தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும் பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக
 அச்சத்துடனே எதிர்கொள்கின்ற னர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் 
கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம்
 ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் 
செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றி யும், உடலமைப்பு பற்றியும் கவலைப் 
படுவதில்லை.
ஹார்மோன்
 சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ
 கால தழும்புகளும், இதனால் பெண் களுக்கு அதீத கவலையும் மன அழுத்தமும் ஏற்படுகின்றன. குழந் தையை 
பாதிக்காத வகையில் தாய்மார்கள் தங்களின் உடல் 
நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்கின்றனர் மகப் பேறு மருத்துவர்க ள்.
கர்ப்பமாக
 இருக்கும் போது விரிவடை யும் தசைகள் பிரசவத்திற்குப் பின்னர் 
சுருங்குகின்றன. ஒரு பெண்ணின் தாய்மையை உணர்த்துவதே இந்த தழும்புகள்தான். 
பெண்களுக்கு
 வயிற்றுப் பகுதியிலும், தோல், தொடை பகுதிக ளிலும் தழும்புகள் 
ஏற்படுகின்றன. கர்பமாக இருக்கும் போதே அரிக்கத் தொடங்கு ம். அந்த இடத்தில் 
உடனே கைகளால் அரிப்ப தைவிட மென்மையான துணிகளை க் கொண்டு அந்த இடத்தை 
ஒத்தடம் தரலாம். மேலும் பாதாம் எண் ணெய், கிரீம் போன்ற வைகளை அரிக்கும் 
இடத்தில் தடவினால் தழும்புகள் ஏற்படாது.
கருவளையக் கண்கள்
பச்சிளம்
 குழந்தையை பாதுகாக்க வேண்டும் என்ற கவனத்தில் தாயின் தூக்கம் பறிபோகிறது. 
இதனால் கண்களைச் சுற்றி கரு வளையம் போன்றவை ஏற்படுகின்றன. இது அதிக சோர்வை 
ஏற் படுத்துகின்றன. எனவே வைட்டமின் கே பற்றாக் குறையினால் கண்களைச் சுற்றி 
கருவளையம் ஏற்படுகிறது. எனவே சத்தான உணவுகளையும், சீரான உறக்கத்தையும் 
மேற்கொள்ளவேண்டும் .
கூந்தல் உதிர்வு
வறண்ட சருமம்
கர்பகாலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் உடல்
நீர்ச்சத்து
 குறைவினால் பெண்க ளுக்கு கால்களில் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. தினசரி 
காலை, மாலை நேரங்களில் பித்தவெடிப் பை போக்கும் கற்களைக் கொண் டு தேய்க்க 
இறந்த செல்கள் உதிர்ந்து விடும். வாஸலின் பூசி வர பித்தவெடிப்பு 
குணமடையும்.
நன்றி விதை2விருட்சம் இணையம்
