
வெண்ணெயாக மாறும் அதிசயம்! - சிவகங்கா கவிகங்காதீஸ்வரர் கோவில் 🙏
இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட இறைவனின் திருவிளையாடல்கள் இன்றும் சில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசய தலம் தான் கர்நாடக மாநிலம், சிவகங்காவில் உள்ள கவிகங்காதீஸ்வரர் கோவில்.
📍 எங்கே உள்ளது?
பெங்களூருவில் இருந்து சுமார் 54 கிலோமீட்டர் தொலைவில், தும்கூர் மாவட்டத்தில் உள்ள சிவகங்கா கிராமத்தில் ஒரு மலைக்குகையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
✨ என்ன அதிசயம்?
சாதாரணமாக வெண்ணெயை உருக்கினால் தான் நெய் கிடைக்கும். ஆனால், இங்கே அபிஷேகம் செய்யப்படும் நெய், மீண்டும் வெண்ணெயாக மாறும் அதிசயம் நிகழ்கிறது! 😲
இங்குள்ள 5 அடி உயர லிங்கத்திற்கு பக்தர்கள் நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.
அர்ச்சகர் மந்திரங்கள் ஓதி நெய்யால் அபிஷேகம் செய்தவுடன், அந்த நெய் திடமாகி வெண்ணெய் வடிவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இந்த வெண்ணெய் எத்தனை நாட்கள் ஆனாலும் உருகுவதில்லை என்பது கூடுதல் ஆச்சரியம்!
🩺 தீராத நோய் தீர்க்கும் மருந்து:
இந்த வெண்ணெய் பிரசாதம் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏

