கொண்டால் வாயுத் தொல்லை உண்டாகாது.

அனேக பயன்கள். பிரசவ காலம், பிரசவத்துக்கு பின், தாய்பாலூட்டும் காலம் என்று மட்டும் இல்லாமல் அனைவருமே, ஆண் பெண் இருபாலாருமே சாதாரணமாக பயன் படுத்தலாம்.


கருப்பு உளுந்து - அரைக் கிலோ
வரமிளகாய் - 20
மிளகு - 4 டேபிள் ஸ்பூன்கள்
கிராம்பு - 8
ஜாதிக்காய் - 5
பெருங்காயம் - 3 டேபிள் ஸ்பூன்
இலவங்கபட்டை - 4
பெரிய ஏலக்காய் - 30
மேஜிக் பவுடர் - 8 டேபிள் ஸ்பூன்கள்
பூசணிக்காய் - 5-6 பத்தைகள்
சுரைக்காய் - 1
இஞ்சி - உள்ளங்கை நீளத்துக்கு 5 துண்டுகள்
பச்சை மிளகாய் - 10
கொத்தமல்லி தழை - இரண்டு கைப்பிடி


கருப்பு உளுந்தை தோல் நீக்காமல் ஊற வைத்து கொள்ளுங்கள்.

வரமிளகாய், ஜாதிக்காய் ஆகியவற்றைத் தனித்தனியாக நன்றாக பொடித்துக் கொள்ளுங்கள்.

கிராம்பு, பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றோடு பூசணிப்பத்தைகள் / சுரைக்காய் தோல் சீவி, விதை நீக்காமல், விதை நீக்காமல், அப்படியே சேர்த்து, வரமிளகாய், ஜாதிக்காய் பொடியோடு சேர்த்துக் கொண்டு, ஊறிய கருப்பு பாதி அரைபட்டதும், இந்தப் பொடிகளைச் சேர்த்து மையாக கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இவற்றை வடகம் போல நெல்லிக்காய் அளவுக்கு உருட்டி வைத்து நல்ல வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதம் வரை கெடாது. இருந்தாலும் ஃப்ரீசரில் வைத்துக் கொண்டால் நல்லது.
Via ஆரோக்கியமான வாழ்வு