உலகில் சில நாட்டு மக்களின் வித்தியாசமான

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:20 | Best Blogger Tips
சம்பிரதாயங்கள்.
..............................
.
உலக நாட்டு மக்கள் அநாகரிகமாகக் கருதும் சில பழக்க

வழக்கங்கள்.

* ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

* கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

* ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

* சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

* அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

* தாய்லாந்தில் தலையில் கை வைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

*நம் தமிழ்நாட்டில் பொதுவாக யாராவது வெளியே போகும்போது,

"எங்கே போகின்றீர்கள்..?

என்று கேட்பது அபச குணமாக கருதுகின்றனர்.


உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி