தெரிந்து கொள்ள சில உண்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:55 | Best Blogger Tips
கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.

********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற் கரையிலிருந்து மூன்று கடல் மைல். அதாவது 6080 அடி தூரமாகும்.

********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர் தான். அதனால் தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல' என்கிறோம்.

********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி புரிய வேண்டியுள்ளது.

********
'மஞ்சள் புரட்சி' என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.

********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.

********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.

********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியா வுடன் இணைந்திருந்தது. 1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.

********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.

********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.

********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே எலும்புகள்.

********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு. நாடு- நைஜீரியா. மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.