👬உடலின் மொழி👫

மணக்கால் அய்யம்பேட்டை | 10:53 AM | Best Blogger Tips
Image result for உடலின் மொழி

1. உடல் - உணவை கேட்கும் மொழி - பசி
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - தாகம்
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - சோர்வு, தலைவலி
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - தும்மல், சளி, இருமல்.
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - காய்ச்சல்
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - வாய் கசப்பு மற்றும் பசியின்மை
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - உடல் அசதி
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வாந்தி
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - பேதி
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - வியர்வை
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - உறக்கம்
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - சிறுநீர் கழித்தல்
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - மலம் கழித்தல்
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம். உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவும், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
நம் உடலை நேசிப்போம்.....

நன்றி இணையம்


தெரித்துக் கொள்வோம்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:34 AM | Best Blogger Tips
Image result for natural scene
✍🏽கடலில் பெய்யும் மழை பயனற்றது,

✍🏽பகலி ல் எரியும் தீபம் பயனற்றது,

✍🏽வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது,


✍🏽நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது.


✍🏽அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.


✍🏽வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் நல்லது.


✍🏽 பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது.


✍🏽 ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளவர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.


✍🏽பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது,



✍🏽 சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது,



✍🏽பெரிய மலை சிறிய உளியால் வெட்டி எடுக்கப்படுகிறது.



✍🏽பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.



✍🏽வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது.


✍🏽அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.


✍🏽சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது.


✍🏽யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள்,


குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள்.
கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள்.


ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்


✍🏽எல்லாம் காரியங்களிலும் நீங்கள் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர்.


✍🏽வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள்.


✍🏽காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.


✍🏽அறியாமையை விட கொடிய எதிரி இல்லை.


✍🏽கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லவே இல்லை....🌹


🙌🏾இருபது ரூவா பிச்சைக்காரனுக்கு போட யோசிக்கிற நாம அதையே ஹோட்டல்ல சர்வருக்கு டிப்ஸா கொடுக்குறோம்...



⌚ஜிம்முல ஒரு நாள் பூராம் ஒர்க் அவுட் பண்ண சளைக்காத நாம... வீட்ல மனைவிக்கு உதவி செய்ய சலிச்சுக்கிறோம்...

🙏🏻கடவுளை பிரார்த்திக்க ஒரு மூணு நிமிசத்தை ஒதுக்க சங்கடப்படும் நாம மூணு மணி நேரம் உட்கார்ந்து விளங்காத படத்தை பார்த்துட்டு வரோம்...

💧காதலர் தினத்துக்காக ஒரு வருசமா காத்திருக்கிற நாம அன்னையர் தினத்தை மறந்திடறோம்...

👍🏻ரோட்டோரம் உட்கார்ந்திருக்கும் ஏழை குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு வாங்கி தர நினைக்காத நாம அதையே ஓவியமா வரைஞ்சா லட்ச ரூவா கொடுத்துக்கூட வாங்கி வீட்ல மாட்டிக்கிறோம்...

👍🏻ஜோக்கை எல்லாம் பார்வேர்ட் பண்ணுற நாம இந்த மாதிரி மெசஜை கண்டும் காணாமல் விட்டுடுறோம்...அதில் ஒளிந்து இருக்கும் வாழ்க்கையின் சாரம் புரியாமல்




நன்றி இணையம்

பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:03 AM | Best Blogger Tips
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்

முதலில் நிதானமாக படியுங்கள்!
குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?
யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து
கீழ் நோக்கி செயல்படக் கூடாது.
பிறப்புறுப்பு பகுதியான "மூலாதாரத்தில்"செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது
உடலில் கீழ் நோக்கி பயணிக்கும்.
இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும்.இதை தவிர்த்து தலைப்பகுதியான "துரியனில்" செயல்கள் (தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன்
காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்..
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின்
கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு.
அப்படி கருப்பை செயல்படும் சமயம்
அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையைவெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும்.
கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா?
கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது?
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை.
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை
செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?
சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த
பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த
கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள்.இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்"செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை
Image result for பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும்
அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். .இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை
தரிசனம் செய்யலாம். ஆனால்
இருமுடிகட்டாமல்பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை.
ஐயப்பனைவிட அந்த படிகள்
அவ்வளவு உயர்ந்தவை..இவ்வாறு
சபரிமலையில் பின்பற்றும் அனேக
விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு.
இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என சில ஆட்கள் அறியாமையை
வளர்க்கிறார்கள்.
கேரளத்தில் "மன்னார்சாலை"
என்ற பாம்பு கோவில் உண்டு. இங்கே பெண் தான் பூஜை செய்ய முடியும். மேலும் ஆண்களுக்கு அனைத்து பகுதியிலும் அனுமதி இல்லை. காரணம் அக்கோவில் "அபாணா" என்ற ப்ராணனுக்கானது.அதனால் பெண்களே தாய்மை என்ற உருவாக்கும் திறன் கொண்டவர்கள்
என்பதால் இக்கோவிலின் உரிமை அவர்களிடமே உள்ளது.
இப்படியாக ஒவ்வொரு கோவிலின்
சக்திக்கு ஏற்பவே நடைமுறைகளும்
ஏற்படுத்தப்படுகிறது.
இதை விடுத்து எல்லோருக்கும் சம உரிமை வேண்டும் என உளருவது முட்டாள்தனம்.நன்றி